Guru Arul Astro Reserch Center

Astrology Reserch center healing with Manthra

13/02/2024

கடன் சுமையா?

தீராத கடனும் காணாமல் போகும்..செவ்வாய்கிழமை இதை மட்டும் செய்யுங்கள்..
ஆன்மீகம் கூறும் ரகசியம்..

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர்

கடன் தீர்க்கும் பைரவர்

அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம். கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம். பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். தீபம் ஏற்றும் போதே கடன் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

செவ்வாய்கிழமை பரிகாரம்
கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை. இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஹோரை அதே போல இரவு 8 மணி முதல் 9 மணி வரைக்கும் செவ்வாய் ஹோரை வருகிறது. உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பு 3 கை பிடி அளவு கல்லுப்பு தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். புதிய கல் உப்பு பாக்கெட் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாங்கிவைத்துக்கொள்வது நல்லது

காணாமல் போகும் கடன்

பூஜை அறையில் அமர்ந்து ஒரு மஞ்சள் நிறத் துணியில் 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிரம்ப கல்லுப்பைக் கிண்ணத்திலிருந்து எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும். மூன்று கைப்பிடி கல் உப்பை, உங்கள் கைகளால் எடுக்கும்போதும் 'கடன் சுமை கரைந்து போக வேண்டும் பணப்பிரச்சனை தீர வேண்டும்.' இவ்வாறாக மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த மஞ்சள் துணியில் உப்பை வைத்து, ஒரு முடிச்சுப் போட்டு கட்டி இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும். ஒரு வாரம் வரை கல் உப்பை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருங்கள். மறு வாரம் வரக்கூடிய செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும். குறிப்பாக மஞ்சள் துணியில் கட்டி இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளால் எடுத்து மூன்று முறை தண்ணீரில் போட்டு உங்கள் கடன் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரையுங்கள். உப்பை கரைத்து இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு பெரிய கடனும் தண்ணீரில் கரைத்த உப்பு போல சீக்கிரம் கரைந்து போகும்.

மிளகும் கல் உப்பும்

கறுப்பு மிளகுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து உங்களையும், உங்கள் வீட்டையும் சுற்றி விட்டு அதனை எரியும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பில் எப்படி மிளகு வெடிக்கிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் அனைத்து கண் திருஷ்டிகளும் காணாமல் போய் விடும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் கடன் பிரச்சினை படிப்படியாக காணாமல் போகும். அதிக பண வருமானமும் வரும்.

குங்குமம் பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குங்குமம் வாங்கி வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு குங்குமத்தை கொடுத்து விட்டு வர கடன் பிரச்சினை நீங்கும். தொடர்ந்து 11 வாரம் குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு கொடுத்து விட்டு வர வேண்டும்.
கடனாளியாக எழுவதை விட பட்டினியாக உறங்குவது மேல் என்று கூறுவார்கள். வேறு வழியின்றி கடன் பெற்றவர்கள் இந்த பரிகாரங்களை செய்து வாருங்கள் கடன் பிரச்சினை நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.

கடன் பிரச்சினை தீர்க்கும் தெய்வங்கள்
திங்கட்கிழமை அன்று ருண விமோசனரை வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும். திருவாரூர், திருச்சேரை திருத்தளத்தில் ருண விமோசனரை வணங்கலாம். திருப்பதி ஏழுமலையானையும், திருஆவினன் குடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முருகப்பெருமானையும் வணங்கினால் கடன் பிரச்சினை நீங்கும். திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். நம்முடைய கடன் சுமையை பெருமாள் தீர்த்து வைப்பார்.

24/06/2023

சனி+கேது இணைவு உள்ளவர்களுக்கு
விரைவிலேயே முதுமை வந்துவிடும்

மூட்டு வலி

கை கால் குடைச்சல்

எலும்பு வலிமை குறைதல்

உடல் இயக்கம் தடைபடுதல்‌ உண்டு
💐💐💐💐💐

நிவர்த்தி பெற

முடக்கத்தான் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்குங்க

துவையலாகவும் சேர்க்கலாம்.. வாரம் இருமுறை

நன்றி

Photos from Guru Arul Astro Reserch Center's post 07/09/2022

www.DIVYARASA.ORG

07/09/2022

www DIVYARASA.ORG

16/08/2022

ாதக_குறிப்பு.

பிறந்த விபரங்கள் கொடுத்து இலவசமாக ஜாதகம் பெறுவீர்..

இதனுடன் இணைத்து இருக்கும் படம் போல் ஜாதகம் உங்களுக்கு கிடைக்கும்.

ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம், ஜென்ம இராசி, ஜென்ம லக்னம், நட்சத்திர பாதாச்சாரம், இராசி, நவாம்சம்,
தசா இருப்பு, தற்போது நடக்கும் தசை மற்றும் புத்திகள், போன்ற விவரங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கும்.

ஜாதக பலன் அறிய மற்றும் திருமணம் சம்பந்தமாக வேறு நபருக்கு அனுப்ப தெளிவான விவரங்களுடன் உங்களுக்கு இந்த ஜாதக image உதவியாக இருக்கும்.

இதை எளிதில் மற்றவர்களுக்கு வாட்ஸ்அப் செய்யவோ, உங்கள் மொபைலில் இமேஜ் முறையில் சேவ் செய்து கொள்ளலாம். இதுபோல் தங்களுக்கும் வேண்டுமென்றால் தெளிவாக விவரங்களுடன் (பெயர்,பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர், தந்தை மற்றும் தாயாரின் பெயர்) எனது வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்புங்கள் இலவசமாக உங்களுக்கு இதை போல் ஒரு காப்பி அனுப்புகிறேன். அல்லது இங்கு கமெண்ட்ஸ் கொடுத்தால் கூட அனுப்பி தருகிறேன். நன்றி.🙏

WhatsApp Number: 9445576629

ஜோதிடர் M.A.Neelavathi
GURU ARUL Astro Reserch Center
Choolaimedu, Chennai.94

01/05/2022

ஸ்ரீ குருப்யோ நமஹ!!!

27 நட்சத்திரங்களுக்கு உண்டான தெய்வம் மற்றும் வடிவங்களை இங்கு பகிர்ந்துள்ளேன் . அவரவர் ஜென்ம நட்சத்திரம் கவசம் போல பாதுகாப்பளிக்கும். இரண்டாவது நட்சத்திரம் - சகல சம்பத்துக்களையும் கொடுக்கக்கூடியது . எனவே கீழ்க்கண்ட தெய்வங்களை வணங்கி, வடிவங்களை பிரிண்ட் செய்து தங்கள் இடங்களில் பயன்படுத்தி வந்தால் நலமுடன் வளமும் சேரும் 🙏👑👁️

அஸ்வினி:
தெய்வம்: ஸ்ரீ சரஸ்வதி தேவி
வடிவம்: குதிரை , குதிரை தலை, கிளைமேல் அமர்ந்திருக்கும் பறவை உருவம்.

பரணி
தெய்வம்:- ஸ்ரீ துர்க்கை அம்மன்
வடிவம் : - மண் அடுப்பு, முக்கோணம்

கிருத்திகை
தெய்வம்- ஸ்ரீ சுப்ரமணியர்
வடிவம்- கத்தி, தீபம்,

ரோகிணி
தெய்வம் - ஸ்ரீ கிருஷ்ணன்
வடிவம்- தேர், ஆலமரம் , வண்டிச்சக்கரம்

மிருகசீரிஷம்
தெய்வம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்
வடிவம்: மான் தலை, தேங்காய் கண்

திருவாதிரை
தெய்வம் - ஸ்ரீ நடராஜர்
வடிவம்: வைரம் , மனித தலை, நீர்த்துளி

புனர்பூசம்
தெய்வம் - ஸ்ரீராமபிரான்
வடிவம்: வில், நாய்

பூசம்
தெய்வம்- ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
வடிவம்: அம்பு கூடு, பாம்பு புற்று

ஆயில்யம்
தெய்வம்- ஸ்ரீ ஆதிசேஷன்
வடிவம்: பாம்பு(சர்ப்பம்)

மகம்
தெய்வம் - சூரிய நாராயணர்
வடிவம்: பல்லக்கு ,வீடு, கிரீடம், கோவில் கோபுரம், கலப்பை

பூரம்
தெய்வம்- அன்னை பார்வதி தேவி, ஸ்ரீ ஆண்டாள்
வடிவம்:
கட்டில்கால், கண்கள், சதுரம்

உத்தரம்
தெய்வம் - ஸ்ரீ மகாலட்சுமி
வடிவம்- தண்டம் ( குச்சி), வீட்டின் உத்தரம்

ஹஸ்தம்
தெய்வம்- ஸ்ரீகாயத்ரி தேவி
வடிவம் : உள்ளங்கை, ஒற்றை மயில் பீலி

சித்திரை
தெய்வம் - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
வடிவம் : ஸ்வஸ்திக் வடிவம் , முத்து, புலிக்கண்

சுவாதி
தெய்வம்- ஸ்ரீ நரசிம்மர்
வடிவம்: பவளம், தீ ஜ்வாலை

விசாகம்
தெய்வம்- ஸ்ரீ முருகப் பெருமான்
வடிவம்: சக்கரம் ,‌ தோரணம் , முறம்,
இறகு விரித்த பட்டாம்பூச்சி

அனுஷம்
தெய்வம்- ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்
வடிவம்: மலர்ந்த தாமரை, குடை

கேட்டை
தெய்வம்- ஸ்ரீ வராஹ பெருமாள்
வடிவம்- வெண்சாமரம் குடை , ஈட்டி

மூலம்
தெய்வம்-ஸ்ரீ ஆஞ்சனேயர்
வடிவம்: சிங்கத்தின் வால் யானையின் துதிக்கை , வேர்

பூராடம்
தெய்வம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
வடிவம்: கதாயுதம் ,கட்டில்கால்

உத்திராடம்
தெய்வம் - ஸ்ரீ விநாயகர்
வடிவம் : விரிந்த நிலையில் இருக்கும் வில், யானையின் தந்தங்கள்

திருவோணம்
தெய்வம்- ஸ்ரீ உலகளந்த பெருமாள்
வடிவம்: மூன்று பாதச்சுவடு , அம்பு, முழக்கோல்

அவிட்டம்
தெய்வம் - ஸ்ரீ பத்மநாபஸ்வாமி
வடிவம்: உடுக்கை , முரசு, கமண்டலம்

சதயம்
தெய்வம்- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்
வடிவம்: பூங்கொத்து ,ஒட்டகம் , செக்கு, அணில்

பூரட்டாதி
தெய்வம்- ஸ்ரீ ஏகபாதர்
வடிவங்கள்: தானியம் அளக்கும் படி

உத்திரட்டாதி
தெய்வம்- ஸ்ரீ மகா ஈஸ்வரர்
வடிவம் : காமதேனு , ஒற்றைக் கொம்புள்ள குதிரை (unicorn)

ரேவதி :
தெய்வம் -ஸ்ரீ அரங்கநாதர்
வடிவங்கள்: - இரண்டு மீன் , படகு, பாய்மரக்கப்பல் , பாதுகைகள்

நன்றி

13/04/2022

*நாளை* *ஒரே நாளில்* இத்தனை
மிக மிக விஷேட நன்நாள் 🙏
1. *குரு பெயர்ச்சி* ( *அதிகாலை 4மணிக்கு* )
*மீன ராசியில்* பெயர்ச்சி ஆக உள்ளார் 🙏🙏

2. *_தமிழ் புத்தாண்டு_* மற்றும் *_சித்திரை விஷூ_* புண்ணிய காலம் (சித்திரை 1 புது வருடம் ஆரம்பம்)

3. ஸ்ரீ *மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்* வைபவம் 🙏🙏

4. *குரு வார பிரதோஷம்* 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏 **நாளை*
*கோவில் கண்டிப்பாக* சென்று பரிபூரண* ஆசிர்வாதம் பெறுவோம் 🙏🙏
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

18/12/2021

Grace

Want your practice to be the top-listed Clinic in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Website

Address

THIRUVALLUVARPURAM 1 ST Street, CHOOLAIMEDU, CHENNAI . 94
Chennai
600094

Opening Hours

Monday 10:05am - 7:51pm
Tuesday 10:05am - 7:55pm
Wednesday 10:56am - 7:55pm
Thursday 11:55am - 8:04pm
Friday 11:09am - 7:50pm
Saturday 10:10am - 8:07pm
Sunday 1:05am - 7:54pm

Other Alternative & Holistic Health in Chennai (show all)
Subham Siddha Pharmacy & Clinic Subham Siddha Pharmacy & Clinic
Chennai, 600007

Centre For Disease Free Life

Lavanya Udayakumar- Believer of Alternative Healing Lavanya Udayakumar- Believer of Alternative Healing
Chennai

Theta Healer and Self-Awareness Coach. https://healyourlifeworkshops.com/teacher/lavanya-udayakumar

Shifa Indian Medicine Shifa Indian Medicine
New No. 52, Old No. 178, Kutchery Road, Mylapore
Chennai, 600004

IMPCOPS STOCKIST Genuine Ayurveda, Siddha, and Unani Medicines.

Briga Nature Cure Home Briga Nature Cure Home
Chennai

A Naturopathy and Yoga Clinic, governed by qualified BNYS doctors expertised in holistic care & cure

Aarokiyavaan Kalai Aarokiyavaan Kalai
Elango Street, Vinobaji Nagar
Chennai, 600064

Healing Lives Healing Lives
Chennai

No Drug, No Touch Therapy to heal Relationship, Finances, Psychological (anxiety, stress, fear, depression, OCD etc.), Physical (migrain, BP, sugar, any types of aches and pains) a...

Agasti Ayurveda Agasti Ayurveda
Chennai, 600041

Panchakarma/Doctor consultation/Pharmacy/Ayurvedic treatments/Massage therapy/Yoga/Wellness

RCCL Conscious Living SHOTT RCCL Conscious Living SHOTT
'Rathna Center For Conscious Living, No. 1, Masilamani Road, Royapetah
Chennai, 600014

Conscious Living SHOTT (Simple Habits to Organically Transform Together) A daily mind-body-spirit wo

Dr Dawood Al Maseeha Unani specialty Clinic in Chennai Dr Dawood Al Maseeha Unani specialty Clinic in Chennai
OLD No 274 NEW No 32, VEPERY HIGH Road , PERIAMET, CHENNAI
Chennai, 600003

Dr Dawood - Al Maseeha Clinic-Health Consultant in Chennai

Girlgonemystic Girlgonemystic
No 10 Vasu Street, Srivari Touchstone Apartments, Gh Ground Floor, Kilpauk
Chennai, 600010

Akathiyam.org Akathiyam.org
CONSORTIUM OF TAMIL AND SIDDHA EXPERTS
Chennai

"சங்கத் தமிழ் வாழ்க சித்த மருத்துவம் ?