Nawalapitiya News
நாவலப்பிட்டிய செய்திகள் மற்றும் விள?
நாவலப்பிட்டி சேலம் பிரிஜ் அல் இக்ரா பாலர் பாடசாலையில் 26.09.2023 அண்மையில் இடம்பெற்ற சிறுவர் கண்காட்சியைக் காணலாம்.
Used Nikon 5600 for sale
Condition
Used - like new
Brand Nikon
Used Nikon D5600 DSLR Camera sale
> 24.2MP DX-Format CMOS Sensor
> EXPEED 4 Image Processor
> 3.2″ 1.037m-Dot Vari-Angle Touchscreen
> Full HD 1080p Video Recording at 60 fps
>Suitable for any events, photography, vlogging and many other activities
The package includes
> Nikon 5600 body (Brand new - 280,000)
>18-140mm kit lens VR (Brand new - 120,000)
>50mm prime lens (Brand new - 70,000)
>Yunteng VCT-680RM Aluminum Tripod ( Brand new - 9,000)
>Small Clear Dry Box DB - 2820 with Silica Unit (Brand new - 14,500)
>caseman bag (shoulder bag) (Brand new - 20,000)
>Two batteries (Original and Spare) - (worth for 30,000)
>Charger (Included)
Camera Shutter Count - 29,500
If you are taking the same as brand new you have to spend more than 500,000/- for sure.
I'm selling this due to migration, need some funds. I will give the same for the highest offer.
77 265 6553
நாவலப்பிட்டியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
நாவலப்பிட்டி, மஹகும்புர பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் சுவர் அமைப்பதற்கான அடித்தளமொன்றை வெட்டிக்கொண்டிருந் வேளையில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது பூமிக்கு அடியில் புதையுண்ட நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி,வெரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
゚ ゚viral #நாவலப்பிட்டிய #நாவலப்பிட்டியபொலிஸார் #நாவலப்பிட்டி
ஆஷானி
#ஆஷானி ゚viral ゚
சீனப்பெண்ணுக்கு நாவலப்பிட்டிய இளைஞர்கள் செய்த மோசமான செயல்
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.
ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காக தடியால் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, வீதி வழிகாட்டி ஒருவருடன் எல்ல ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
நாவலப்பிட்டி, இங்குருஓயா ரயில் நிலையத்தை அடையவிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இங்குருஓயா பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் எனவும், அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், சீனப் பெண் பொலிஸாருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் பதிவு பின்வருமாறு,
‘நானும் எனது குடும்பத்தினரும் இலங்கையை மிகவும் நேசிக்கிறோம். அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இலங்கை பற்றிய எனது நல்ல எண்ணங்களை பாதிக்க விடமாட்டேன். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு என்றென்றும் நிலைத்திருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.
#நாவலப்பிட்டிய #நாவலப்பிட்டியபொலிஸார்
நாவலப்பிட்டி மீப்பிட்டியவில் ஜீப் விபத்து; சாரதி படுகாயம்
நாவப்பிட்டி மீப்பிட்டிய பெரிய அனுருத்த பாடசாலைக்குச் செல்லும் வீதியில் இன்று 05.08.2023 மாலை ஜீப் வண்டி குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது;
அனுராத பாடசாலைக்கு செல்லும் வீதியில் சற்று ஏற்றம் காரணமாக ஜீப் வண்டி மேல் நோக்கி சொல்ல எத்தனித்த போது இயந்திர கோளாரு காரணமாக வண்டி பின்னோக்கி சென்று சாரதியினால் கட்டுப்படுத்த முடியாது போனதால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் ஆடிவேல் திருவிழாவில் நேற்று 01.08.2023 வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சித்திரத் தேரில் ஆரோகணித்து நகர் வீதி உலா.....
மழைக்காலம்...
Night with Nawalapitiya
Evening Nawalapitiya
நாவலப்பிட்டியில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கர வண்டிகளின் அனைத்துவிதமான தரமான முத்திரை பதிக்கப்பட்ட உதிரி பாகங்களை மிகவும் மலிவாக பெற்றுக்கொள்ள
(இன் மோட்டர்ஸ்).
அம்பகமுவ வீதி 93, நாவலப்பிட்டி.
தொலைபேசி 0742323255
Be ready for vesak
வெசக் பண்டிகைக்கு ஆயத்தமாகிறது நாவலப்பிட்டி
அழகு கொட்டிக் கிடக்கும் நாவலப்பிட்டி
#
வவுனியா பஸ் விபத்தில் உயிரிழந்த நாவலப்பிட்டிய பெண்
வவுனியாவில் இன்றிரவு (நவ.05) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
(Photos) நாவலப்பிட்டியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்
நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த தனியார் பேருந்தின் சாரதி உட்பட பலர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வீதியின் வளைவுக்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டு பேருந்துகளும் அதிவேகமாகச் செலுத்தப்பட்டதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பேருந்துகளிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குழுவொன்று இருந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#நாவலப்பிட்டி #பேருந்துகள் #நேருக்குநேர் #மோதிவிபத்து
நாவலப்பிட்டியில் 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத் தோட்டாக்களுடன் ஒருவர் கைது
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் (06.10.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டாக்களும், மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் (07.10.2022) ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, சந்தேக நபர் மேற்படி துப்பாக்கியை எங்கிருந்து எடுத்து வந்தார்? என்ற கேள்விக்கு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#நாவலப்பிட்டி
உண்மையான ஆயுத பூஜை
Real AyudhaPooja
#ஆயுதபூஜை
Nawalapitiya sri kathiresan kovil
பொன்னி நதி பாக்கனுமே!!!
#பொன்னிநதிபாக்கனும்