TENTH SENSE
Yoga, Muthira, Naturopathic Health Consulting & Home Remedies
*ஒரு முஸ்லிம் எழுத்தாளர் இந்தக் கட்டுரையின் மூலம் இந்து சமூகத்திற்கு சில உண்மைகளை உணர்த்தியுள்ளார்.*
●
*இது உண்மையிலே
சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.*
●
*உங்கள் திருமணமான பெண்கள் புடவை அணிவதை நிறுத்தி விட்டார்கள். அவர்களை தடுத்தது யார்?*
●
*உங்கள் நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் உங்கள் அடையாளமாக இருந்தது. நீங்கள் வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதுகிறீர்கள். ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் திலகம் அணிவதை நிறுத்தி விட்டது மட்டுமல்ல, உங்கள் பெண்களும் ஃபேஷன் மற்றும் நவீனத்துவம் என்ற பெயரில் நெற்றியில் திலகம் பூசுவதை விட்டுவிட்டீர்கள்.*
●
*உங்கள் பாரம்பரிய விழாக்களை மறந்துவிட்டீர்கள்*.
●
*எங்கள் சமூகத்தில், ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டால், அவர் தனது தந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு, இபாதாத் / நமாஸ் மற்றும் இபாதாத் / நமாஸை தனது வாழ்நாள் கடமையாகக் கருதுகிறார்.*
●
*ஆனால் இந்துக்கள் பெரும்பாலோர் கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக் கூட விட்டுவிட்டீர்கள். ஒரு சிலர் கோயிலுக்கு சென்றாலும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் சுற்றுலா போல செல்கிறீர்கள். அதுவும் பெரும்பாலானோர் பகவானிடம் இருந்து ஏதாவது ஒன்றை விரும்பும்போதோ அல்லது துன்பத்தில் இருக்கும்போதோ மட்டுமே கோயிலுக்கு செல்கின்றனர்.*
●
*உங்கள் குழந்தைகள் கோவிலுக்குச் செல்வதற்கான சரியான காரணத்தையும், கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வழிபடுவது அவர்களின் கடமை என்பதையும் அவர்களுக்கு நீங்கள் சொல்கிக்கொடுத்து ஆன்மீகத்தை அவர்களுக்கு உணர்த்தி வழி நடத்த தவறி வருகிறீர்கள்.*
●
*உங்கள் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் படித்த பிறகு ஆங்கில கவிதைகள் சொல்வதில் நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்கள்.*
*ஆனால் உங்கள் பிள்ளைகள் ஆன்மீக ஸ்லோகங்களை அறிந்து கொள்ளாததைப் பற்றி கவலை கொள்வதில்லை*
●
*எங்கள் வீடுகளில் ஒரு குழந்தை பேசத் தொடங்கும் போது, பெரியவர்களுக்கு "சலாம்" சொல்லக் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் நீங்கள் வணக்கம், நமஸ்காரம் மற்றும் பிரணாமத்தை ஹலோ, ஹாய், டாடா, பைபை, ஸீயூ என்று மாற்றிவிட்டீர்கள்.*
●
*எங்கள் குழந்தைகளும் கான்வென்ட்டில் இருந்து திரும்பிய பிறகு, உருது, அரபு மொழியைக் கற்று, மதப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்குகிறார்கள். உங்கள் பிள்ளைகள் ராமாயணம், கீதை, திருவாசகம் போன்ற ஆன்மீக நூல்களை நீங்கள் படிக்க வைப்பதில்லை*.
●
*நாகரீகம், வரலாறு, மரபுகள், பாரம்பரியம் போன்ற அனைத்தையும் நீங்கள் அதிகம் கொண்டிருந்தீர்கள். குருட்டு நவீனத்துவம் என்ற பெயரில் அனைத்தையும் தியாகம் செய்து வருகிறீர்கள்.*
●
*ஆனால் நாங்கள் எங்களுக்கான மரபுகளையும், பாரம்பரியத்தையும் மறக்காமல் பின்பற்றுகிறோம். அதுதான் உங்களுகுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். உங்கள் வேர்களுடனான உறவை முறித்துவிட்டீர்கள். ஆனால் நாங்கள் எங்கள் வேர்களை நேற்று அல்லது இப்போது அல்லது வரும் நாட்களிலும் விட்டுவிடவே விரும்பவில்லை.*
●
*நீங்கள் திலகம், யக்ஞோபவீதம், சிகை அணிவதைத் தவிர்க்கிறீர்கள். உங்கள் பெண்கள் திலகம், வளையல்கள் மற்றும் மங்களசூத்திரம் அணிவதற்கு வெட்கப்படுகின்றார்கள். நீங்கள் அவற்றைத் தேவையற்றதாகக் கருதுகிறீர்கள் மற்றும் உங்கள் அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டுவதில் சங்கடமாக உணர்கிறீர்கள்.*
●
*நவீனத்துவம் என்ற பெயரில், அதிகாலை 4 - 5 மணிக்கு எழும் பழக்கத்தை விட்டுவிட்டு, உங்கள் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள், மரபுகள், சடங்குகள் செய்ய தவறிவிட்டீர்கள்.*
●
*உங்கள் மொழி, உங்கள் பாரம்பரிய ஆடை அணிகலன்கள் ஆகியவற்றைப் பின்தங்கிய நிலை என்று நினைத்துக் கொண்டு விட்டீர்கள்.*
●
*ஒரு சமூகம் தன் அடையாளங்களைப் பாதுகாக்க இயற்கையாகவே விழிப்புடன் இருக்க வேண்டும் ஆனால் இப்போது துரதிர்ஷ்டவசமாக உங்கள் சமூகத்தின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறீர்கள்.*
●
*உங்கள் நாகரீகம், கலாச்சாரம் அழிந்துவிடுமோ என்ற பயம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுக்கான உண்மையான காரணங்கள் என்னவென்று சிந்தியுங்கள்*.
●
*உண்மையான பிரச்சனை என்னவென்றால், உங்கள் சமூகம் விழித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் நீங்களே உங்களை நடைமுறைக்கு உதாரணமாகக் காட்டவில்லை. உங்கள் புகழ்பெற்ற மரபுகளில் வேரூன்றியவராக மற்றவர்கள் உங்களைப் பார்ப்பதில்லை. எனவே சமூகம் மட்டுமல்ல, உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களும் உங்கள் மதப் பேச்சுகளைக் கேட்பதில்லை.*
●
*நாங்கள் யோகாசனங்களுடன் ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் வாசிப்போம். தொப்பி, உடை போன்றவற்றின் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதில் இப்போதும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்*
●
*பல தசாப்தங்களாக உங்கள் இந்து அடையாளத்தை அழிப்பதில் நீங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.*
*உங்கள் பாரம்பரியத்தை நிலைநிறுத்த நீங்கள் தவறிவிட்டீர்கள்*.
●
*மற்ற சமூகங்களைக் கண்டு கலங்குவதற்குப் பதிலாக, உங்கள் மரபுகளில் நம்பிக்கையைப் பேணுவது எப்படி, அவற்றில் பெருமை கொள்வது எப்படி, விழிப்புடன் இருப்பதன் மூலம் பாரம்பர்யத்தை பாதுகாப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம்.*
●
*முதலில் உங்கள் நாகரீக அடையாளம் மற்றும் அதன் சின்னங்களை அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்ள உங்கள் சமூக கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ள விழிப்புணர்வை உருவாக்குங்கள்.*
●
*உங்களையும் உங்கள் சமூகத்தையும் புத்திசாலிகள் என்று நீங்கள் கருதினால், உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அதன் இருப்பை வெளிப்படுத்தி பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், உங்கள் தர்மத்தையும் காப்பாற்றி வாழ பழகிக் கொள்ளுங்கள்.*
●
*வளர்க பாரம்பரியம். எந்த மதமாக இருந்தாலும் மதப் பண்பாடுகளைப் பின்பற்றி அதன் வழி நடப்பதே நல்லது. காரணம் மதக்கோட்பாடுகள் அனைத்துமே மனிதனை நெறிமுறைப் படுத்தவே முன்னோர்களால் வகுக்கப்பட்டன.*
*சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்தவன் மனிதன்* மட்டுமே..... வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்...
*நாமும் நமது குழந்தைகள் அனைவரையும் கோவில் சென்று வழிபாட்டு முறையை கற்றுக்கொள்ள. செய்யவேண்டும். இந்து கலாச்சாரம் - நமது பாரம்பர்ய பண்பாடுகளை கற்றுக் கொடுப்போம்.
மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் சார்ந்த புற்று நோய் என்னும் பிரச்சினை வராது!!🐝🐝
புற்று நோயை தடுப்பதில் குடல் சுத்தமும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது
அந்த காலத்தில் மாதமொருமுறை விளக்கெண்ணெயை குடித்து நச்சுக்களை வெளியேற்றினார்கள்.
இதனால் குடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் , ஆற்றல் மிக்கதாகவும் இருந்தது.
ஆனால் இன்றைய நாட்களில் குடல்களில் நச்சுக்கள் தேங்கி அதிகப்படியான ஃப்ரீ ரேடிகள்ஸ் உற்பத்தியாகி அவை சாதாரண செல்களை தாக்கி புற்று நோயை வரவழைக்கின்றன.
இதற்கு மிக முக்கிய காரணம் நாம் உண்ணும் கண்ட ரசாயன மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள்தான்.
அவற்றை நீங்கள் களைந்துவிட்டால் புற்று நோய் , அப்பண்டிஸ் போன்ற நோய்களை தடுக்கலாம்.
அவற்றை நீக்குவது பற்றிதான்இந்த கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்.
கற்றாழை மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அற்புத மூலிகை என சித்தர்கள் விவரிக்கிறார்கள்.
இதனை சாப்பிடும் முறை மிக முக்கியமானது .
அதன் இலையை கிழித்து உள்ளிருக்கும் ஜெல்லை அப்படியே சாப்பிடக் கூடாது.
அதன் பச்சை நிறம் போக, நன்றாக கழுவி அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.
கற்றாழையை பயன்படுத்தி எப்படி உங்கள் குடலை சுத்தப்படுத்தலாம் என பார்க்கலாம்.
இந்த ஜூஸை மாதம் ஒரு முறையென தொடர்ந்து 1வாரம் குடித்தால் உங்கள் குடல்கள் நன்றாக செயல்படும்.
இந்த காலத்தில் அதிகம் பயமுறுத்தும் புற்று நோய் உங்களை அண்டாது.
#தேவையானவை :🌳
கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
நீர் - 1/2 கப்
கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி அதனுடன் நீர் மற்றும் தேனை கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
இதனை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடிக்க வேண்டும்.
இது நச்சுக்களை மிக சுத்தமக வெளியேற்றுகிறது.
அதோடு அதிலுள்ள டயடிக் நார்ச்சத்துக்கள் வயிற்றிலுள்ள பாதிப்படைந்த செல்களுக்கி நிவாரணம் அளிக்கிறது.🌳
#தேவையானவை :
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு வடிக்கட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் 8- 10 நாட்கள் குடிக்க வேண்டும்.
இந்த கலவையிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் குடல்களில் தங்கியிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து புற்று நோய் வராமல் காக்கும்.🌳
#தேவையானவை :
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழம் - 1
நீர் - 1 அப்
இஞ்சி - 1 டீஸ் பூன்
மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நீர் சேர்த்து விருப்பமிருந்தால் இஞ்சியை கலந்து மிக்ஸ்யில் சுழற்றவும்.
பின்னர் அதனை வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு குடிக்க வேண்டும்.
இப்படி செய்தால் பாதிக்கப்பட்ட குடல்களும் பலம் பெற்று புதிதாய் வேலை செய்யும்.🌳
#தேவையானவை
அன்னாசி - 3 துண்டுகள்
வெள்ளரிக்காய் - அரை
கற்றாழை - 3 டேபிள் ஸ்பூன்
நீர் - 1 கப்
முதலில் அன்னாசி மற்றும் வெள்ளர்க்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இதனுடன் கற்றாழை மற்றும் நீர் கலந்து நன்றாக அரைக்க வேண்டும்.
இந்த ஜூஸை 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஆரோக்கியத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் .
ஐரோப்பாவின் நிர்ப்பந்தமும், நமது முட்டாள்தனமும்.
1. எட்டு மாதக் குளிர் காரணமாக கோட் சூட் அணிவது அவர்களின் நிர்ப்பந்தம்,
கடும் வெப்ப காலத்திலும் திருமணம் நாளன்று கோட் சூட் அணிந்து, கோட் சூட்டோடு ஊர்வலமாக அழைத்துச் செல்லுவது,
-நமது முட்டாள்தனம்....
2. Fresh உணவு கிடைக்காததால், அழுகிய மாவில் இருந்து பீட்சா, பர்கர், நூடுல்ஸ் சாப்பிடுவது ஐரோப்பாவின் நிர்ப்பந்தம். கல்யாண விருந்து போல மெனு வைத்து கொண்டும் ₹ 400/-க்கு ரொட்டி (பீட்சா) சாப்பிடுவது,
- நமது முட்டாள்தனம்....
3. Fresh உணவு அனைவருக்கும் தினமும் கிடைக்காத காரணத்தாலும், ஃப்ரீசரைப் பயன்படுத்துவது ஐரோப்பிய நிர்ப்பந்தம்.
தினமும் மார்கெட்டில் ஃப்ரெஷ் காய்கறிகள் கிடைத்தும், அதை வாங்கி வந்து ஒரு வாரமாக ஃப்ரீசரில் அடுக்கிய காய்கறிகளைச் சாப்பிடுவது,
-நமது முட்டாள்தனம்....
4. மூலிகைகள் பற்றிய அறிவு இல்லாததால், மிருகங்களின் சதையில் இருந்து மருந்து தயாரிப்பது அவர்களின் நிர்ப்பந்தம்.
அதே வேளையில் சித்தமருத்துவம், ஆயுர்வேதம் போன்ற சிறந்த பின்விளைவற்ற பாரம்பரிய மருத்துவம் நம்மிடம் இருந்தும், இறைச்சி மருந்துகளை உபயோகிப்பது,
-நமது முட்டாள்தனம்....
5. லஸ்ஸி, பால், ஜூஸ் போன்றவை இல்லாததால், சர்க்கரை கரைசலை குளிர்பானம் என்ற பெயரில் குடிக்க வேண்டிய நிலை அவர்களின் நிர்ப்பந்தம்.
பலவகையான இயற்கை பானங்கள் இருந்தும், குளிர்பானம் என்ற விஷத்தைக் குடித்து நம்மை நாமே நவீனமாகக் கருதுவது சரியா?
உடல் நலம் காப்போம்.
*🌹💫நாம் எப்படி வாழ வேண்டும்?*
*Duck or Eagle ?*🌹💫
நண்பர் வெளியூர் செல்ல Call Taxi
ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அவர் கவனித்தது காரின் பின்னால் எழுதப்பட்டிருந்த ஆங்கில வாக்கியம்.
Duck or Eagle
You decide
அடுத்து அவர் கவனத்தை
கவர்ந்தது
(Clean and shiny)
பளிச்சென்று சுத்தமாக இருந்த கார்.
டிரைவர் நல்ல வெள்ளை உடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.
அவரே வந்து கார் கதவை திறந்து
நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.
அழகான டிரைவிங் கேட்டதற்கு
மட்டும் தெளிவான பதில்.
நண்பர் அந்த ஓட்டுனரின் அழகிய செயல்களால் மிகவும், கவரப்படார்.
பொதுவாக Call Taxi டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்டத்தோடு.
இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார்.
பட்டதாரியும் கூட.
அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.
இல்லை சார். நானும் மற்ற டிரைவர்ஸ்
போல்தான் இருந்தேன்.
சத்தம் போட்டு கொண்டு...
குறை கூறி கொண்டு "என்றார்.
எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.
ஒரு Client seminar ஒன்றிற்கு சென்றார்.
சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன்.
அந்த seminar என்னை மாற்றி விட்டது" என்றார்.
என்ன Seminar?
உங்களை நீங்களே உயர்த்திக்
கொள்வது எப்படி ?
என்ன சொன்னார்கள்?
பல அறிவுரைகள். என்னை மிகவும்
கவர்ந்தது இதுதான்.
காலையில் எழுந்திருக்கும் போதே
இந்த நாள் சரியாக இருக்காது என்று எதிர்மறை சிந்தனையோடு எழுந்தால் அந்த நாள் கண்டிப்பாக நன்றாக இருக்காது."
இதையே ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
அப்போதுதான் அதன் ஆழம் புரிந்தது.
If you get up in the morning
expecting a bad day,you will.
Don't be a Duck
Be an Eagle
The ducks only make noise and complaints.
The eagles soar above the group.
அந்த அறிவுரை என்னை
மிகவும் கவர்ந்தது.
என்னை நானே சுய பரிசோதனை
செய்து கொண்டேன்.
நான் Duck போல இருப்பதை உணர்ந்தேன்.
ஏன் Eagle போல இருக்க கூடாது என்று எண்ணினேன். என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.
எல்லா Customer இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.
மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது.
Always my taxi busy.
ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்" என்றார்.
நண்பர் சொன்னபோது எனக்கே
அவரை பார்க்க வேண்டும் போல்
இருந்தது.
அவர் சொன்னது உண்மைதான்.
எந்த வேலையாக இருந்தாலும்,
நாம் நடந்து கொள்ளும் நடத்தையும்,அர்ப்பணிப்பு உணர்வுமே,
(behaviour and involvement)
நம்மை உயர்த்தும்.
உயர உயர வாழ்வில்
Eagle போல பறக்க வைக்கும்.
இப்பொழுது நம் முன்னால்
இருக்கும் ஒரே கேள்வி :
நாம் எப்படி வாழ வேண்டும்?
Duck or Eagle ?
முடிவு எடுக்க வேண்டியது நாமே.
நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக,
நல்ல அப்பாவாக, நல்ல கணவனாக,
நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவது
எல்லாமே நம் கையில்தான்.
பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே
உயர் சிந்தனையால் Eagle போல
வானத்தை நம் நல்லெண்ண
சிறகுகளால் அளப்போம்..!!
40 வருடங்களுக்கு முன்
80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை..!!
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்.
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.
20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.
21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.
22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.
23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.
24. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது என்பது நூறுதச உண்மை...
இந்த உலகில் நம் அனுமதியின்றி யாராலும் நம்மை காயப்படுத்தவோ மகிழ்விக்கவோ இயலாது...
உங்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் கைகளில் தான் உள்ளது...
எது நடந்தாலும் உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள் வாழ்க்கை வரமாகும்....
நம் பலம் என்னவென்று நமக்குத் தெரிந்திருந்தால் போதும். தோல்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
வாழ்வில் தோல்வியடைந்தால் "நான் பலசாலி ஆனால் தோற்று விட்டேன்" என்று யாரிடமும் நீங்கள் நிரூபிக்க தேவையில்லை.
அதனால் எந்த பயனும் இல்லை.
வெளியுலகத்தில் தோற்றாலும் உள்ளே சிரிக்க முடிந்தால் நாம் என்றும் வெற்றியாளர்களே...
அப்பொழுது நாம் தான் உலகிலேயே பலசாலி.. நம்மை வெல்ல யாருமில்லை.
இல்லறம்_நன்றானால் துறவறம் தேவையில்லை .
இல்லற வாழ்விற்கு தேவையான சில அடிப்படை தகுதிகள்...
1) இரண்டு வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர்கள், இணைந்து ஏற்படுத்தும் மிக முக்கியமான சமூக கட்டமைப்பு, குடும்பம்.
2) மனபொருத்தம் அமையாவிட்டால், எத்தனை பொருத்தங்கள் பார்த்தும் பிரயோசனமில்லை.
3) வேறு வழியில்லை என்பதாலோ, விருப்பத்தை மீறியோ, கட்டாயப் படுத்தி, நிர்பந்தத்தால் நடக்கும் திருமணம் வெறும் சடங்கு மட்டுமே.
4) கணவன் மனைவி உறவு என்பது நட்பின் உச்சம் மட்டுமல்ல தியாகத்தின் உச்சமும் கூட.
5) உங்கள் வாழ்கையில் ஒரு பகுதியை வாழ்கை துணைக்கு ஒதுக்க முடியாவிட்டால், அல்லது நீங்கள் அதற்கு தயாராக இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
6) பணம், பொருள், சுகபோக வாழ்கை என்பதை மட்டும் எதிர்பார்த்து நடக்கும் திருமணம் கடைசியில் சங்கடத்தில் தான் கொண்டு சென்று நிறுத்தும்.
7) குடும்பம் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின், தனிப்பட்ட சுக துக்கம் என்பதை, தேவைகளை தானாக குறைத்துக் கொள்ள தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.
உங்களது தனிப்பட்ட சுகங்களை, நட்புகளை, உறவுகளை, வாழ்கை துணையால், ஏற்றுக்கொள்ளும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
9) அவ்வாறு இல்லாத சுகங்களை, பழக்கங்களை, நட்புகளை, உறவுகளை நீங்கள் விட்டு கொடுக்க தேவையான மன உறுதி இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.
10) எந்த நிலையிலும், சூழ்நிலையிலும் வாழ்கை துணையை விட்டுக்கொடுக்க, தரம்தாழ்த்த, அனுமதிக்கவே கூடாது. எனக்கு எனது வாழ்கை துணை எப்போதும் துணை நிற்க்கும், போராடும், என்ற நம்பிக்கை தான் குடும்பத்தின் ஆணிவேர்.
11) எக்காரணம் கொண்டும் சந்தேகம் என்ற அரக்கனை மட்டும் குடும்ப உறவுக்குள் அனுமதிக்கவே கூடாது. “சந்தேகம்” என்ற இந்த நோய், மிக பெரிய குடும்ப கொலையாளி.
12) தவறு செய்வது மனித இயல்பு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தவறை கண்டிக்கும் உரிமையும் வாழ்கை துணைக்கு உண்டு.
13) குடும்பத்தின் நலன் கருதி, வாழ்கை துணை எடுத்து சொல்லும் யோசனைகளை, புறம்தள்ளாதீர்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்றோ, உனக்கு என்ன தெரியும் என்றோ, அகம்பாவம் வேண்டாம்.
14) தயவு செய்து உங்கள் குடும்ப பிரச்சனைகளை, யாரிடமும், எக்காரணம் கொண்டும் விளம்பர படுத்தாதீர்கள். உங்களுக்குள் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்றால், தகுதியான, பக்குவம் நிறைந்த குடும்ப பெரியவர்கள் அல்லது இதற்காகவே தகுதி பெற்ற நபர்களிடத்தில் மட்டுமே அறிவுறை கேட்க வேண்டும்.
15) புற அழகு மயக்கம், வெளி வேஷ மோகம், நானா அல்லது நீயா என்கிற போட்டி, சதி, சுயநலம், சுய கௌரவம் எல்லாம் வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட தெரிந்து இருக்க வேண்டும்.
16) உங்களை எப்படி உங்கள் வாழ்கை துணை நடத்த வேண்டும் என சொல்லி கொடுப்பதை விட நீங்கள் அதுபோல் வாழ்ந்து காட்டி உதாரணமாக இருந்து கற்றுக்கொடுங்கள்.
17) உங்கள் பெற்றோர்களையும், உடன்பிறந்தோரையும் உங்கள் வாழ்கை துணை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும், அதே போல் அவர்களது குடும்ப உறவுகளை நீங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நடிப்பிற்க்கும், கள்ளத்தனத்திற்கும், நாடகத்திற்கும் குடும்பத்தில் இடமில்லை.
வாழ்கையில், குடும்ப பாரத்தை ஏற்க இருப்பவர்களும், ஏற்கனவே அதில் உழன்று கொண்டிருப்பவர்களும் என அனைவரும் இந்த பொறுப்புக்களை உணர்ந்து உண்மையாக, உறுதியாக, நிலையாக இருக்க தெரிந்தால், குடும்பத்தில் அமைதியும், இன்பமும், வருங்கால சந்ததியினருக்கு தேவையான அடிஸ்தானமும், அமைத்திட முடியும் என்பது உறுதி
எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது.
ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கு எல்லோருடைய மனதிலும் உண்டு.
ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான்.
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அதன் கட்டணம் தான் அதிகம்.
சந்தோசத்தில் கை குலுக்கும் ஐந்து
விரல்களை விட, கஷ்டத்தில் கண் துடைக்கும் ஒரு விரலே மேலானது.
சில நேரம் கண்ணீரை துடைக்க யாரையோ தேடுகிறோம் நம்மிடம் விரல்கள் இருப்பதை மறந்து.
*மிகவும் அருமையான பதிவு*
ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.
ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.
சில வருடங்களுக்கு பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன்
நான் இப்போது வளர்ந்திருக்கிறேன்,
இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.
சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக் கொள்கிறார்கள்.
ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்”
என்றான் அந்த சிறுவன்.
ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக
“மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.
முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.
ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.
கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம்,
மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.
அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.
இப்போது கொஞ்சம் பயப்பட தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது. ரயிலின் வேகத்தைப்போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பது போல் இருக்கிறது.
ஜன்னலோர இருக்கையில் தலையை தாழ்த்தி, மூலையில் பதுங்கிக்கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது.
அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.
நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான், அதில்,
*“பயப்படாதே மகனே, நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது.*
கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது.
பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.
பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்.
இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது.
மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.
நோயை விட, அது குறித்த அச்சம் தான் பலரை கொல்கிறது.
எல்லோரும் இறைவனை நம்புகிறோம். நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான் என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.
இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை
வைத்திருக்கிறான். அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன், என்று எழுதி இருக்கிறது.*
கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று நம் இறைவன் நம்பிக்கை தருகிறான்.
எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம். பயமும் அச்சமும் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உலகம் பிழைக்கப் போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம்.
40 வருடங்களுக்கு முன், எல்லோரும் தங்களுக்கு குழந்தைகள் வேண்டுமென விரும்பினார்கள்; இன்று பலரும் அதற்கு பயப்படுகிறார்கள்.
40 வருடங்களுக்கு முன், பிள்ளைகள் பெற்றோரை மதித்தனர்; இன்று, பெற்றோர் பிள்ளைகளை மதிக்க வேண்டியிருக்கிறது.
40 வருடங்களுக்கு முன், திருமணம் எளிதாகவும், விவாகரத்து கடினமாகவும் இருந்தது; இன்று, விவாகரத்து எளிதாகவும், திருமணம் கடினமாகவும் இருக்கிறது.
40 வருடங்களுக்கு முன், அண்டை வீட்டாருக்கு பரிச்சயமாகியிருந்தோம். இன்று, அண்டை வீட்டாருக்கு புதுமுகமாயிருக்கிறோம்.
40 வருடங்களுக்கு முன், கிராமவாசிகள் வேலை தேடி நகரத்துக்கு வந்தார்கள்; இன்று, நகரவாசிகள் அமைதி தேடி கிராமத்துக்குப் போகிறார்கள்.
40 வருடங்களுக்கு முன், எல்லோரும் சந்தோஷத்தின் பொருட்டு பருமனாக இருக்க விரும்பினார்கள்; இன்று, ஆரோக்கியத்தின் பொருட்டு, திட்ட உணவு விரும்புகிறார்கள்.
40 வருடங்களுக்கு முன், செல்வந்தர்கள் தங்களை எளியவர்களாகக் காண்பித்தனர்; இப்போதோ, எளியவர்கள் தங்களைப் பணக்காரர்களாக காண்பிக்க விரும்புகின்றனர்.
40 வருடங்களுக்கு முன், ஒட்டுமொத்த குடும்பத்துக்காக ஒருவர் உழைத்தார்; இன்று ஒரு பிள்ளைக்காக ஒரு குடும்பமே உழைக்க வேண்டியிருக்கிறது.
40 வருடங்களுக்கு முன், பலரும் புத்தகங்களை விரும்பிப் படித்தனர்; இன்று, ஜனங்கள் facebook, whatsapp செய்திகளோடு பரபரப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
40 வருடங்கள் 1980, நேற்று போல் தோன்றுகிறது!
யதார்த்தமான அந்த உண்மைகளை நினைத்துப் பாருங்கள். இன்றைய நாளில் அவை, கசப்பான உண்மை!!
மனைவியை மதிப்பதும் நேசிப்பதுமே ஆண்களின் முதல் கடமையாகட்டும்.........
+++++++++++++++++++ நடுத்தர வயது ஆண்கள் மன உளைச்சலில் இருந்து விடுதலை பெற.......
கடைசியாக உங்கள் மனைவியுடன் எப்போது உட்கார்ந்து சந்தோஷமாக பேசினீர்கள் என்றால்... வெகு சிலரால் மட்டுமே மிகச்சரியாக உடனே பதில்சொல்ல இயலும்......
உங்கள் விரல்கோர்த்து கனவுகளுடன் வாழ்வை தொடங்கிய பெண்... காலம் மென்று போட்ட கரும்பு சக்கையாய் பொலிவிழந்து , கண்கள் குழிவிழுந்து எச்சமாய் நடமாடிக் கொண்டிருப்பர்...
இப்படித்தான் வாழ வேண்டுமா?? இல்லை.... குறைந்தபட்ச மாற்றங்களையாவது முயற்சிக்கலாமா......
* சமையலறை என்பது 7 அடுக்கு பாதுகாப்பு கொண்ட எதிரியின் கோட்டை அல்ல.... நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே செல்லுங்கள்.. கழுவாமல் விட்டிருக்கும் ஓரிரு பாத்திரங்களை கழுவுங்கள்.. கூட்டோ பொறியாலோ செய்யும் போது குறைந்தபட்சம் கரண்டியை வாங்கி கிளறுங்கள்...
* விடுமுறை நாட்களிலோ, பண்டிகை நாட்களிலோ அவர்களுக்கு சமையலறையில் இருந்து ஒய்வு கொடுங்கள்.. அல்லது கூட மாட ஒத்தாசை செய்யுங்கள்..
*வாரம் ஒருமுறை வேண்டாம்... மாதம் ஒருமுறையாவது "இன்னிக்கு சமைக்க வேண்டாம்.. நாம வெளியில் போகலாம்... எங்க போகலாம்ன்னு நீ சொல்லு" என்று விடுமுறையுடன் , முடிவெடுக்கும் வாய்ப்பையும் கொடுங்கள்...
* குழந்தை பிறந்தபிறகு இயல்பாகவே பெண்களின் எடை கூடும்....
அந்த எடைகூடலை கேலி செய்யாமல்.. அந்த அழகை ரசிக்க பழகுங்கள்... அவர்களின் கர்ப்பகால சங்கடங்களை நினைவு கூருங்கள்...
* அவ்வப்போது அவர்களின் தாய் வீட்டு விசேஷங்களை, நலன்களை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்..
* எல்லா செலவுகளுக்கும் உங்களை எதிர்பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை தவிர்த்து முன்கூட்டியே அவர்களிடம் செலவுக்கான பணத்தை கொடுத்து விடுங்கள்.... "கொடுத்துட்டேன்.. என் வேலை முடிந்தது" என்ற எண்ணம் தவிர்த்து , இடை இடையே கையிருப்பு இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்..
* உங்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் கேரியர் மீது அவர்கள் செய்துகொண்ட சுயசமாதானத்தை போற்றி நினைவுகூறுங்கள்..
* உங்கள் வேலை முடிந்த உடன் தூங்க செல்லாமல், உங்கள் மனைவி சமையலறை வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை அவருக்காக காத்திருந்து ஓரிரு வார்த்தைகளாவது பேசியபின் தூங்கச்செல்லுங்கள்...
* உங்க மனைவி ஒர்க் பண்றாங்களா.. என்று யாராவது கேட்டால்..."இல்லை... சும்மாதான் இருக்கிறார்" என்று சொல்லாதீர்கள்... மாறாக...." குடும்ப நிர்வாகத்தை அவர்தான் கவனிக்கிறார்" என்று சொல்லுங்கள்... இந்த அங்கீகாரமே பல போராட்டங்களுக்கான ஆறுதலும் தீர்வுமாகும்.....
* முடிந்தவரை "உனக்காக வாங்கினேன்...." என்று எதையாவது பரிசளியுங்கள்.... அவர்கள் கலர் சரியில்லை, நல்லாவே இல்லை என்றாலும் கண்டுகொள்ளாதீர்கள்.... ஏனென்றால்... அவர்களே வாங்கி வந்தாலும் கூட வீட்டிற்கு வந்த உடன் பிடிக்காமல் போவது பெண்கள் இயல்பு.... உங்கள் அன்பும் கலந்திருப்பதால்... பார்க்கப்பார்க்க அது அவர்களுக்கு பிடிக்கும்...
*முக்கியமாக, எக்காரணம் கொண்டும் மனைவியிடமோ, மனைவிக்கு முன்னாலோ வேறொரு பெண்ணை புகழ்ந்து பேசாதீர்கள்.. அது உங்கள் உடன்பிறந்த சகோதரியாவாகவே இருந்தாலும்... ஒருவேளை உங்கள் மகளை புகழவேண்டி வந்தால் "உன்னைப்போலவே.." என்று எக்ஸ்ட்ரா பிட்டிங் அவசியம்...
*ஏதேனும் விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல நேர்ந்தால்..."அன்னிக்கு அவங்க வீட்டு கல்யாணத்துக்கு போனப்போ நீ இந்த புடவை தான கட்டிட்டு வந்த..... வேற புடவை கட்டிட்டு வா.... அந்த மஞ்சள் புடவை உனக்கு நல்லா இருக்கும்.." என்பது போன்ற ஆலோசனைகள் அவசியம்.... இது நீங்கள் உங்கள் மனைவியை ரசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்...
* "ஏன் ஒரு மாதிரி இருக்க.... தலை எல்லாம் கலைஞ்சிருக்கு,, ரொம்ப டயர்டா இருக்க... உடம்பு சரி இல்லையா.." என்பது போன்று விசாரியுங்கள்... இது உங்கள் மனைவி மீதான அக்கறையை அவருக்கு உணர்த்தும்...
* இதை எல்லாம் தாண்டியதுதான் உடல் சார்ந்த தேவைகள்... முடிந்தவரை அதை ஈடு செய்ய முயற்சியுங்கள்...
அப்புறமென்ன.... வாழ்க்கை வசப்படும்...
திரும்பி பார்க்கையில் வாழ்ந்த திருப்தி கிடைக்கும்........
தடுமாற்றம் வரும் போது
நிதானிக்கக் கொஞ்சம்
நேரமெடுத்துக் கொள்ளுங்கள்.
எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள்.
எப்படிச் சரியாகும் என்பதைத் தேடுங்கள்.
தீர்வு தெரிந்தப் பின்னே அதை நோக்கி நகருங்கள்.
அணுகுமுறையில் தவறு எனும் போது அடிப்படையை மாற்றுங்கள்.
செயல்முறையில் தவறு எனும் போது செப்பனிடப் பாருங்கள்.
விளக்கங்கள் தேவையில்லை
வெளிவரப் பாருங்கள்.
மறுபடியும் நேராமல் மாற்றுவழி தேடுங்கள் கவலையால் ஆவதென்ன என்று செல்லுங்கள தீர்வு நோக்கிச் செல்லுங்கள்
சந்தோசம் கிடைக்கும் நாளாக என்றுமே அமையட்டும் .
*கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை:*
☆ ஒரு செயற்கைப் பல் வைக்க - ரூ 6,000
☆ செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்
☆ ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )
☆ செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்
☆ ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்
☆ செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்
☆ கண்ணுக்கு லென்ஸ் பொருத்த - ரூ 50, 000
☆ எலும்புக்குப் பதிலாக plate வைக்க -ரூ 50,000
☆ கிட்னிக்குப் பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000
☆ இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000
☆ ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000
☆ இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000
மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதை இறைவனின் உதவியோடு தவிர்ப்போம்.
கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா சிந்திப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்.
மது புகை புகையிலை ஹான்ஸ் இன்னும் பிற லாகிரி வஸ்துக்களை தவிர்ப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்..
"புதுப்பிக்க வேண்டும்"
கணவன் மனைவிக்கிடையிலான மகிழ்ச்சியை பணத்தினாலோ
அல்லது பரிசுகளாலோ மாத்திரம் புதிப்பிக்க முடியாது.
துரோகம் அறியாத தூய்மையான உள்ளத்திலிருந்து வெளியாகும் தூய்மையான வார்த்தை மூலமும் அதனைப் புதுப்பிக்க வேண்டும்.
*ஊற வைத்த* *நிலக்கடலையின்* *ரகசியங்கள்*,
*பலன்கள்*,
🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔
*ஆரோக்கிய வழிமுறைகள்*:
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
நிலக்கடலை குறித்த
மூடநம்பிக்கைகள்
அவநம்பிக்கைகள்
இந்தியா முழுவதும்
சர்வதேச கார்ப்பரேட்
நிறுவனங்களால்
திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.
நாம் எல்லாம் பாதாம்,
பிஸ்தா,முந்திரிப் பருப்புகளில்தான்
சத்துஅதிகம் உள்ளது என்று
கருதுகிறோம்.
அது தவறு.
நிலக்கடலையில் தான் இவற்றைஎல்லாம் விட
அளவுக்கதிகமான
சத்துக்கள் உள்ளன.
100 கிராம்
நிலக்கடலையில்
கீழ்க்கண்ட சத்துக்கள்
நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு - 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் - 0.85 கி
ஐசோலூசின் - 0.85 மி.கி.
லூசின் - 1.625 மி.கி.
லைசின் - 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3,பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.
காப்பர் - 11.44 மி.கி.
இரும்புச்சத்து - 4.58 மி.கி.
மெக்னீசியம் - 168.00 மி.கி.
மேங்கனீஸ் - 1.934 மி.கி.
பாஸ்பரஸ் - 376.00 மி.கி.
பொட்டாசியம் - 705.00 மி.கி.
சோடியம் - 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.
போலிக் ஆசிட்
சத்துக்களும் நிரம்பி
உள்ளது.
வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலை ஒரு முழுமையான உணவு ஆகும்.
நீரை வடிகட்டிவிட்டு
ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலையை சாப்பிடுவதே சிறந்ததாகும்.
வறுத்த
வேர்க்கடலையை கொறிக்கக் கூடாது. அப்படியே விழுங்கவும் கூடாது.
நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
காரணம் வேர்க்கடலை சற்றுத் தாமதமாகத்தான் செரிமானமாகும்.
வேர்க்கடலையை நன்றாக மென்று சாப்பிடவில்லை என்றால் வயிற்று வலியை ஏற்படுத்திவிடும்.
நாள்முழுவதும் சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்குரு ஜக்கி
வாசுதேவ் அவர்கள் கூறும் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலையை சாப்பிடும் வழிமுறை:
தினமும் 2 - 3 கைப்பிடி பச்சை நிலக்கடலை (தோல் நீக்கியது)
எடுத்து அதனை,
இரவு தண்ணீரில்
ஊற வைக்க வேண்டும். (குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக ஊற வேண்டும்)
இவ்வாறு செய்வதன் மூலம் வேர்க்கடலையிலுள்ள பித்த தன்மை முழுவதுமாக நீங்கி விடுகின்றது.
ஊற வைத்த தண்ணீரை தவிர்த்துவிட்டு,
காலையில் அந்த கடலையை எடுத்து அதனுடன் 2 வாழைப்பழம் சேர்த்து மிக்சியில் இட்டு அரைத்து சிறிதளவு சுத்தமான தேன் சேர்த்து அப்படியே உட்கொண்டால் நமது உடலுக்கு ஒரு நாளுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்து விடும்.
(காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கு பதிலாக) நமது ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காததால் நமது உள் உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன்
செயல் படும்.
இப்பொழுது யாரை கேட்டாலும் நான் டயட்டில் (Diet) இருக்கிறேன் என்று கூறுவது வாடிக்கையாகி விட்டது.
அப்படி டயட்டில் இருப்போர் அனைவரும் சற்குரு அவர்கள்
வழிமுறையை பின்பற்றினால் அவர்கள் உடல் எடையும் குறையும், உடல் நலத்திற்கும் நல்லது....
முயற்சி செய்து பாருங்கள் !
முடிந்தவரை மற்றவர்களுடன் பகிருங்கள் !!!
உடல் உழைப்பின்றி அமர்ந்த நிலையிலே இருத்தலின் உடற்கேடுகள் :
மற்ற விலங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய மனித விலங்கு உணவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் வேட்டையாடுதல் மரமேறுதல் நீந்துதல் போன்று மிகக்கடின உடலுழைப்பை செய்து வந்தான் . நாளையடைவில் மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று படிப்படியாக அதீத உடல் உழைப்பை குறைக்கும் வண்ணம் பல கருவிகளை கண்டறியத்தொடங்கி , தன் உணவை தானே உற்பத்தியும் செய்ய விவசாயம் செய்து , நாகரீகம் தோன்றிய காலத்தில் குழுவாக பணியாற்றத் தொடங்கியதாலும் விஞ்ஞான வளர்ச்சியாலும் உடலை வருத்தி வேலை செய்வதற்கான தேவை குறைந்து கொண்டே வருகிறது ! நாற்காலிகளில் அமர்ந்து கொண்டே ஒரு சொட்டு வேர்வை சிந்தாமல் கணினி மூலம் உலகை ஆள முடிகிறது !
கடந்த அரை நூற்றாண்டு தொலைக்காட்சி , கணினி , மோட்டார் வாகனம் மற்றும் தொலைபேசி போன்றவற்றின் அதிரடி பரவலால் , மக்களிடையே உடல் உழைப்பு அறவே குறைந்து போனது !
நம் உடல் நின்று கொண்டும் அசைந்து வேலை செய்வதற்கு ஏற்றார் போலவே வடிவமைக்க பட்டது ! அசைவற்ற அமர்ந்த நிலையிலேயே வேலை செய்வதால் எண்ணற்ற உடற்கேடுகள் ஏற்படுகின்றன !
Metabolic syndrome மற்றும் அதன் விளைவுகள் :
இயந்திரத்தைப் போன்று நம் உடல் இயங்குவதற்கும் எரிபொருள் தேவை , நாம் உண்ணும் உணவே எரிபொருளாகி ஆற்றலை தருகிறது . நம் செயல்களை பொறுத்து நம் உட்கொள்ளும் உணவு ஆற்றலாய் மாறி கரைகிறது . நம் இதய துடிப்பு அதிகரிக்கும் வண்ணம் ஓடும் போது அதிகமாக ஆற்றல் செலவிடப்படுகிறது , நடக்கும் போது ஆற்றல் செலவிடுவது குறையும் , நிற்கும் போது மேலும் குறையும் , அமர்ந்தே இருக்கும் போது மிக குறைவாகவும் , படுத்த நிலையில் இருக்கும் போது சொற்பமான ஆற்றலே செலவாகிறது ! நம் உண்ணும் உணவிற்கு ஈடாக செயல்கள் செய்து ஆற்றலை பயன்படுத்தாவிட்டால் , உபரியாக இருக்கும் ஆற்றல் கொழுப்பாக உருமாறி வயிறு , பிட்டம் மற்றும் உடலெங்கும் கொழுப்பாக படிந்து விடும்
இது நாளையடைவில் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளின் கூட்டினையே மெட்டபாலிக் syndrome என்றழைக்கிறோம் . சராசரியாக முப்பது வயதை கடக்கும்இந்தியர்கள் வயிறு பெருத்து இந்த பிரச்சனைக்கு ஆளாக தொடங்குகிறார்கள் . இதன் ஐந்து முக்கிய அறிகுறிகள்
1 ) வயிறு பெருத்து இடுப்பு அளவு அதிகமாதல்.
2 ) காலை வெறும் வயிற்றில் ரத்த சக்கரை அளவு அதிகமாதல்
3 ) ட்ரைகிளிசெரிட் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவு கூடுதல்
4 ) HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவு குறைதல்
5 ) ரத்த அழுத்தம் உயர்தல்
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மாரடைப்பு , பக்கவாதம் , சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிப்படைவதற்கு வாய்ப்புகள் அதிகம் .
உடகார்ந்த நிலையிலேயே அதிகம் இருப்போர்க்கு ஏற்படும் பாதிப்புகள் :
1 ) உடற்பருமன் மற்றும் அதனால் ஏற்படும் மெட்டபாலிக் syndrome மற்றும் அதன் விளைவுகளான இதய நோய்கள் , பக்க வாதம் , சர்க்கரை வியாதி , உயர் ரத்த அழுத்தம் , புற்று நோய்கள் , முழங்கால் வலி , ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வது ( artherosclerosis ) போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் .
2 ) முதுகு மற்றும் கழுத்து வலி : அதிக நேரம் அமர்ந்தே இருப்பதால் முதுகு மற்றும் கழுத்து பகுதிகளிலுள்ள தசைகள் மற்றும் முதுகெலும்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் டிஸ்க் எனப்படும் ஜவ்வுகள் தேய்ந்து நரம்புகளில் அழுத்தம் ஏற்படுத்தி முதுகு , கழுத்து மற்றும் கை கால்களில் ரேடிக்குலோபதி ,சையாட்டிக்கா எனப்டும் நரம்பு வலியை ஏற்படுத்தக் கூடும் .
3 ) போதிய பயிற்சியின்மையால் உடலில் உள்ள பல தசைகள் பலவீனமடைந்து எளிதான செயல்களை மேற்கொள்ளும்போது கூட காயமடைந்து வலி ஏற்பட கூடும்.
4 ) எலும்புகளின் வளர்சிதை மாற்றத்திற்கு
பயிற்சிகள் மிக முக்கியம் . எலும்புகள் உச்சபச்ச அடர்த்தியை ( peak bone mass ) 27 வயதில் அடையும் அதன் பின் படி படியாக அதன் அடர்த்தி கொறையத்தொடங்கும் . போதிய பயிற்சிகள் சிறு வயதிலிருந்தே செய்வதால் எலும்பின் அடர்த்தி அதிகரிக்க செய்து , அது குறையும் வேகத்தையும் கட்டுக்கள் வைப்பதன் மூலம் எலும்பு முறிவு , எலும்பு வலி , எலும்பு தேய்மானம் போன்றவற்றை தடுக்கலாம் .
5 ) அசைவின்றி உட்கார்ந்தே இருப்பதால் கால்களில் ரத்த நாளங்களில் ரத்தம் தேங்குவதால் வெரிகோஸ் வெய்ன் ( varicose vein ) பிரச்சனை வரும் வாய்ப்பதிகம்.
6 ) அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்
7 ) மனப்பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்றவை அமர்ந்தே பணிபுரிவோர்க்கு வரும் வாய்ப்பு அதிகமாகும் .
ஆகவே முக்கியமாய் மென்பொருள் துறையினர் , அலுவலக பணியாளர்கள் , இல்லத்தரசிகள் , மருத்துவர்கள் , ஓட்டுனர்கள் , மற்றும் இதர அமர்ந்தே பனி செய்யும் துறையை சார்ந்தோர் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்குவதாலும் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பதாலும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைப்பதாலும், தவிர்க்க கூடிய நோய்கள் பலவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
நடை பயிற்சி செய்தல் , நின்று கொண்டே வேலை செய்தல் , மிதி வண்டி ஓட்டுதல் , நீச்சல் அடித்தல் போன்ற வற்றில் ஈடுபட்டு உடல் மற்றும் மனதினை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ளலாம் .
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dindigul
624003
Nagal Nagar
Dindigul
MEHANDHI-Home service available bridal /function/ occasion etc In and around Didigul, Karur, Madurai districts
Dindigul, 624707
This channel is created for the entertainment of the audience throughout. And you can find a list of any subject in the world here. I humbly request you to support and promote th...
Santhai Road
Dindigul, 624003
Diet Therapy, Home Remedies, Yoga & Naturopathic Consulting, Guidance and Counseling, Health Tips and Beauty Tips
Sri Maha Sakthi Beedam
Dindigul, 624614
சக்தி வழிபாடு சித்தர் பாரம்பரிய மருத்துவம்
Nagaiyagoundan Patti, Nilakottai, Dindigul, Tamilnadu
Dindigul, 624201
all tricks & hacks, fitness, health, beauty
Dindigul
You will be LESS at risk from major illnesses. You will be LESS at risk from violence and accidents
Nishacane Work. Bagambur. Dindigul
Dindigul, 624002
nisha cane.work begambur.dindigul624002
Salai Road
Dindigul, 624001
Frames Lenses Sunglasses Contact Lenses Eye Testing Eye Health Tips Eye Exercises Low Vision Device