Kadavulgoddios
Nearby places of worship
Coimbatore 641001
Coimbatore, Coimbatore
Coimbatore 641001
Coimbatore 641001
Coimbatore 641001
Jecho Pumps Street, Coimbatore
Iskcon Coimbatore, Coimbatore
Coimbatore
Coimbatore 641018
Kavundampalayam, Coimbatore
Trust in god u find salvation� Namahshivaya
#பாலபிஷேகம் என்பது, #திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் முக்கியமான ஒரு பூஜை.
இது முருகப்பெருமானின் அருளை பெறும் மிகவும் புனிதமான மற்றும் பிரபலமான அபிஷேகமாகும்.
#பாலபிஷேகத்தின் #முக்கியத்துவம்:
#அபிஷேக #முறை: இதில் முருகப்பெருமானின் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்படுகிறது. இது பக்தர்களின் வாழ்வில் செழிப்பையும், ஆரோக்யத்தையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.
#பொதுவான #காலம்: பாலபிஷேகம் பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் இதற்கு சிறப்பு அளிக்கப்படுகிறது.
#பெருமைகள்: பாலபிஷேகம் செய்தால், மனசாட்சியும், புத்திசாலித்தனமும் மேம்படும் என்று கூறப்படுகிறது. மேலும், வாழ்க்கையில் சுபீடானம், சந்தோஷம், நன்மை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
#அபிஷேக #செயல்முறை:
#தயாரிப்பு: தெய்வீக பால் (தூய்மையான பால்) மிக நன்றாக தயாரித்து, தெய்வத்தின் அருகில் வைத்து மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.
#அபிஷேகம்: முருகன் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனுடன் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளைச் சொல்கிறார்கள்.
பாலபிஷேகம் முறைபடி செய்யும் போது, அதனைப் பார்க்கும் பக்தர்களும் பெருமையுடன் தங்களை உணர்வார்கள்.
17/5/2024 இன்று
#கன்னிகா #பரமேஸ்வரி #பூஜை என்பது பல கன்னிகைகளை (சமூதாயத்தில் கன்னியர்களாக கருதப்படும் கன்னியர்களை) பூஜை செய்வது அல்லது மரியாதை செய்வது. இது ஹிந்து மதத்தில் பெண்களின் தூய்மை மற்றும் சக்தியை வணங்குவதற்கான ஒரு புனிதமான முறை.
கன்னிகா பரமேஸ்வரி பூஜை செய்யும் #வழிமுறைகள்:
#பதிவாளர் #சுத்தம்: பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கன்னிகைகளை வரவேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
#கன்னிகைகள் #தேர்வு: 5 அல்லது 9 கன்னிகைகளை அழைத்து வரவேற்கலாம்.
#பூஜை #ஆர்த்தி: கன்னிகைகளை மரியாதை செய்வதற்கான பூஜை மற்றும் ஆர்த்தி செய்வது.
#தெய்வீக #உணவு: கன்னிகைகளை நன்றி சொல்லும் வகையில் அன்னம் மற்றும் இனிப்புகளை அளிக்கவும்.
#பரிசுகள்: கன்னிகைகளுக்கு புதிய உடைகள் அல்லது பரிசுகளை வழங்குதல்.
#அன்னதானம்: கன்னிகைகளுடன் சேர்ந்து மற்றவர்களுக்கும் அன்னதானம் வழங்குதல்.
இந்த பூஜை செய்வது மகிழ்ச்சியையும், சக்தியையும், மற்றும் அருளையும் பெறுவதற்கானதாக கருதப்படுகிறது.
Kadavulgoddios
சதுர்த்தி விரதம்
#திருநள்ளாறு #சனீஸ்வர #பகவான் #கோயிலில் #தரிசனம், #பரிகாரம் செய்ய சில வழிமுறைகள்!
சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.
சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய "போகமார்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது. சமணர்களுக்கு எதிரான சம்பந்தரின் அனல் வாதத்தில், இந்தப் பதிகம் எழுதப்பட்டிருந்த சுவடிகள் மட்டும் கருகாமல் இருந்ததால் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறது. விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. விடங்க என்றால் 'செதுக்கப்படாத மூர்த்தி' என்று பொருள். ஏழு சுயம்புத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
தேவர்களை மறுத்து நிடத நாட்டு மன்னன் நளனைக் கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தார்கள். எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து சேவகனாக மாறினான் நளன். பின்னர் இங்குள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான். அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது. சனிபகவானின் கருணையை எண்ணி நளராஜனே பலவிதமான பண்டிகைகளை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தான். இவன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம். நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும்.
திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.
திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். எள் தீபம் ஏற்றுவது தொடங்கி அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி விரிவாக படிக்க
கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம். எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப்பெறுபவர். நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி வாழலாம்.
29/01/2024
இன்று #சங்கடஹர #சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி? யார் கடைபிடிக்கலாம்? - முக்கிய கேள்விகளும், பதில்களும்
அமாவாசை மற்றும் பெளர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு பிறகு வருவது சுக்லபட்ச சதுர்த்தி என்றும், பெளர்ணமிக்கு பிறகு வருவது கிருஷ்ணபட்ச சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. பெளர்ணமிக்கு பிறகு வரும் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். வாழ்வில் அத்தனை வித கஷ்டங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடியது சக்தி இந்த நாளுக்கு உண்டு. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது நீங்கள் விடும் அல்லது பிரச்சனை தீர்வதற்கான வழி பிறக்கும் என்பத ஐதீகம்.
• சதுர்த்தி என்றால் என்ன?
சந்திரனின் இயக்கத்தை பொருத்து கணிக்கப்படும் திதி சதுர்த்தி எனப்படுகிறது. அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி ஆகும். வடமொழியில் சதுர் என்பது நான்கு என்பதை குறிக்கும். ஒவ்வொரு 15 நாளைக்கு ஒருமுறை சந்திரனின் சுழற்சியால் சதுர்த்தி திதி வருகிறது.
• சதுர்த்தி விரதம் இருக்கும் முறை என்ன?
விநாயகப் பெருமானின் அருளை பெறுவதற்காக இருக்கும் விரதம் சதுர்த்தி விரதம் ஆகும். விநாயகர் எளிமையான தெய்வம் என்பதால் சதுர்த்தி விரதமும் எளிமையானது. சதுர்த்தியன்று காலையில் நீராடி, விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். அருகம்புல், வெள்ளெருக்கு ஆகியவற்றால் விநாயகருக்கு மாலை கட்டி போடலாம். முடிந்தவர்கள் நாள் முழுவதும் உபவாசம் இருக்கலாம்.
• என்ன நைவேத்தியம் படைக்கலாம் ?
விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், அவல், பொரி, கொழுக்கட்டை, சர்க்கரை, சர்க்கரை பொங்கல், சுண்டல் இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது எதெல்லாம் முடியுமோ அவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
• சதுர்த்தி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?
சதுர்த்தி விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், நோய் உள்ளவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள், பலவிதமான வாழ்க்கை கஷ்டங்களால் அவப்படுபவர்கள் இந்த விரதத்தை இருக்கலாம். கேது தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் விநாயகரை வழிபடலாம்.
• சதுர்த்தி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் குழப்பங்கள் அகலும், வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள், கிரக தோஷங்கள் விலகும், சங்கடங்கள் நீங்கும். காரிய தடை நீங்கும். சகல விதமான செளபாக்கியங்களும் ஏற்படும்.
• எந்த நேரத்தில் விரதத்தை துவங்க வேண்டும்?
சதுர்த்தி திதி துவங்கியதில் இருந்து விரதத்தை துவங்கலாம். அல்லது சதுர்த்தியன்று காலையிலேயே விரதத்தை துவங்க வேண்டும். மாலையில் விநாயகர் கோவிலில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள பிறகே விரதத்தை பிறைவு செய்ய வேண்டும்.
• சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்?
விநாயகர் அகவல் படிக்கலாம். சதுர்த்திக்குரிய,"ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராயஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாயமமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யதுஅநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா" என்ற மந்திரத்தை படிக்கலாம்.
• சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?
சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் காலை, மாலை இருவேளையும் வீட்டில் விநாயகர் படத்தின் முன் விளக்கேற்றி, மலர்கள், அருகம்புல் சூட்டி வழிபட வேண்டும். விநாயகருக்கு உரிய மந்திரங்கள், பாடல்கள் பாடி, தீப, தூப ஆராதனை காட்டி பூஜை செய்யலாம்.
• சதுர்த்தி பூஜை செய்வதற்கு என்ன பொருட்கள் தேவை ?
அருகம்புல், வெள்ளெருக்கு, மஞ்சள், சந்தனம், குங்குமம், வாசனை மலர்கள், தும்பை பூ சூட்டலாம். 21 வகையான இலைகள், மலர்கள், பழங்கள் கொண்டு விநாயகரை வழிபடுவது அதி விசேஷமான பலன்களை தரும்.
• சதுர்த்தி அன்று என்னவெல்லாம் செய்யலாம்?
நெருப்பு சம்பந்தமான காரியங்களை சதுர்த்தி நாளில் செய்தால் வெற்றி கிடைக்கும். கடன்கள் அடைக்க, நீண்ட கால பகை சமரசம் பேச, வேத சாஸ்திரங்கள் கற்பதற்கு உரிய நாள் சதுர்த்தியாகும்.
• சதுர்த்தி திதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்தலாமா?
சதுர்த்தி திதி விநாயகர் மற்றும் எம தர்மனுக்கு உரிய திதி ஆகும். இதில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்ய ஏற்றதல்ல. முற்காலத்தில் மன்னர்கள் போர் துவங்குவதற்கு, எதிரிகளை வெல்வதற்கு, விஷ சாஸ்திரம் பயன்படுத்துவதற்காக, அக்னி பயன்பாட்டிற்கு இந்த நாளை பயன்படுத்தினர்.
• பெண்கள் சதுர்த்தி விரதம் இருக்கலாமா?
பெண்கள் தாராளமாக சதுர்த்தி விரதம் இருக்கலாம். ஆடி மாதத்தில் வரும் நாக சதுர்த்தி அன்று பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் நாகதோஷம், திருத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதிருப்பது போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
• எந்தெந்த பிரார்த்தனைகளுக்காக சதுர்த்தி விரதம் இருக்கலாம்?
குழந்தைகள் கல்வியில் சிறக்க, கிரக தோஷங்கள் விலக, குறிப்பாக கேது, நாக மற்றும் சந்திர தோஷம் உள்ளவர்கள் சதுர்த்தி விரதம் இருந்து வழிபடலாம். குழந்தை இல்லாதவர்கள், செய்யும் தொழிலில் தடைகள் இருப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் பலன் கிடைக்கும். Kadavulgoddios
Please Support 🕉🕉🕉🔱🔱🔱🙏🙏🙏 Kadavulgoddios
25/01/2024
#தைப்பூசம் எதற்காக கொண்டாடுகிறோம்? தைப்பூசத்தின் வரலாறு என்ன?
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அது போல முருகன் கோயில்கள் அனைத்திலும் மிக முக்கியமான விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படும்.
#தமிழ்க்கடவுளான முருகன், அசுரர்களை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்தில், பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம் வரும் தினம் பெளர்ணமியாகவே இருக்கும். முருகப்பெருமானுடைய இந்த விசேஷ தினமான தைப்பூசத்தின் வரலாறு என்ன? ஏன் இந்த தினத்தை விமரிசையாக கொண்டாடுகிறோம் என்பதை பற்றியெல்லாம் விரிவாக காண்போம்.
#தைப்பூச #திருவிழா 2024
கந்தன், குமரன், வேலன், சரவணன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள், இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இதனால் கந்தன் வீற்றிருக்கும் ஆலயங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளன. முருகனுக்குரிய முக்கிய வேண்டுதல்களில் ஒன்று காவடி எடுப்பது. இந்த காவடி எடுக்கும் முறை பழனி மலையில்தான் தோன்றியதாம். அப்படிப்பட்ட பழனி தலத்தில் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தைப்பூசம். தைப்பூசத்திற்கும் பழனி மலை தலத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது.
#அம்பாளும் #தைப்பூசமும்
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் சிவபெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடினார். அதனை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் அரங்கேற்றினார். இந்த நடனத்தை ரசித்துப் பார்த்த பார்வதி அம்மைக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது. அதேநேரம், சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர். ஆகையால், முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும். சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என பெயர்பெற்றது. அதனால் இந்நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய தினமாக மாறியது. ஆனால் இந்நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம்தான் பழனி.
#பழனிக்கும் தைப்பூசத்திற்கும் உள்ள தொடர்பு
பழனி மலை அடிவாரத்தில் பெரியநாயகி அம்பாள், கைலாச நாதருடன் தனிக்கோயிலில் வீற்றிருக்கிறாள். இங்கு சிவன் மற்றும் அம்பாள் சன்னதிக்கு நடுவே முருகன் சன்னதி உள்ளது. எனவே ஆலயத்தின் பிரதான தெய்வங்களாக பெரியநாயகி அம்மனும், சிவபெருமானும் இருந்தாலும், பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதிக்கு எதிரிலேயே அமைந்துள்ளதால், கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முதலில் முருகனை தரிசித்த பிறகே அம்பாள் மற்றும் சிவனை தரிசிக்க முடியும். காலப்போக்கில் இத்தலத்தின் முக்கிய தெய்வமாக முருகப்பெருமானே மாறினார். தைப்பூச விழாவிற்கான கொடியும், முருகன் சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்திலேயே ஏற்றப்பட்டதாம். இப்படி சிவனின் அம்சமாகவும், சக்தியின் அம்சமாகவும் முருகப் பெருமானே விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாக மாறியது என்கின்றன புராணங்கள். மேலும் தைப்பூச விழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடத்தப்பட்டு, விழாவின் ஏழாம் நாளில் நடக்கும் தேரோட்டமும் இக்கோயிலில் இருந்தே புறப்பட்டு வீதி உலா வருகிறது.
முருகனுக்குரிய தைப்பூசத்தின் #வரலாறு
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் அசுரர்களை அழிக்க முடியாமல் தேவர்கள் திணறினர். எனவே பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டினர். இதையடுத்து கருணைக்கடலான எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று உருவாக்கிய அவதாரமே கந்தன்.
#கந்தன் ₹அவதரிப்பு
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாகின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றி நிம்மதி அடையச் செய்தார். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களை காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
#வெற்றி வேலின் சிறப்பு
அசுரர்களை வதம் செய்து வெற்றிக்கொண்ட முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், தீய சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பதும் ஐதீகம்.
#தைப்பூச விரதம்
ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத தொடக்கத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். Kadavulgoddios
🫰
#கண்ணப்ப #நாயனார் #குரு #பூஜை
22/01/2024
#பன்றிக்கறி #படையல்.. இரவில் #காவல்; கண்ணை பறித்துக் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் #காவிய பக்தி!
பொத்தப்பி என்னும் மலைநாட்டில் வேடர் குலத்தில் பிறந்தவர் தான் #திண்ணனார்.. இவர் வேடர் குல தலைவராக இருந்தார். ஆகையால் தினமும் காட்டுக்குச் சென்று அவர் வேட்டையாடி கொண்டு வருவதை தனது நண்பர்களுக்கும் உறவினருக்கும் பகிர்ந்து அளித்து வந்தார்.
ஒரு முறை தனது நண்பர்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். வேட்டையாடி முடித்து மரத்தினடியில் இளைப்பாரும் சமயம் அருகிலிருந்த மலை ஒன்று திண்ணனாரைக் கவர்ந்தது. “இத்தனை நாட்கள் காடுகளில் சுற்றிய எனக்கு இந்த மலை மீது ஏறி பார்க்கத்தோன்றவில்லையே.... அங்கு என்னதான் இருக்கும்? சென்று பார்க்கலாம்” என்று நினைத்தவராய் அம்மலைமீது ஏறிச்சென்றார். அடர்ந்த மரங்களுக்கிடையே மலை மீது ஒரு சிவலிங்கம் இருப்பதைக்கண்டார். ஏனோ அவரை அறியாமல் அச்சிவலிங்கத்தின் மீது அன்பு சுரந்தது.
அச்சிவலிங்கத்தின் மேல் புதிதாக சாற்றப்பட்ட பூக்களும் இலைகளும் இருந்ததைக்கண்டு ஆச்சர்யம் கொண்ட அவர், “யாரோ சிவனுக்கு தினமும் பூக்களை சாற்றுகின்றனர். ஆனால் உணவு படைக்க தவறியுள்ளனர். இக்காட்டில் தனித்திருக்கும் இவருக்கு பசி எடுக்காதோ” என்று நினைத்தவர், மலையை விட்டு கீழிறங்கி நண்பர்கள் வேட்டையாடி உணவுக்காக சுட்டு வைத்திருந்த பன்றி கறியை எடுத்து சுவைத்துப்பார்த்து அதில் நன்கு சுவையாக இருக்கக்கூடிய பகுதியை கையில் அள்ளிக்கொண்டு, நேராக, அருகில் ஓடிக்கொண்டிருந்த பொன்முகலி என்ற ஆற்றங்கரைக்குச் சென்று நீரை எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு சிவலிங்கம் இருக்கும் மலைக்கு ஓடினார்.
வாயில் அடக்கி கொண்டு வந்த தண்ணீரை லிங்கத்தின் மீது உமிழ்ந்து விட்டு, தான் கொண்டு வந்த பன்றிக்கறியை ஆவுடையின் மேல் வைத்துவிட்டு “சாப்பிடு...” என்று கூறியபடி நின்றிருந்த திண்ணனாரை பார்த்த அவரது நண்பர்களுக்கு இவரின் செயல் வேடிக்கையாக இருந்தது.
ஆனால் திண்ணரின் இந்த நடவடிக்கையானது தினமும் தொடர்ந்தது. நாளாக நாளாக சிவன் மேல் தீராத பற்றையும் கொண்டிருந்தார். இரவில் சிவபெருமான் தனித்திருப்பதால் கொடிய விலங்குகளால் அவருக்கு ஏதேனும் அச்சம் நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சியவர் சிவபெருமானுக்கு காவலாக அந்த இடத்திலேயே இருந்தார். விடிந்ததும் தன் வீடு போய் சேர்வார்.” இது இப்படி இருக்க...
தினமும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பூக்களை சமர்ப்பணம் செய்து வந்த வேதியர் ஆவுடையின் மீது பன்றி கறி இருப்பதைப் பார்த்து, ” தினமும் யார் வந்து சிவபெருமானுக்கு இந்த பன்றி கறியை வைத்து செல்வது?, என்று துடித்தவராய் , சிவனிடம் முறையிட்டார். “பெருமானே... தினமும் நான் உனக்கு வந்து அபிஷேகம் ஆராதனை செய்கிறேன். ஆனால் உன்னை பிடிக்காதவர் எவரோ ஒருவன் இவ்வாறு மாமிசம் படைக்கும் செயலை செய்துக்கொண்டிருக்கிறான். அவனை நீர் தான் தண்டிக்கவேண்டும் . என்றார்.
அன்றிரவு வேதியரது கனவில் தோன்றிய சிவபெருமான்” வேதியரே உன்னைப்போல் அவனும் என் பக்தனே... அவனுக்கு தெரிந்த வகையில் அவன் என்மீது அலாதி பக்திக்கொண்டு என்னை பூஜிக்கின்றான். இதில் தவறு ஏதும் இல்லை. அவனின் அன்பை நான் உனக்கு உணர்த்துகிறேன். இன்றிரவு என் இருப்பிடம் வந்து மறைந்து நின்று நடப்பதை கவனி” என்று கூறி மறைந்தார்.
வேதியரும் சிவபெருமானின் கூற்றுப்படி அன்று இரவு சிவலிங்கத்திற்கு அருகில் இருக்கும் மரத்தின் பின்னால் ஒளிந்தப்படி நடக்க இருப்பதை கவனித்துக்கொண்டிருந்தார்.
வழக்கம்போல் கையில் மாமிசத்துடனும் வாயில் நீருடனும் வந்த திண்ணனார் தன் வாயிலிருந்த நீரை சிவபெருமான் மீது துப்பும் சமயத்தில் தான் சிவபெருமானின் ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வருவதை கவனித்தார். இதைக் கண்ட திண்ணனாரின் மனமானது பதறியது. “ ஐயோ... இப்படி சிவபெருமானின் கண்களிலிருந்து இரத்தம் வடிகிறதே இதற்கு காரணம் யாராக இருக்கக்கூடும்? என்று பதறியவர், ஒரு கணமும் யோசிக்காமல் தன் அம்பை எடுத்து தன் ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவபெருமானின் கண்களில் பொருத்தினார்.
அப்பொழுது சிவபெருமானின் கண்களிலிருந்து இரத்தம் வடிவது நின்றது. ஆனால் சிறிது நேரத்தில் சிவபெருமானின் அடுத்த கண்களிலிருந்து இரத்தம் வடிவதைக்கண்ட திண்ணனார், சிறிதும் யோசிக்காமல் தனது இரண்டாவது கண்ணையும் தோண்டி எடுக்க நினைத்தவர், தனது பார்வையானது பறிபோனாலும் சிவனுக்கு இன்னொரு கண்ணை சரியான இடத்தில் பொருத்த முடியாது என்றி நினைத்தவர், தனது காலின் கட்டை விரலால் சிவபெருமானின் கண்களை அடையாளப்படுத்திக்கொண்டு தனது மறு கண்ணையும் தோண்டி எடுக்க நினைத்த சமயம் ,“ திண்ணனாரே நில்...” என்று அசரீரி ஒலித்தது.
அச்சமயம் சிவபெருமான் திண்ணனாரின் முன் தோன்றி, “திண்ணனாரே... உனது பக்தியை கண்டு பிரமித்துவிட்டேன். உனது பார்வை போனாலும் பரவாயில்லை என்று நினைத்து உன் கண்களை எனக்கு தர நினைத்த நீ இன்றிலிருந்து நீ கண்ணப்பன் என்று அழைக்கப்படுவதுடன் எப்பொழுதும் நீ என் அருகினிலேயே இருப்பாய்” என்று அவருக்கு சிவபதத்தை அளித்தார்.
இதை மறைந்து இருந்து பார்த்த வேதியரும் கண்ணப்பரின் பக்தியை நினைத்து பிரமிப்பு அடைந்ததுடன், கண்ணப்ப நாயனாரின் அருளையும் பெற்றார்.
சிவபெருமானுக்கு தனது கண்களையே தந்ததால் திண்ணனார் கண்ணப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
Kadavulgoddios
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மீக பதிவில் 20.01.2024 இன்று #கார்த்திகை விரத தினத்தை முன்னிட்டு இறைவனுக்கு புதிதாக கார்த்திகை விரதம் எடுக்கும் பக்தர்களுக்கு இந்த பதிவில் கார்த்திகை விரதத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று சில ஆன்மீக குறிப்புகளை தெரிந்துக்கொள்ளலாம்.
#தமிழ் #கடவுளான முருகப்பெருமானை வழிபடுவதற்கு கந்த சஷ்டி விரதம் இருப்பது போன்று பக்தர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது கார்த்திகை விரதமும். கார்த்திகை விரதம் எடுப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
#கார்த்திகை #விரதம் இருப்பது எப்படி:
#முருகப்பெருமான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்ற பெயரை பெற்று அவருடைய அருளை அடைவதற்கு நாம் எடுக்கும் விரதம் தான் இந்த கார்த்திகை விரதம்
முருகப்பெருமானுக்கு கார்த்திகை விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு எடுத்துக்கொண்டு அன்று இரவு உணவு #சாப்பிடாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை விரதம் எடுப்பவர்கள் அன்று நாள் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடாமல் முருகனின் #மந்திரங்கள், #ஸ்கந்த #புராணம், #திருப்புகழ், #கந்தர் #கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது.
கட்டாயமாக உணவு சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பழம், பால் ஆகியவற்றை உண்ணலாம். விரத தினத்தன்று பகல் மற்றும் இரவு #தூங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
கிருத்திகை விரதம் #பலன்கள்:
கார்த்திகை விரதம் எடுப்பவர்கள் அன்றைய நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி வந்தால் மிகுந்த #புண்ணியம் கிடைக்கும்.
இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்களுக்கு உடலில் எந்த நோயும் அண்டாமல் நெடுநாள் வாழ முருகனின் அருள் கிடைக்கும்.
#12 #ஆண்டுகள் வரை இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு முருகப்பெருமானின் #தரிசனம் முழுவதும் கிடைத்து மனதில் மரணம் குறித்த பயங்கள் நீங்கி இறுதியில் முக்தி நிலை கிடைக்க பெறுவார்கள்.
முருக பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க கார்த்திகை விரதத்தை பின்பற்றுங்கள்..! Kadavulgoddios
அன்பும், ஆனந்தமும் பொங்கிட..!
அறமும் வளமும் தழைத்திட..!
இல்லமும் உள்ளமும் பொங்க..!
இனிய தமிழர் திருநாளாம்..! பொங்கல் நல்வாழ்த்துக்கள் Kadavulgoddios Praveen Mohan Tamil Meenakshiamman Temple Lord Shiva's Devotee
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி
தந்னோ ருத்ர பிரசோதயாத்
கால பைரவர் சிறப்பு அபிஷேக வழிபாடு 04/01/24 Kadavulgoddios
#ஆருத்ரா #தரிசனம்
26/12/2023
#ஆருத்ரா #தரிசனம்
🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
இன்று பிரதோஷம்
வைகுண்ட ஏகாதசி
ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.
Follow my page
Pls support my channel 🙏🙏🙏🙏
💕
day
ஐயப்ப காயத்ரி மந்திரம்:-
ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்
சுவாமியே சரணம் ஐயப்பா 🐅🐅🐅🙏🙏🙏
#AYYAPPA #SONGS #ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா ...
#சுவாமியே #சரணம் #ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kadavulgoddios
சிவ சிவ சிவ
இப்போது என்னுடைய போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்
சிவனை கண்டது போல் உணர்வு
#நெற்றியில் #பட்டை போட உதவும் மூன்று விரல்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இறுதியில் பிடி சாம்பலாக போவதே உறுதி ஆகையால் என்றும் இறை சிந்தனையோடு அறநெறி தவறாமல் வாழ வேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.
சிவ சிவ சிவ
Share
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the place of worship
Telephone
Address
Dubai