PPM Development Trust
ஊரின் நன்மைகாக ஏற்படுத்தப்பட்டது அல?
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பின் உறவுகளே
நமது ஊரை சார்ந்த சகோதரர் ஜாவூர் ரஹ்மான் அவர்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் அவரது தலையில் அடிபட்டு மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக் கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறையதன் பெயரில் மதுரையில் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அவரது நண்பர்கள் உதவியதன் பெயரில் அவரது தலையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கின்றார்.
தற்போது மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர் அதற்கான பொருளாதார வசதி இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர்கள் உங்களின் உதவியை கேட்டு நம்மை நாடியுள்ளார்கள். எனவே தயவு செய்து சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை அவருடைய குடும்பத்தினருக்கு செய்து அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதுடன் அவருக்காக எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
அவரது குடும்பத்தினருடைய பேங்க் விவரம் இத்துடன் இணைக்கபட்டுள்ளது முடிந்தவர்கள் அவர்களுக்கு நேரடியாக கொடுத்து உதவவும்.
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள் - பெரியபட்டிணம் வளர்ச்சி அறக்கட்டளை
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு அவசர மருத்துவ உதவி சகோதரர்களே
பெரியபட்டணம் பாம்பு பெத்தா மகனும் அஸ்பர்கான் ஆயிஷா அம்மாள் அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள் அவர் மகன் நிபருதீன் என்பவரை தவாபுல் கரீம் மனைவி சிராஜ் அவர்கள் வளர்த்து வருகிறார்
அந்த நிபாரூதீன் என்பவருக்கு மூளையில் இப்போது ரத்த கசிவு ஏற்பட்டு அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்
அவர் இப்போது இராமநாத புரம் ஆசீக் அமீன் தனியார் மருத்துவ மனையில் ஆபரேஷன் பண்ணுவதற்காக சேர்த்து வைத்துள்ளார்கள் சகோதரர்களே, தாய் தகப்பன் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் இந்த சகோதரின் உயிரை காத்திட உங்களால் முடிந்த நிதியை கொடுத்து அவருக்கு உதவி செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் பெரியபட்டினம் உறவுகளே,
இறைவனின் மாபெரும் கிருபையால் பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை உங்களின் சேவையில் தொடராக ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி கொண்டு வருகிறது இந்த சேவையின் மூலமாக நமது ஊர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் அவசர தேவைக்கு தொடர்ந்து உதவி வருகிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
மேலும் நமது ஆம்புலன்ஸில் ஜனாசா ஏற்றி செல்வதை தவிர்க்கும் விதமாக நமது ஆம்புலன்ஸ் நமது மற்றும் அக்கம் பக்கது ஊர்களில் இறந்தவர்களின் உடலை ஏற்றி செல்வதை தவிர்த்து அவசர கால உதவிக்கு மட்டுமே செல்லும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இறந்தவர்களின் உடலை ஏற்றி செல்வதற்கு என்று பல தொண்டு நிருவனங்கள் அதற்கென பிரத்தியோகமான வாகனங்கள் ஏற்பாடு செய்கின்றனர் அதனை பயன் படுத்திக் கொள்ளவும் எனவே தயவு செய்து நமது ஆம்புலன்ஸை அவசர கால மருத்துவ தேவைகளுக்கு மட்டும் அழைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆம்புலன்ஸ் 24/7 அழைக்க வேண்டிய எண்கள்
9842 000 108
9942 000 108
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள் - பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு உறவுகளே அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நமது பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் சேவை எவ்விதமான தொய்வும் இல்லாமல் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதற்கும் இந்த ஆம்புலன்ஸ்சின் அனைத்து பராமரிப்புக்களையும் தொடர்ந்து செய்து வருவதற்கும் உங்களின் ஆதரவு மிகவும் உதவியாக இருக்கின்றது
மேலும் மாதந்திரமாகவும் வருடாந்திரமாகவும் உதவிகள் செய்து வரும் அனைத்து உறவுகளுக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் மேலும் நல்லருள்புறிந்திட துவாச் செய்கின்றோம்
அல்ஹம்துலில்லாஹ் இந்த வருடம் நமது ஆம்புலன்ஸில் அனைத்து பராமரிப்பு பணிகளும் சிறப்பாக முடித்துவிட்டது பராமரிப்பு, இன்ஸூரன்ஸ், ரோடு வரி, எஃப்சி, போக்குவரத்து அதிகாரிகள் பொருத்த சொன்ன ஆம்புலன்ஸ் விளக்கு உள்பட அனைத்தும் சிறப்பாக முடிந்து மக்களின் சேவைக்காக தயார் நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். புகைப்படம் உங்களின் பார்வைக்கு.
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு உறவுகளே அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நமது பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் சேவை எவ்விதமான தொய்வும் இல்லாமல் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதற்கும் இந்த ஆம்புலன்ஸ்சின் அனைத்து பராமரிப்புக்களையும் தொடர்ந்து செய்து வருவதற்கும் உங்களின் ஆதரவு மிகவும் உதவியாக இருக்கின்றது
மேலும் மாதந்திரமாகவும் வருடாந்திரமாகவும் உதவிகள் செய்து வரும் அனைத்து உறவுகளுக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் மேலும் நல்லருள்புறிந்திட துவாச் செய்கின்றோம்
அல்ஹம்துலில்லாஹ் இந்த வருடம் நமது ஆம்புலன்ஸில் அனைத்து பராமரிப்பு பணிகளும் சிறப்பாக முடித்துவிட்டது பராமரிப்பு, இன்ஸூரன்ஸ், ரோடு வரி, எஃப்சி, போக்குவரத்து அதிகாரிகள் பொருத்த சொன்ன ஆம்புலன்ஸ் விளக்கு உள்பட அனைத்தும் சிறப்பாக முடிந்து மக்களின் சேவைக்காக தயார் நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். புகைப்படம் உங்களின் பார்வைக்கு.
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை உங்கள் சேவையில்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு உறவுகளே
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபை கொண்டு உங்களுடைய உதவியை கொண்டும் இந்த வருடம் ஆம்புலன்ஸ்க்கு உண்டான எஃப் சி இன்சூரன்ஸ் பெர்மிட் சிறப்பாக நிறைவுற்றது இந்த ஆம்புலன்ஸ் உங்களுக்காக சேவை செய்வதற்கு தயாராக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் இதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்
முக்கிய குறிப்பு
இந்த வருடம் வண்டி எப்சிக்கு காட்டும் பொழுது எஃப் சியின் பொழுது போக்குவரத்து துறையினர்கள் ஆம்புலன்ஸில் பெரிய பார்லைட் மாட்ட வேண்டும் இந்த ஆம்புலன்ஸ் பெரிய வாகனமாக இருப்பதாலும் இது ஆம்புலன்ஸ் என்பதாலும் கண்டிப்பாக பார்லைட் பொருத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்
எனவே அந்த பெரிய பார்லைட் பொருத்துவதற்கு நிர்வாகிகள் முடிவெடுத்து உள்ளோம் அதன் விலை சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை வருகின்றது இந்த பார்லைட் மாட்டுவதற்கு யாரவது சகோதரர்கள் உதவி செய்வதாக இருந்தால் அல்லது முழுவதுமாக வாங்கி அறக்கட்டளைக்கு ஸ்பான்சர் செய்வதாக இருந்தாலும் அல்லது பகுதியாக உதவுவதாக இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தலைவர் மற்றும் - நிர்வாகிகள் பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :👇
+91 88077 79638
+91 94882 66622
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் பெரியபட்டின வளர்ச்சி அறக்கட்டளையின் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை பொதுமக்கள் சேவைக்காக இரண்டு ஆக்சிஜன் செரிவூட்டி இயந்திரங்கள் (OXYGEN CONCENTRATION) (ஆக்சிஜன் உற்பத்தி செய்து நோயாளிக்கு தேவையான அளவு கொடுக்கும்) இவை பொதுமக்கள் சேவைக்காக ஊரில் அறக்கட்டளை அலுவலகத்தில் தயாராக உள்ளது யாருக்காவது இது அவசரமாக தேவைபட்டால் வழங்கப்படும்.
மூச்சுத் திணரல் போன்ற அசவுரியங்களால் பாதிக்கபட்டுள்ளவர்களுக்கு அவசரமாக தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் இவை கொடுக்கப்படும் இதற்கான கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை உபயோகிப்பவர்கள் அறக்கட்டளைக்காக விருப்பட்ட தொகையை இந்த சேவைக்காக கொடுக்கலாம். தேவைபடுபவர்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு செல்லவும் மீண்டும் தேவை முடிந்து மீண்டும் கொண்டுவந்து கொடுக்கவும் அவர்களே வாகனம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும், அதனை தேவைப் படுபவர்களுக்கு எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்ற விவரங்கள் சொல்லி கொடுக்கவும் உதவி செய்திடவும் ஊர் நிர்வாகிகள் தயாராக உள்ளனர்.
இந்த இயந்திரத்தை வாங்கி அறக்கட்டளைக்கு கொடுத்து உதவிய சகோதரர்களின் குடும்பத்தினருக்கு அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இது போன்ற நல்ல சேவைகளை அறக்கட்டளை மூலமாக இணைந்து செய்ய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக எங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள் - பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
ஊர் நிர்வாகிகள் தொடர்புக்கு : 880 777 9638 - 9488 2666 22
24/7 அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு – 9842 000 108 – 9942 000 108
Alhamdulillah இன்றுடன் அறக்கட்டளை உருவாகி 4 வருடங்கள் ஆகி உள்ளது Alhamdulillah இதுவரைக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் எந்த ஒரு தொய்வில்லாமல் சிறப்பாக சேவையற்றி வருகிறது இந்த ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் இதுவரைக்கும் இந்த ஆம்புலன்சை சிறப்பாக பராமரித்து வருவதற்கு சந்தா மற்றும் நன்கொடை வழங்கி வரும் அனைத்து சகோதரர்களுக்கும் அறக்கட்டளை நிர்வாகிகளின் சார்பாக நன்றி கலந்த சலவாதினத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த அறக்கட்டளை இன்னும் அதிகமான மக்கள் சேவை செய்வதற்கு அல்லாஹ்வுடைய உதவியும் உங்களின் உதவியேயும் நாடுகிறோம் நீங்கள் எங்களுக்கு உதவி கரம் நீட்டி இன்னும் அதிகமான மக்கள் சேவை செய்வதற்கு உதவி புரியுங்கள்
மேலும் இதன் மூலம் பயன்படும் அனைத்து மக்களுடைய துஆவும் உங்களுக்கு வந்தடையும் இதுபோக அறக்கட்டளை நிர்வாகிகளும் உங்களுக்காக துவா செய்து கொள்வார்கள் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் பெரியபட்டணத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆசியா அவர்களின் மகன் விருமாண்டி அபி அவர்களின் தம்பி காதர் அவர்கள் தற்போது வேலம்மாள் மருத்துவ மனையில் இருக்கிறார் அவருக்கு ஓப்பன் சர்ஜரி செய்ய சொல்லி டாக்டர்கள் சொல்லி உள்ளார்கள் அவர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர் என்பதால் உங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக அவருக்கு கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அவருக்காக உங்கள் தொழுகைகளில் துவா செய்து கொள்ளுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் பெரியபட்டினம் உறவுகளே,
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை பொதுமக்கள் சேவையின் ஒரு படியாக ஆக்சிஜன் செரிவூட்டி இயந்திரம் (OXYGEN CONCENTRATION) இந்த (இயந்திரம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து நோயாளிக்கு கொடுக்கும்) ஊரில் யாருக்காவது அவசரமாக தேவைபட்டால் 2 இயந்திரம் உதவுவதற்கு அறக்கட்டளை அலுவலகத்தில் தயாராக உள்ளது.
அவசரமாக தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் கொடுக்கப்படும் இதற்கான கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை உபயோகிப்பவர்கள் அறக்கட்டளைக்காக முடிந்த தொகையை இந்த சேவைக்காக கொடுக்கவும். தேவைபடுபவர்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போகவும் மீண்டும் கொண்டுவந்து கொடுக்கவும் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும், அதனை தேவைப்படுபவர்களுக்கு மாட்டவும் எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்ற விவரங்கள் சொல்லிகொடுக்கவும் எங்கள் நிர்வாகிகள் உதவி செய்வார்கள்.
இந்த இயந்திரத்தை வாங்கி அறக்கட்டளைக்கு கொடுத்து சகோதரர் ராஜிக் (காங்கிரஸ்கட்சி) மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புறியட்டும்.
மேலும் இது போன்ற சேவைகளை அறக்கட்டளை மூலமாக இணைந்து செய்ய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக எங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள் - பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
ஊர் நிர்வாகிகள் தொடர்புக்கு : 8124275262 – 9488266622 - 8807779638
மற்றும் அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு – 98420 00108 – 99420 00108
அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லாம் வல்ல ஏக இறைவனின் அருளால் பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை மூலமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நமது ஊருக்கும் நமது சுற்று வட்டாரத்திற்கும் நமது ஆம்புலன்ஸ் சேவையை மிகவும் சிறப்பாக செய்து வருகிறோம். இந்த சேவையை தொடர்ந்து செய்வதற்கு ஏற்கனவே உதவிகள் செய்து வரும் சகோதரர்களுடன் தாங்களும் இணைந்து எங்களுக்கு உதவி செய்யும் படி மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் நமது ஆம்புலன்ஸ் சேவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதிலும் அந்த கொரோணா காலகட்டத்தில் நமது சேவை மிகவும் சிறப்பு மிக்கதாகவும் மிகவும் உதவியானதாகவும் இருந்தது என்றும் அதற்காக நமது அறக்கட்டளை நிர்வாகிகளை அழைத்து கவுரப்படுத்த வேண்டும் என்றும் நமது ஊரில் உள்ள அரசு மருத்துவமனை அதிகாரிகள் அவர்களுடைய மேல் அதிகாரியும் விருப்பம் தெரிவித்து நம்மை அழைத்திருந்தனர் அதனடிப்படையில் நமது நிர்வாகிகள் அங்கு சென்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறிய விழாவில் கலந்துகொண்டனர் அவர்கள் சார்பாக அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் சேவையை பாராட்டி பட்டயம் வழங்கி கவுரவித்தனர்.
அறக்கட்டளை சார்பாக நாமும் அவர்களுக்கு நன்றி செலுத்திக்கொண்டோம். அதனுடைய சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.
நன்றியுடன் என்றும் உங்கள் சேவையில்
நிர்வாகிகள் - பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கடளை
அஸ்ஸலாமு அலைக்கும்
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் சேவைக்காக பெரியபட்டினம் SDPI கிளை சார்பாக ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமாக கொடுத்து உதவியுள்ளார்கள். SDPI சகோதரர்களுக்கு பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக நன்றி கலந்த சலாவாத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதனால் பயனடையும் அனைத்து மக்களும் உங்களுக்காக துவா செய்து கொள்வார்கள்
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
நல்லாசிரியருக்கு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற்ற பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக எவ்விதமான சாதி மதம் பேதம் பார்க்காமல் மாணவ மாணவிகளுக்கு நல்ல ஆசிரியராகவும் பெரியபட்டிணம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு நல்ல நண்பராகவும் சிறப்பாக செயலாற்றி வரும் (கணிதம்) ஆசிரியர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தது ஒட்டு மொத்த பெரியபட்டின மக்களுக்கும் கிடைத்த விருதாக நினைத்து ஊர் மக்கள், மாணாக்கள், சார்பாக பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தங்களுக்கு மென்மேலும் பல விருதுகள் கிடைத்திட வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை
அன்பிற்குரிய சகோதரர்களே
தங்களது சுய நலத்திற்காக அறக்கட்டளையின் தளத்தில் உள்ள பழைய பதிவுகளை எடுத்து மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் தாங்கள் தங்களது தளங்களில் தங்களுடைய பதிவுகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் பெரியபட்டினம் உறவுகளே இன்ஷா அல்லாஹ் விரைவில் மழைகாலம் ஆரம்பம் ஆக உள்ளது சில பகுதிகளில் இப்பொழுதே மழைகாலம் ஆரம்பித்து விட்டது. நமது ஊரின் நீர் ஆதாரமாக விளங்கும் பல குளங்கள் தூர் வாரப்பட்டு மராமத் பணிகள் நடைபெறாமல் உள்ளது வரும் மழைகாலத்தில் நீர் நிலைகளில் நீர் தேக்கி வைப்பது நமது அடுத்து வரும் கோடைகாலத்தில் ஊர் கிணறுகளில் நீர் வற்றிடாமல் இருக்க உதவியாக இருக்கும் இதனை மனதில் கொண்டு பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக் ஊராட்சி மன்றத்தலைவரிம் ஊரில் உள்ள குளங்களை தூர்வாரி மராமத் செய்வதற்கான மனு இன்று அறக்கட்டளை நிர்வாகிகளால் கொடுக்கபட்டுள்ளது.
விரைவில் இதற்கான முயற்சிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என நம்புவோம்.
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
பெரியபட்டினம் வளர்ச்சி அறக்கட்டளை