Ajni's World - One Day At A Time

Ajni's World - One Day At A Time

Our Primary purpose is to stay sober. Sobriety is also the natural state of a human being at birth.

19/10/2022

Do I have to make a lifetime commitment to the program? Does my health depend on regular attendance at meetings? Is my service work in the fellowship the only service work that counts? There is no doubt in my mind that, for some of us, the answer is a loud, long “YES !” But maybe not for all of us.

My spiritual program has run through Twelve Step(AA) meetings, and back through more and more Twelve Step meetings, but I know for sure that others on their spiritual paths have gone very different ways. It’s a mistake, I think, for those of us who have found recovery in the Steps to narrow our thinking to this program, this program exclusively, or this program forever. A spiritual awakening is bigger than that.🙏

10/10/2022
10/10/2022

Watch for Warning Signs

Our recovery depends on our willingness to work the Twelve Steps. The Steps are a simple plan for complicated people. It works if we keep working it. You’re more at-risk for relapse in early recovery. Stay watchful for the warning signs. If you start avoiding meetings, thinking you can control your drinking, or believing you don’t need a Higher Power then you are headed toward a relapse. Move toward the positive goals you set by staying connected to the practice of the Twelve Steps. Are you struggling with issues of denial, anger, anxiety, power, or control? How about guilt, resentment, or blaming others? Are you frustrated with a parent or friend? What challenge are you facing right now? Share this with your sponsor or at a meeting today.

“Our lives teach us who we are.”

Grant Me Strength

"My Creator, I am now willing that you should have all of me, good and bad. I pray that you now remove from me every single defect of character which stands in the way of my usefulness to you and my fellows. Grant me strength, as I go out from here, to do your bidding. Amen." We have then completed Step Seven. Now we need more action, without which we find that "Faith without works is dead." Let’s look at Steps Eight and Nine.

- Alcoholics Anonymous, (Into Action) p. 76

Thought to Ponder
Faith makes the impossible possible.

AA-related 'Alconym'
S O B E R = Spiritually On Beam; Everything's Right.

10/10/2022

அகத்தாய்வு செய்வதென்பது என்னுள் சென்று, எனது செயல்களுக்குப் பின் இருக்கும் சிந்தனைகளை ஆய்வு செய்து பட்டியலிட்டு, என்னை நானாக நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள நான் செய்யும் முயற்சியாகும். என்னுடைய சுபாவம், அந்த சுபாவத்தின் அடிப்படையிலான ஒழுக்கங்கள், என்னுடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னணியில் இருக்கும் நோக்கங்கள் எனது குணாதிசயத்தை வரையறுக்கின்றன. ஒரு கணம் நிதானித்து அகத்தாய்வு செய்து சிந்திக்கையில், என்னுடைய உள்ளார்ந்த இயல்புகளை உணர முடிந்தது. இந்த அகத்தாய்வு அக ஒழுக்கமாக மாறுகையில், என்னுடைய ஒழுக்கத்திலும், நடத்தையிலும் மாற்றம் கொண்டுவருவது சாத்தியப்பட்டது.

தவறு செய்ய தூண்டப்பட்ட போதெல்லாம் உடனுக்குடன் அந்த தூண்டுதல் என்னுள் இருப்பதை ஒப்புக் கொண்டு அந்த தவறு செய்வதைத் தவிர்த்ததால், என் ஒழுக்கத்திலும், நடத்தையிலும் நல்மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியப்பட்டது. தவறுகளைச் செய்து செய்து பழக்கப் பட்டிருந்த எனக்கு, தவறுகளைத் தவிர்ப்பது பழக்கப்படாத ஒன்றாக இருந்தது. ஆயினும் பழக்கப்படாத அந்த நல்லதை AA தோழமையுடன் இணைந்து செய்ய ஆரம்பித்த பொழுது, வாழ்வதில் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது. ஒரு புதிய உற்சாகத்துடன் AA தோழமையுடன் இணைந்து எனது புதிய வாழ்க்கையை ஒரு நாள் அடிப்படையில் வாழ ஆரம்பித்தேன். தவறு செய்து பழக்கப்பட்டு வாழ்ந்த பொழுது, என்னை போல தவறு செய்து வாழ்ந்து கொண்டிருந்தவர்களே நண்பர்களாக அமைந்தனர். புதிய உற்சாகத்துடன் AA தோழமையுடன் இணைந்து செயல்படத் தொடங்கிய பொழுது, தவறுகளைத் தவிர்த்து, சோதனைகளை வென்று வாழ்வோரின் நட்பு கிடைத்தது.

அறியாமல் தவறு செய்து வாழும் நண்பர்களுக்குக் கூட எடுத்துக்காட்டாக வாழ்ந்து அவர்களுடன் சிதைந்திருந்த நட்பையும் கூட சீர் செய்வது சாத்தியப்பட்டது. 24 மணி நேரம் வாழ்வதில் ஒரு புதிய உற்சாகத்தை உணர ஆரம்பித்தேன். ஆனந்தமுடன் செயலாற்ற ஆரம்பித்தேன். துணிவுடன் செயலாற்ற ஆரம்பித்தேன். என் குடி நாட்களில் நான் அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்வது மிக மிகக் குறைவு. என் வீட்டில் இருந்தே குடித்துக்கொண்டே பணி செய்வது எனது பழக்கம். என் குடி நாட்களில் என்றாவது என்னை எனது மேலதிகாரி அவரை சந்திக்குமாறு கூப்பிட்டு அனுப்பினால் உடனே சென்று அவரை சந்தித்தது கிடையவே கிடையாது. குறைந்தபட்சம் 24 மணி நேரம் சென்ற பின்னர் தான் அவரைச் சந்திப்பேன். அப்படி பொறுப்பற்று பணியாற்றியது தவறெனக் கூட நான் உணரவில்லை. நான் சரி என எண்ணி செய்த அந்த காரியம், பல தருணங்களில் எனது மேலதிகாரிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியிருந்தது எனக்கு நன்றாக புரிய வந்தது.

என் தவறுகளின் உண்மையான தன்மையை உணர்ந்து, ஒப்புக்கொண்டு, திருத்திக் கொண்டு பொறுப்புடன் செயல் படத் தொடங்கினேன். பொறுப்புணர்ந்து செயல்பட்டமை, பல நல்விளைவுகளை என் வாழ்வில் உருவாக்கின. என் மேலதிகாரியுடன் இணைந்து செயலாற்றும் திறனை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினேன். இது எங்களது செயல் திறன் அதிகரிக்க மிகவும் உதவியது.

நான் இவ்வுலகை அது இருக்கும் நிலையில் காண்பதில்லை. நான் இருக்கும் நிலையில் இருந்த படியேதான் இவ்வுலகை காண்கிறேன். நான் இருக்கும் நிலையை உயர்த்திக் கொண்டு படைப்பின் உன்னதத்தை காண்பதற்கு அகத்தாய்வு செய்யும் பழக்கம் பெரிதும் உதவுகிறது என்ற கருத்தை இன்றைய தினமும் நம் சிந்தனைக்கு பகுதியைப் படித்து தெரிந்து கொள்கிறேன்.

10/10/2022

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

எனக்கு தீமையோ, அல்லது நன்மையோ அடுத்தவரால் ஒருபோதும் எனக்கு வரவே வராது. இது ஐயத்திற்கு இடமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஆன்மீக உண்மை. இது ஒரு ஆன்மீக விதி. இந்த விதியின் உண்மைத் தன்மையை சந்தேகிப்பது எனது ஆன்மீக வளர்ச்சியை முழுமையாக தடை செய்துவிடும். ஒவ்வொரு முறை நான் மனச்சலனமடைந்து கலக்கமுறும் போதும், அதற்கான புற காரணங்கள் எனக்கு வெளியே ஆயிரம் இருப்பதாக தோன்றினாலும், எனது மனச்சலனத்தின் உண்மையான காரணம் சர்வ நிச்சயமாக என்னில்தான் உள்ளது. இது ஒரு ஆன்மீக விதி. இதற்கு விலக்காக யாரும் இருக்க முடியாது.

குணமடைந்து ஆன்மீகப் பாதையில் முன்னேறுகையில் என்னுள் என்ன நிகழ்கிறது என்பதை கவனிக்கும் செயல் இயல்பாக நிகழ்கிறது. எனது புறத்தில் நான் ஒரு அரசனைப் போல வாழ்ந்தாலும், என் அகத்தில் தாள முடியாத வலியை உணர்வேனெனில், அந்த இரட்டை வாழ்க்கை உண்மையான ஆனந்தத்தை எனக்கு அளிக்காது. உள்ளுக்குள் பயத்தையும், பகைமையையும், பொறாமையையும், மனக் கசப்பையும், சந்தேகத்தையும், காமத்தையும், ஆணவத்தையும், கழிவிரக்கத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு, வெளியில் வேடமிட்டு ஆனந்தமாக இருப்பது போல நடித்து வாழ்வது தரும் வலி மிகவும் கொடூரமானது.

தீமை செய்ய அஞ்சுவதால் மனச்சலனம் நேராது. அதை விடுத்து மாற்றக் கூடிய தீய வாழ்க்கையை நல்ல வாழ்க்கையாக மாற்றுவதற்கு அஞ்சுவதால் ஏற்படுவது மனச் சலனம். கண்முன் நடக்கும் தீமையைத் தடுக்க கோபத்தை பயன் படுத்துவதால் மனச்சலனம் ஏற்படாது. மதுரையில் ஏற்பட்ட காயத்திற்கு மானாமதுரையில் துள்ளிக் குதிப்பது மனச்சலனத்தை நிச்சயம் உருவாகும். மனைவி மேல் உருவாகும் காம உணர்வால் மனச் சலனம் நிச்சயமாக ஏற்படாது. மாறாக மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணக்க முயன்றால் நிச்சயமாக மனசாட்சி உறுத்தும். இதைப் போல சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆன்மீகத்தில் வளர்வதற்கான ஒரே தடை என் மனக் குமுறல்களுக்கான காரணங்களை எனக்கு வெளியில் தேடுவது மட்டுமே ஆகும். ஆன்மீகத்தில் வளர்வதற்கான ஒரே வழி எனது மனக் குமுறல்களுக்கான காரணத்தை எனக்குள் தேடிக் கண்டடைந்து களைவது மட்டுமே ஆகும். தொடர்ந்து அகத்தாய்வு செய்து, அதனை எனது அக ஒழுக்கமாக மாற்றுவதால், என் எண்ணங்கள் தவறான பாதையில் சென்றாலும், மனசாட்சியின் நல்ல ஒழுங்கான வழிகாட்டுதலால் அவை உடனுக்குடன் சீரான பாதைக்கு சீக்கிரமே திரும்பிக் கொண்டு வரப்படுகின்றன. எனது கோபம், மனக்கசப்பு, வெறுப்பு, பயம், பொறாமை, சந்தேகம், காமம், ஆணவம், கழிவிரக்கம், பேராசை, பெரும் தீனி உண்ண ஆசை போன்ற கோளாறுகள் கலந்த எண்ணங்கள் என்னுள் எழுகையிலேயே, அவற்றை முளையிலேயே கிள்ளி எறியும் செயலைத்தான் பத்தாவது படியில் நான் செய்கிறேன். எனது குணக் கோளாறுகளே எனது ஆன்மீக வளர்ச்சிக்கு தடை என்பதில் இப்பொழுது எனக்கு எந்த வகையான ஐயமும் இல்லை.

ஒரே போன்ற இரு புற நிகழ்வுகளுக்கு நான் இரு வேறு வகையில் எதிர்வினையாற்றி இருந்ததை என் வாழ்க்கையின் அனுபவங்களைப் பின்னோக்கிப் பார்த்து தெளிவாக அறிகிறேன். எனது உணர்வுகளை வரம்பு மீறாது கவனித்துக் கொள்வது, எனது ஆன்மீக நிலையை பராமரித்துக் கொள்வதாகும் என்ற ஆன்றோர் வாக்கினை உறுதியாக நம்புகிறேன். எனது உணர்வுகள் வரம்பு மீறுகையில் அவை என் குணக் கோளாறுகளாக மாறுகின்றன. நான் என் ஆன்மீக நிலையை பராமரித்து, என் குணங்களை வரம்புக்குள் வைத்துக் கொள்கையில் ஒரு நிகழ்வினை இயல்பாக விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறேன். அதே நிகழ்வினை இயல்பாக ஏற்றுக் கொள்வது என் குணம் கோளாறாக மாறிய நிலையில் சாத்தியப்படாமல் போகின்றது. எனது ஆன்மீக நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பொறுத்து எனது சிந்தனை, சொல், செயல் ஆகியன மாற்றம் பெறுகின்றன என்ற எளிமையான உண்மையை நான் புரிந்து கொள்ளுமாறு பணிக்கப் படுகின்றேன்.

எனது ஆன்மீக நிலை சரியாக உள்ளதா என்பதை எனது அகத்தாய்வின் மூலம் தொடர்ந்து கண்காணிப்பதன் பலனாக, தொடர்ந்து எனது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நேர்மறை மாற்றங்களை உருவாக்கி இறைவனது முழுமையை நோக்கி முன்னேறுவது சாத்தியம் என்ற கருத்தை இன்றைய தினம் நம் சிந்தனைக்கு பகுதியைப் படித்து தெரிந்து கொள்கிறேன்.

10/10/2022

🙏🙏🙏🙏🙏🙏🙏

திருத்தப்பட வேண்டியது நான்தான், என்னை சுற்றி வாழும் மனிதர்கள் அல்ல என்ற உண்மையை இப்பொழுது தெளிவாகத் தெரிந்து கொள்கிறேன். என்னை சுற்றி இருப்போர் அனைவரது குணங்களையும் சீரமைத்த பின்னரே எனது குணங்களைச் சீர் செய்ய முயற்சிப்பேன் என்பது, கடலில் அலை அடங்கிய பின்னரே அதில் என் காலை நனைப்பேன் என்றதொரு பிடிவாதமான எண்ணத்திற்கு ஒப்பானது. பிற மனிதர்களது குணக் கோளாறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி எனது குறைபாடான வாழ்க்கையை நியாயப்படுத்த முயற்சிப்பது, நான் என் கோளாறுகளைச் சீர் செய்ய விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக கூறுவதாகவே அமையும். நான் வேதனையில் வெந்து சாவதற்கு அடுத்தவர் காரணம் என்று கூறுவது மனத் தெளிவற்ற எண்ணம் என்பது AA தோழமையை வந்தடைந்து, வழிமுறைகளில் செயல் பட்ட பின்னரே எனக்குப் புரிய வந்தது.

=> என் அனுமதியின்றி எவரும் என்னை காயப்படுத்த முடியாது. (Nobody can hurt me without my consent)

=> நானே அர்ப்பணித்தாலன்றி என் சுயமரியாதையை எவரும் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது. (Nobody can take away my Self respect unless I surrender it)

=> மனசாட்சிக்கு அடங்கி வாழும் மனிதனை எவரும் அவமானப் படுத்த முடியவே முடியாது. (A truly humble man can never be humiliated)

மேற்சொன்ன கூற்றுக்களின் ஆழமான அர்த்தம் எனக்கு குடி நாட்களில் புரியவே இல்லை. AA செயல்திட்டத்தின் பத்தாவது படியை அடையும் வரை, மேற் சொன்ன வார்த்தைகள் பைத்தியக் காரர்களின் பிதற்றல் போலவே எனக்கு தோன்றியது.

இன்று என்னை எவராவது காயப்படுத்தினால், நான்தான் முதற்கண் அந்த நபருக்கு என்னை காயப்படுத்த அனுமதி அளிக்கும் முதல் தவறை செய்கிறேன் என்பதைப் புரிந்து கொள்கிறேன். நான் அனுமதிக்கா விட்டால், அவரால் என்னை காயப்படுத்துவது சாத்தியப் படாது. நான் காயப்படுவதை இந்தக் கோணத்திலிருந்து சிந்திக்கையில், நான் காயப்படுவதைத் தவிர்ப்பது மிக எளிமையாக மாறும் என்பது புரிய வருகிறது. எனது தன்னலமும், ஆணவமும் மட்டுமே என்னைக் காய படுத்தும் அனுமதியை அடுத்தவருக்கு அளிக்கின்றது என்ற பேருண்மையை புரிந்துகொள்வது, நான் காயப்படாமல் வாழ்வதற்கான தெளிவான வழியைச் சுட்டிக்காட்டுகின்றது.

என் தன்னலத்தை பிறர் நலத்தாலும், ஆணவத்தை பணிவாலும் திருத்தி அமைத்துக் கொண்டால், நான் காயப்படுவது நிகழவே நிகழாது என்பதை புரிந்து கொண்டது ஒரு மாபெரும் விடுதலை உணர்வை எனக்கு அளித்தது. கோபம் உள்ளிட்ட அனைத்து கோளாறுகளும் எனது தன்னலம் மற்றும் ஆணவத்தின் நேரடி விளைவுகளே என்பது புரிகையில், தொடர்ச்சியான பயிற்சியால் அவற்றை களைந்தெறிய முடியும் என்பதை நான் கண்டு கொண்டேன். எனது தன்னல ஆசைகள் நிறைவேறத் தடையாக இருப்பவர்கள் மீதும், எனது தன் முனைப்பையும், ஆணவத்தையும் தகர்க்க முயற்சிப்பவர்கள் மீதும் மட்டுமே நான் கோபப்பட்டதை எனது அகத்தாய்வவில் அறிகையில், என் கோபத்திற்கு என் தன்னலமும், தன்முனைப்பும் மட்டுமே முழுமையான காரணிகள் என்பது தெளிவாகத் தெரிய வருகின்றது. என் கோபமும், அதன் விளைவாக ஏற்பட்ட தாள முடியாத வலியும், வேதனையும் என் தன்னலத்தாலும், தன்முனைப்பாலும் உருவானதேயன்றி பிற மனிதர்களால் உருவாகவில்லை என்ற உண்மை தெளிவாக விளங்குகின்றது. இதில் இப்பொழுது எள்ளளவும் ஐயமில்லை.

எனவே நான் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமெனில், சீரமைக்கப்பட வேண்டியது எனது தன்னலமும், தன்முனைப்புமேயன்றி, பிறரது செயல்கள் அல்ல என்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மைக்கு விதிவிலக்கு எவரும் இல்லை. ஆனால் மனித இயல்பில் வாழும் சராசரி மனிதனாகிய நான், எனது தன்னல ஆசைகளையும், என்னை மையமாக வைத்து செயல் படுவதையும் விலக்க மிகுந்த சிரமப் படுகிறேன். இது எனது தனிமனித இயலாமை. ஒரு எல்லைக்குட்பட்ட எனது மனித சக்தியால் நான் செய்யும் மிகச் சிறந்த முயற்சிகள் கூட என் தன்னலத்தையும், தன்முனைப்பையும் தகர்த்தெறிய போதுமானதாக இல்லை.

எனவே கோபம் உள்ளிட்ட எனது அனைத்து குணக் கோளாறுகளையும், அதன் விளைவான அனைத்து குறைபாடுகளிலும் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள நான் செய்யும் மனித முயற்சிகளை ஆசீர்வதிக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை பணிவுடனும், அடக்கத்துடனும் வேண்டி, இறை பேராற்றலுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று புரிந்துகொள்கிறேன். இந்த கருத்து இன்றைய தினமும் நம் சிந்தனைக்கு பகுதியில் அழுத்தமாக சொல்லப் பட்டிருக்கின்றது என்பதை இன்று நான் தெரிந்து கொள்கிறேன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

10/10/2022

We all have them, somebody we can’t seem to get along with. I know it’s to my benefit to find a way to good relations with my difficult person, but it’s hard to imagine doing the things that actually would help. Most often, I just don’t want to. That’s what makes it difficult. Here’s what I know. The advice I’ve heard in meetings says, “Pray for him. A month or two praying every day for a difficult person will make him easier to take.” Lots of people have said this works, so, okay, I’m inclined to believe it. But can I figure out why it works?

I believe that the heart of compassion is understanding, first of myself, and then, by extension, others. If I pray, asking that my difficult person have all the security and happiness I desire, I think I begin to understand both what I want and how much all of us are the same. On the days prayer is hard, I can meditate, imagining positive things flowing first for me, then for others I love, and eventually all others, including my difficult person. Prayer and meditation work and, even if they didn’t, aren’t they both better than frustration, confrontation, or isolation?🙏

10/10/2022

Engineers talk about the natural frequency of a system: if you force something at just the right rate, it responds much better than if you force it faster or slower. If you’ve pushed a kid on a swing, you know what I mean. I think life’s experiences have natural frequencies. Walking the dog takes twenty minutes. If I try to do it in two minutes or if I stretch it out over two weeks, the benefits of the walk are lost, and the dog isn’t happy. I used to call my mother every other day. If I called every hour or only once a year, the relationship would be different, and Mother wouldn’t be happy. The natural frequency depends entirely on the details of the experience.

I suggest that the slogan “Easy Does It” is bumper sticker shorthand for the idea that the Steps on a spiritual path have natural frequencies. It’s natural to be impatient for a better life and, once we have an idea of what it can be like, it’s natural to want to push ahead as fast as we can. But spiritual changes rarely happen suddenly and never happen by forcing them. “Easy” means comfortable, gentle, unhurried. The opposite of easy is “uneasy.” Fearful and anxious. Trust the process, don’t be afraid. Be gentle with yourself. Uneasy doesn’t do it.🙏

10/10/2022

Our brains keep changing. Good news for those of us bent, folded, and mutilated by our own and other people’s craziness, we can change. We acknowledge this possibility for change in Step Two, we ask for it in Step Seven, then we continue to work Steps Eight and Nine while we watch and wait for the changes. I was impatient for my changes. My first Step Six was, “Hell yes, I’m entirely ready, eager even…let’s get on with it!” Of course, with that attitude, I got to go back and work Step Six several times. The kind of change I needed wasn’t the sort of thing that can happen fast.

The program taught me about three A’s “Awareness, Acceptance, Action.”
AWARENESS came first when I truly noticed that my life was unmanageable. ACCEPTANCE came next when I recognized that I needed to change to make my life better. ACTION, though, wasn’t entirely up to me. Enormous brain changes were required. Meetings, program conversations, Step work, literature, service, prayer, and meditation — a complex of experiences that prompt billions of minute changes in my brain — all take time. Chemicals change, neurons change, brain networks change, mental models change, and finally, I change. Behavior changes last.🙏

10/10/2022

படி 12 - நடைபயிற்சி

ஆன்மீக விழிப்புணர்வு: "இது சுய-மையத்தை அழிப்பதைக் குறிக்கிறது ...
நான் அறிந்திராத ஒரு அமைதியும் அமைதியும் தொடர்ந்து வெற்றியின் உணர்வு இருந்தது."
(பில்ஸ் ஸ்டோரி, ப.14:1,2)
இந்த படிகளின் விளைவு: "கடவுளின் சக்தியில் நம்பிக்கை, மேலும் புதிய விஷயங்களை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் போதுமான விருப்பம், நேர்மை மற்றும் பணிவு ஆகியவை அத்தியாவசிய தேவைகள்."
(பில்ஸ் ஸ்டோரி, ப.13:5-14:0)
செய்தியை எடுத்துச் செல்லுங்கள்: "குறிப்பாக அவர் என்னுடன் பணிபுரிந்ததைப் போல மற்றவர்களுடன் பணியாற்றுவது கட்டாயமாக இருந்தது. கிரியைகள் இல்லாத விசுவாசம் இறந்துவிட்டது,..."
இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள்: "என் நண்பர் (எபி) எனது எல்லா விவகாரங்களிலும் இந்தக் கொள்கைகளை வெளிப்படுத்துவதன் முழுமையான அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக அவர் என்னுடன் பணிபுரிந்ததைப் போல மற்றவர்களுடன் பணியாற்றுவது கட்டாயமாக இருந்தது."
(பில்ஸ் ஸ்டோரி, ப.14:6)

ஒரு ஆன்மீக விழிப்புணர்வு உண்மையானது, ஏனெனில் அதன் விளைவாக நம் வாழ்க்கை மாறுகிறது. நம்மால் பார்க்கவும் உணரவும் முடியும். நம்மில் பலர் மிகவும் உயிருடன், அன்பாக, திறந்தவர்களாகவும், வாழ்க்கையில் முழுமையாகச் சேரக்கூடியவர்களாகவும் உணர்கிறோம். நாம் அனுபவிக்கும் விஷயங்களின் இயற்கையான மகிழ்ச்சியை அப்படியே அறிந்து கொள்கிறோம். அந்த சக்தி, அது நமது சொந்த சிறந்த மற்றும் உயர்ந்த இயல்பு அல்லது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருந்தாலும், நாம் அதற்குத் திறந்திருக்கும் போதெல்லாம், தட்டுவதற்கு நம்முடையதாகிறது. இது நமது செயல்களுக்கு வழிகாட்டுகிறது மற்றும் நமது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது. நாம் படிகளைச் செய்யும்போது இது படிப்படியாகவும் மெதுவாகவும் வருகிறது. நமது குணாதிசயக் குறைபாடுகளில் செயல்படுவதில் நாம் மேலும் மேலும் சங்கடமாக இருக்கிறோம், மேலும் ஆன்மீகக் கொள்கைகளைப் பயிற்சி செய்வதை எளிதாக உணர ஆரம்பிக்கிறோம்.
ஏ.ஏ.வின் ஸ்தாபக தருணம். பில் டபிள்யூ. தனது கதையை டாக்டர் பாப் உடன் பகிர்ந்துகொண்டார். நம்மிடம் இருப்பதைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே வைத்திருக்க முடியும், ஏனென்றால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நம் மீட்சியை வலுப்படுத்துகிறோம். ஆன்மீக விழிப்புணர்வின் செய்தி ஒருவேளை நாம் தனியாக இல்லை, நாம் நல்ல மனிதர்கள், நாம் நிதானமாக இருக்க முடியும், நாம் மீட்க முடியும், நம்பிக்கை இருக்கிறது. எங்களுடைய சொந்தக் கதையின் செய்தியை எங்களால் முடிந்தவரை நேர்மறையாக முன்வைக்கிறோம், மேலும் எங்களிடம் கேட்கப்படும்போது உதவிக்கு இருப்போம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் எந்தப் படிநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பார்க்கிறோம். நமது பழைய செயல்படாத எண்ணங்களின் பழக்கவழக்கங்கள், மனதில் பாய்ச்சல், வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நாம் எதிர்வினையாற்றும்போது, ​​நமது செயல்களை ஆணையிடுவது பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கிறோம். எல்லா செயல்களும் சிந்தனையில் பிறக்கிறது. எனது பழைய யோசனைகள் மற்றும் செயல்கள், வெறுமனே வேலை செய்யவில்லை. இப்போது, ​​நாம் இடைநிறுத்தப்பட்டு, உதவி கேட்கலாம், பின்னர் சம்பந்தப்பட்ட அனைவரின் அமைதி மற்றும் மன அமைதிக்கு பங்களிக்கும் வகையில் செயல்படக்கூடிய வகையில் பதிலளிக்கலாம். நேர்மை, தன்னலமற்ற தன்மை, தைரியம் மற்றும் இரக்கம் ஆகியவற்றின் நேர்மறையான கொள்கைகள் இயற்கையாகவே எழுகின்றன, பெரிய புத்தக ஆசிரியர்கள் பேசும் "வாழ்க்கையின் (நம்) எதிர்வினையின் ஆழமான மாற்றத்தை" நாம் அனுபவிக்கிறோம். (p.567:4 - ஆன்மீக அனுபவம், பிற்சேர்க்கை II) நமது புதிய தகுதியான நடத்தைகளின் ஆன்மீகப் பலன்கள் உண்மையானவை மற்றும் நாம் அவற்றுக்காக உழைத்தால் அது நிறைவேறும். நாம் மகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்காகவும், நமக்காகவும் ஆழமாக விரும்புகிறோம்.
நாம் செய்யும் எல்லாவற்றிலும் நன்றியுணர்வு அடிப்படை சக்தியாகிறது.
எங்கள் வாழ்க்கையை பேச விடுகிறோம்.

10/10/2022

Spiritual awakening: "It meant the destruction of self-centeredness...
There was a sense of victory, followed by such a peace and serenity as I had never known."
(Bill's Story, p.14:1,2)
The result of these steps: "Belief in the power of God, plus enough willingness, honesty and humility to establish and maintain the new order of things were the essential requirements."
(Bill's Story, p.13:5-14:0)
Carry the message: "Particularly was it imperative to work with others as he had worked with me. Faith without works was dead,..."
Practice these principles: "My friend (Ebby) emphasized the absolute necessity of demonstrating these principles in all my affairs. Particularly was it imperative to work with others as he had worked with me."
(Bill's Story, p.14:6)

A spiritual awakening is real because our lives are changed as a result. We can see and feel it. Many of us feel more alive, loving, open and better able to join fully in life. We come to know the natural joy of things experienced just as they are. That power, whether it is our own best and highest nature or a force beyond ourselves, becomes ours to tap into, whenever we are open to it. It guides our actions and provides inspiration for our continued growth. This comes about gradually and slowly as we work the Steps. We grow more and more uncomfortable acting out on our character defects, and begin to feel more at ease practicing spiritual principles.
The founding moment of A.A. was when Bill W. shared his story with Dr. Bob. We can only keep what we have by giving it away, because we reinforce our recovery by sharing it with others. The message of a spiritual awakening perhaps is that we are not alone, we are good people, we can stay sober, we can recover, and there is hope. We simply present the message of our own story, as positively as we can, and remain available to help when we are asked.
We see which Step we are meant to practice in each event of life. We are more aware of our old unworkable thoughts habits, that leap to mind, when we react to life events, that dictate our actions. All action is born in thought. My old ideas and actions, simply did not work. Now, we may pause, ask for help, and then respond in a workable way that contributes to the serenity and peace of mind of ALL concerned. The positive principles of honesty, selflessness, courage, and compassion arise naturally as we enjoy that "profound alteration in (our) reaction to life" that the Big Book authors speak of. (p.567:4 - the spiritual experience, appendix II) The spiritual benefits of our new worthy behaviors are real and will materialize IF we work for them. We deeply wish for others, as well as for ourselves, that we may be happy, joyous and free.
Gratitude becomes the underlying force in all that we do.
We let our lives speak.

10/10/2022

We are taught to Believe in the ‘Survival of the Fittest,’ that the World is Competitive and We must be 'top Notch ' to survive. We live comparing our successes against others successes. We live in fear of not surviving. Ask yourself: Is it true that winning will bring us genuine happiness? When we buy into this belief we are guaranteed to make ourselves unhappy in order to become happy. So, try dropping these sabotaging belief and instead choose to cultivate contentment, joy and bliss. Authentic and lasting happiness is about being who we really are and not something we have to strive for or can buy. Choose happiness now.
Blessed Friday 🙏🙏

10/10/2022

அடக்கம்

உதாரணமாக, நேர்மை மற்றும் சகிப்புத்தன்மை இல்லாததை நாம் அனைவரும் பார்த்தோம்.
சில சமயங்களில் சுயபச்சாதாபம் அல்லது மாயையின் தாக்குதல்களால் நாம் பீடிக்கப்பட்டோம்
தனிப்பட்ட மகத்துவம். ஆனால் இது ஒரு அவமானகரமான அனுபவமாக இருந்தாலும், அது
நாம் இன்னும் உண்மையானவற்றைப் பெற்றுள்ளோம் என்று அர்த்தமல்ல
பணிவு. இப்போது அடையாளம் காணப்பட்டாலும், எங்கள் குறைபாடுகள் இன்னும் இருந்தன.
அவர்களைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

- பன்னிரண்டு படிகள் மற்றும் பன்னிரண்டு மரபுகள், (படி ஐந்து) ப. 58

சிந்திக்க நினைத்தேன்
அடக்கமே அனைத்து நற்பண்புகளுக்கும் உறுதியான அடித்தளம்...

10/10/2022

Humility

All of us saw, for example, that we lacked honesty and tolerance,
that we were beset at times by attacks of self-pity or delusions of
personal grandeur. But while this was a humiliating experience, it
didn't necessarily mean that we had yet acquired much actual
humility. Though now recognized, our defects were still there.
Something had to be done about them.

- Twelve Steps and Twelve Traditions, (Step Five) p. 58

Thought to Ponder
Humility is the solid foundation of all virtues...

10/10/2022

ஒன்றை உருவாக்கா விட்டால் பராமரிக்க முடியாது. பராமரிக்காவிட்டால் உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறாது. அகத்தில் இருக்கும் அழுக்கை 4 - 9 வழிமுறைகளில் அகற்ற முயற்சித்தேன். இது ஒரு ஆக்கபூர்வமான செயல். நான்காவது மற்றும் ஐந்தாவது படியில் செய்த ஆக்க பூர்வமான பணியை பத்தாவது வழியில் பராமரிப்புப் பணியாக தொடர்ந்து செய்கிறேன். இது உருவாக்கியதைப் பராமரிக்கும் பணி. "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்." தொடர்ந்து அகத்தாய்வு செய்ய வேண்டும் என்று பத்தாவது படியில் பரிந்துரைக்கப் படுகிறேன். அகத்தாய்வு செய்வதை எனது அக ஒழுக்கமாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் மனசாட்சிக்குப் பணிந்து வாழ்வதுவே பரிகார வாழ்க்கை. 23 மணிநேரம் மனசாட்சிக்கு பணிந்து வாழ்கிறேன். ஒரே ஒரு மணி நேரம் மட்டும் என் உடல் இச்சைகளைப் பூர்த்தி செய்ய என் இஷ்டப்படி வாழ்ந்து கொள்கிறேன் என்பது மன தெளிவற்ற எண்ணமாகவே இருக்க முடியும். மனசாட்சிக்கு பணிந்து வாழ்வதால் என் புலன் இச்சைகள் பூர்த்தியடைய மாட்டா என்ற எண்ணம் எழுவது ஒரு மாயை. இந்த மாயையை விட்டு நான் விலகியாக வேண்டும். மனம் என்ற எனது ஆறாவது புலனால் அகத்தாய்வு செய்வதால் மட்டுமே எனது மற்ற புலன்கள் ஐந்தும் கூர்மை அடைகின்றன. "கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே" என்று அகஸ்தியர் பெருமான் உறுதிபடக் கூறுகின்றார். புலன்கள் கள்ளம் செய்யும் இயல்பு உடையனதான். இருந்தாலும் அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவு ஒளி பெற உதவுவதும் அந்த புலன்கள்தான். புலன்கள் அகத்தாய்வு செய்யப் பயன்படுத்தப் படுகையில், அவை படைப்பின் நோக்கத்திற்காக பயன் படுத்தப்படுகின்றன.

"ஒவ்வொரு முறை நான் மனதில் சலனமடையும் போதும், ஒவ்வொரு முறை நான் உள்ளச் சமநிலையை இழக்கும் போதும், ஒவ்வொரு முறை நான் அமைதியின்றித் தவிக்கும் போதும், என்னில் ஏதோ கோளாறு உள்ளது". இதனை ஒரு ஆன்மீக விதி என Bill W தெளிவுபடக் கூறுகிறார். இதற்கு விதிவிலக்காக எவரும் இருத்தல் சாத்தியமல்ல என்று உறுதிபடவும் கூறுகின்றார். நான் மனச்சலனப் படுவதற்கு காரணம் எனக்கு வெளியே இருக்கும் ஏதோ ஒன்று அல்ல. எனது புலன்களால் எழும் இச்சைகள் மட்டுமே என்னைச் சலனமுறச் செய்கின்றன. நான் மனச்சலனம் நீங்கி, மனத்தெளிவு அடைந்து நிதானமாக சிந்தித்து, பேசி, செயல்பட விரும்பினால், என் அகத்தினுள் சென்று அங்கு என்னை சலனப்படுத்தும் இச்சைகளைக் கண்டறிந்து களைந்தாக வேண்டும்.

புறப்பொருள்களால் நான் சலனம் அடைவது போல் தோன்றும் பொய்த் தோற்றத்தை என்னால் சீர் செய்ய முடியாது. மாயமானைப் பிடிப்பது சாத்தியமே அல்ல. சாத்தியமற்ற ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது மனத் தெளிவின்மையின் விளைவு. என்னைச் சுற்றி வாழும் மனிதர்கள் அனைவரும் என்னைப் போன்ற சராசரி மனிதர்களே. அவர்களும் என்னைப் போன்றே மாய மானைத் துரத்தி சென்று வாழ்கிறார்கள். கானல் நீரை துரத்துகிறார்கள்.

மற்றவர்களின் செயல்பாட்டை என் மனத் தெளிவற்ற செயல்பாட்டுக்கு நியாயமாக கூறித் திரிவது இன்னொரு மனத் தெளிவற்ற நிலை. நான் பைத்தியம் போல வாழ்வதற்கு ஒரு நியாயம் கற்பிப்பது எந்த வகையிலும் எனக்கு உதவப் போவதில்லை. எனது செயல்களுக்கு நான் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் இறைவனது திருவிளையாடல்கள். அவை எவ்வாறாக இருப்பினும், அவற்றால் நான் எனக்குள் பாதிக்கப்படுவது, எனது சக்தி இன்மையாலும், கட்டுப்பாடற்ற தன்மையாலும் மட்டுமே என்பதை AA செயல்திட்டம் தெளிவாக உணர்த்துகின்றது. என்னைச் சுற்றி நிகழ்வன என்னவாக இருப்பினும், எனது செயல்களைத் தேர்வு செய்யும் உரிமை என்னுடையது என்பது இப்போது தெளிவாக புரிகின்றது. ஆட்டுவிப்பது என்னுள் மன சாட்சியாக இருந்து என்னை ஆளும் ஆண்டவனாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, எனக்கு வெளியே இருக்கும் வேறு எந்த சக்தியாகவும் இருக்கலாகாது. எனது மனசாட்சி மட்டுமே என இயக்க வேண்டும். எனது மனசாட்சியே எனது செயல்கள் அனைத்தையும் படைக்கும் படைப்பாற்றலாக அமைதல் மிக மிக அவசியம்.

பிறர் என்னில் தூண்டிவிடும் உணர்வுகளால் நான் ஆட்டுவிக்க பட்டுக் கொண்டிருந்ததை எனது அகத்தாய்வில் தெளிவாக உணர்கிறேன். உணர்வுகள் என்னுள் இருந்தன. அவை பிறரால் தூண்டப்பட மட்டுமே செய்யப்பட்டன. என் உணர்வுகளால் மட்டுமே நான் செயல்பட்டேன். என் செயல்பாட்டிற்கு பிறரை காரணம் கூறி தீர்ப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் வரை என்னில் மாற்றங்கள் நிகழ்வது சாத்தியப் படவில்லை. நான் என்னையோ, பிறரையோ காயப்படுத்தும் ஒரு தீய செயல் செய்தமைக்கு, பிறரைக் காரணமாக கூறி சபிப்பேனெனில், உண்மையாக என்னை நானே சபித்துக் கொள்கிறேன் என்று மட்டுமே பொருள்படும்.

என் உணர்வுகளைத் தூண்டி தீச்செயல் செய்ய தூண்டுபவர்களை எனக்கு அனுபவம் அளிக்கும் ஆசிரியர்களாக நான் காண வேண்டும் என AA தோழமையை வந்தடைந்த பின்னர் தெரிந்து கொண்டேன். எனது தாறுமாறான உணர்வுகளைச் சமநிலைப்படுத்த அவர்கள் பெரிதும் உதவுகிறார்கள் என்று உணர்ந்தால், அவர்களை என் எதிரிகளாக பார்ப்பது குறைந்து கொண்டே வந்து காலப்போக்கில் மறைந்து விடும். இந்த கருத்தை இன்றைய தினமும் நம் சிந்தனைக்கு பகுதியைப் படித்து தெரிந்து கொள்கிறேன்.

10/10/2022

When I first encountered the Third Step prayer, I was taken aback by the part that asks, “Take away my difficulties.” I thought that was asking for a free pass to life. In Step Seven, we humbly ask for the God of our understanding to remove our “shortcomings.” What is a shortcoming? Coming soon? Coming only briefly? It’s an odd word. Eventually, I concluded that “difficulties” in the Third Step prayer referred to the same thing as “shortcomings” in Step Seven. It’s challenging to change habits while my defects are being healed. Often my behavior today doesn’t live up to the standards by which I wish to live.

Shortcomings are the difference between what I wish I had done and what I actually did. Working the program, following the path, means paying attention to shortcomings. It isn’t easy. There are “difficulties” which manifest as “shortcomings.” By the time I’m “entirely ready” to part with my character defects, I’ve learned a lot about my past behavior and how I wish to behave differently today. I have insights and standards I didn’t used to have. And then life happens, and sometimes when things get difficult, I come up short. Maybe, if we have difficulty seeing how the Third Step and the Seventh Step are connected, it’s a shortcoming.🙏

07/10/2022

ஆனந்தம்
ஆனந்தமாய் வாழ்வதுவும்
அழுதழுது மடிவதுவும்
அவனவனது தீர்மானம்.
அறிவால் இதையுணர்ந்தால்
எனதுயிர் விழிப்புறும்.
தீமையும் நன்மையும்
பிறர்தர வருவதில்லை.
ஆனந்தமாய் வாழ்வதற்கு
இக்கணமே தீர்மானிப்போம்.
ஆனந்தத்தின் பொருளென்ன?
இப்பொழுதில் இக்கணத்தில்
ஆனந்தமாய் இருக்கிறோமா?
எளிமையான இக்கேள்விக்கு
எதார்த்தமாய் பதில்கூற
நம்மால் இயலுமா?
எங்கெங்கோ தேடிப்பார்த்தோம்
எதைஎதையோ செய்துபார்த்தோம்
நிலையாய் ஆனந்தம்
நிரந்தரமாய் தங்கவில்லை.
வெளியில் தேடியதால்
குப்பைகளே சேர்ந்தன.
நம்மைக் கடந்து
நம்முள் தேடினால்
ஆனந்தம் ஊற்றெடுக்கும்.
உண்மை உணர்ந்து
நம்முள் தேடலை
முனைப்புடன் தொடங்குவோம்.
கடந்த 24 மணித்துளிகளில்
எத்தனை கணங்கள்
ஆனதமாய் இருந்தோம்?
நேற்றில் இன்று
நிலைமையில் முன்னேற்றம்
கொஞ்சமாவது உள்ளதா?
ஆனதமாய் வாழ்வதற்கே
அனைத்தையும் செய்கின்றேன்.
அடிப்படை நோக்கம்
நிறைவேறாது போகுமெனில்
வெறுமை செயல்களில்
சிக்குண்டு சீரழிந்து
எதிர்மறையாய் வாழ்ந்திடுவேன்.
நின்று நிதானித்து
சிந்தித்தல் அவசியம்.
செயலின் விளைவாய்
வருவதல்ல ஆனந்தம்.
ஆனதமாய் ஆரம்பித்தால்
அனைத்தும் சிறப்புறும்.
ஆனந்த அடித்தளமின்றி
செயலாற்றி வாழ்வதினால்
செய்வது அனைத்தும்
சித்திரவதையாய் அமைகின்றது.
வெளிப்புற சூழல்களை
திறமைக்கு தக்கவாறே
கையாள்வது சாத்தியம்.
விரும்பியது நிகழ்வதும்
விரும்பாதது நேர்வதும்
வாழ்வில் சகஜம்.
அநிச்சயமாய் இருப்பதுவே
வாழ்வின் தன்மை.
ஒருவன் விரும்புவதை
இன்னொருவன் வெறுப்பான்.
இதிலென்ன குழப்பம்.
ஆனந்தமாய் ஆரம்பித்தால்
நிகழ்வதும் நிகழாததும்
பொருட்டாய் அமையாது.
ஆனந்தமாய் இருப்பதால்
செயலாற்றும் முன்னரே
செயலின் பிடியினின்று
விடுபட்டு விடுகின்றோம்.
இத்தகைய சுதந்திரம்
துறவினால் நிகழ்வதல்ல.
ஆனந்தமாய் இருப்பதால்
சுதந்திரமாய் இருக்கிறோம்.
பொருட்கள் மனிதனை
செல்வந்தனாய் மாற்றுகின்றன
பொருளீட்டுதல் பிரச்சனையல்ல.
பொருட்களோடு நம்மையும்
பொருளாய் உணர்வதுவே
பிரச்சனைகளின் ஆரம்பம்.
பொருளோடு சேர்த்து
மனிதர்களையும் ஈட்டுதற்கு
முற்படும் மனநிலையால்
பிரச்சனைகள் உதிக்கின்றன.
என்கணவன் என்மனைவி
என்மக்கள் என்பெற்றோர்
எல்லோரும் சொத்துக்கள்
உயிரற்ற பொருள்களோடு
உயிருள்ளவையும் பொருளாகின்றன.
அனைத்தும் உயிருடன்
இருப்பதை உணராது
உலகனைத்தும் பொருளால்
நிறைந்திருப்பதாய் உணர்ந்தால்
உயிர்த்தன்மையை உணராது
உயிரற்று வாழ்ந்திருப்போம்.
உலகனைத்தும் உனதாக்கினாலும்
உன்னுள் உறைந்திருக்கும்
உயிர்தன்மையான மறைபொருள்
மென்மேலும் விரிவடைய
விடாமல் துடித்திருக்கும்.
உயிர்தன்மையும் இறைத்தன்மையும்
ஒன்றுகொன்று பிரியாதவை.
சேகரித்த பொருள்மேல்
வைத்திருக்கும் பற்றினை
விட்டுவிட்டு யோசித்தால்
அடையவேண்டும் இலக்கென
ஆனந்தத்தைக் கருதமாட்டோம்.
ஆகாயத்தில் தொங்கும்
பொருளல்ல ஆனந்தம்.
காலடியில் கையருகில்
நிலைத்திருப்பது ஆனந்தம்.
ஆனந்தம் அடித்தளமென
உறுதியாய் உணரவேண்டும்.
அறிவதாலும் புரிவதாலும்
வருவதல்ல ஆனந்தம்.
குருவுடன் அமர்கையில்
அவருடைய சக்தியால்
உடலும் மனமும்
இயல்பாய் ஒருங்கிணைந்து
ஆனந்தத்தைத்தூண்டுகின்றன.
தூண்டுதல் குருவிடமிருந்து
வருவது உண்மைதான்.
ஆழ்மனதில் இருப்பதை
குருவானவர் தூண்டுகிறார்.
ஆனந்தத்தை உன்மேல்
அபரிமிதமாய் போழிவேநென
வாக்களிப்பது பொய்யானது.
ஆனந்தமாய் இருப்பதற்க்கான
சூழலை உருவாக்குதல்
ஆனந்தத்தைப் பொழிகலாகாது.
ஆனந்தம் ஆழ்மனதிலிருந்து
ஊற்றெடுக்கும் ஒன்றாகும்.
செயல்களின் விளைவாய்
வருவதல்ல ஆனந்தம்.
செயலிலும் செயலின்மையிலும்
பரிதாபமாய் வாழ்வதொன்றே
மனிதரில் காணப்படும்
மாபெரும் தவறு.
வாழ்ந்த வாழ்க்கையை
கூர்ந்து கவனித்தால்
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
காரணங்களை உருவாக்கி
பரிதாபமாய் வாழ்ந்ததை
தெளிவாய் உணரலாம்.
சிந்தனையில் ஆனந்தம்
உள்ளதென நினைப்பது
பொய்யான தொற்றமே.
ஆனந்தமோர் உணர்ச்சிஎன
சிந்தித்துப் பழகிவிட்டோம்.
உணர்வுகள் நன்மையானவையே
உணர்வுகளை உருவாக்குதல்
ஒருக்காலும் சாத்தியமல்ல.
உணர்வுகளை உருவாக்குதல்
நடிப்பதாகவே அமையும்.
நடிகனாக வாழ்வது
வலிதரும் அனுபவம்.
ஆனந்தம் இருக்கின்றது.
ஏற்கெனவே இருப்பதை
எவ்வாறு உருவாக்குவது?
இருப்பதோடு இணைந்தால்
எல்லாமே ஆனந்தம்.
வருவதும் போவதும்
உணர்வுகளின் தன்மை.
ஆனந்தமோர் உணர்வல்ல.
இருப்பது ஆனந்தம்
எப்படியாவது ஆனந்தத்தை
உருவாக்கி மகிழ்வேநென்று
வாழ்வது அறியாமை.
எதற்கு ஆனந்தம்?
ஏனதைத் தேடவேண்டும்?
நம்முடைய உயிர்த்தன்மை
ஆனந்தத்தின் இருப்பிடம்.
இருத்தலின் அடிப்படை.
ஆனந்தமின்றி வேறில்லை.
எனவேதான் செயலனைதும்
ஆனந்தத்தை எதிர்நோக்கியே
எப்பொழுதும் செய்யப்படுகின்றன.
எவ்வளவு குழப்பினாலும்
திரும்பவும் ஆனந்தத்தை
விடாது முயற்சிக்கின்றோம்.
அடைந்தோமா இல்லையா
என்பது பொருட்டல்ல.
தேடுதல் உண்மைதானே!
தேடும் முறைகள்
மனிதனைப் பொறுத்தது.
பணத்தாலும் புகழாலும்
மதுவாலும் மங்கையாலும்
தவத்தாலும் தானத்தாலும்
ஆனந்தம் தேடுகிறோம்.
செயல்களின் பலனாய்
ஆனந்தம் கிடைக்காதது
தெளிவாய்த் தெரிந்தும்
செயல்களின் மூலமாய்
தொடர்ந்து தேடுதல்
மடமை அல்லவா!
செயலால் தேடாது
நேராய் ஆனந்தத்தை
அறிதல் அவசியம்.
John B.

Videos (show all)

Telephone

Website