Aram Organic, Coimbatore

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aram Organic, Coimbatore, Public Figure, NO:108, BHARATH NAGAR, 1ST Street, NEAR NOOR SAIT NURSERY & PRIMARY SCHOOL, Coimbatore.

25/01/2024

#மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின் #குப்பைமேனிசோப்பு
குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.

| | | | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

02/12/2023

முகப்பருக்களை போக்கும் #முல்தானிமெட்டி

முல்தானி மெட்டி சருமத்தில் வடியும் அதிக எண்ணெய் பதத்தை உறிஞ்சி தெளிவான முகத்தோற்றத்தை அளிக்கும். இதனால் பருக்கள், சருமச் சேதம் வராது.

முகம் பளபளப்பாகும்...

For orders: https://dharaniherbbals.in/product.../multani-mitti-100-gm

| | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

28/11/2023

தங்கத்திற்கு நிகரான #ஆவாரம்_பூ_பொடி பயன்கள்:
குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
FOR ORDER: www.dharaniherbals.in
# #|

20/11/2023

சத்துக்கள் நிறைந்த #முருங்கை_கீரை_சூப் பயன்கள்:

முருங்கை கீரை நன்மைகள்

முருங்கை கீரை பல்வேறு விதமான சத்துக்களைக் கொண்டது. அதில் விட்டமின் பி, பி2, சி, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், ஜீங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் முதலான முக்கிய சத்துக்களைக் குறிப்பிடலாம். இவ்வளவு சத்துக்களையும் அவ்வளவு எளிதில் மாத்திரைகளால் சந்துவிட முடியாது. அதிலும் பைசா செலவில்லாமல் இயற்கையில் கிடைக்கும் சத்துக்களை வீணாக்குவதேன்? கீழே முருங்கை கீரையின் நன்மைகளை விரிவாகப் பார்க்கலாம்.

உடல் சூட்டைத் தணிக்கும்

முருங்கை கீரை குளிர்ச்சி தன்மை கொண்டது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சூடு தணியும். இதனால் உடலில் வியர்குருகள் வராமல் தடுக்கப்படும். முருங்கை இலையில் சாறு எடுத்தும் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

வலி குறையும்

முருங்கை கீரையை சாப்பிடுதால் கை, கால் வலிகள் குறையும். மூட்டுவலியும் வராமல் தடுக்கப்படும். முருங்கை கீரையில் நிறைந்து உள்ள கால்சியம் சத்து எலும்புகளைப் பலப்படுத்தும்.

புண்கள் ஆறும்

முருங்கை கீரைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிகவும் குறிப்பானது புண்களை ஆற்றும் தன்மை.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் அனைத்தும் இதை சாப்பிடுவதால் குணமடையும்.

கண் பார்வை பலம்

முருங்கை கீரை கண்பார்வைக்கு மிகவும் உகந்தது. இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் கண்பார்வை சிறப்பான முறையில் வளம் அடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி முருங்கை கீரையைச் செய்து தருவதால் கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கலாம்.

சருமம் வளம் அடையும்

சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் முருங்கை கீரையை உட்கொள்வதால் குணமடையும். சருமத்தில் ஏற்பட்டுள்ள கொப்புளங்கள் ,பருக்கள் அனைத்தும் முருங்கை கீரையை சாப்பிடுவதால் சரியாகும்.

சிறுநீரகம் வலுவடையும்

முருங்கை கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் சிறப்பாக வெளியேறும். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் சிறுநீரகத்தை வலுவடையச் செய்யும்.

மனவளம் அடையும்

முருங்கை கீரையில் உள்ள விட்டமின் சி மன நலத்திற்கு உகந்தது. இந்தக் கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே காணப்படுகின்றது. கூடுதலாக நினைவுத்திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்குச் சத்தான இந்தக் கீரையைத் தரலாம்.

இரத்தம் விருத்தியடையும்

இந்தக் கீரை ரத்தசோகையைக் குணப்படுத்துவதற்குப் பெயர் போனது. வாரம் 2 முறை இந்த கீரையை எடுத்துக் கொள்வதால் இரத்தம் சிறப்பான வகையில் விருத்தியடையும். இதற்குக் காரணம் இந்த கீரையில் நிறைந்துள்ள இரும்புச் சத்து தான். அதனால் இந்தக் கீரையை உணவில் எடுப்பவருக்கு ரத்தசோகை வருவதற்கு வாய்ப்பே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க இந்த கீரை உதவும்.

இயற்கை வயாகரா

முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவிக்குள் காதல் அதிகரிக்கும்.

குழந்தை பேற்றைச் சாத்தியப்படுத்தும்

பெண்களின் கர்ப்பப்பை வலுவடைய இந்தக் கீரை உதவுகிறது. இதனால் பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதுபோல ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. ஆக இருபாலருக்குமே குழந்தை பாக்கியம் ஏற்பட இந்த கீரை உதவுகிறது.

கூந்தல் செழிப்பாக வளரும்
இந்தக் கீரை கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. இந்தக் கீரையைப் பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் கூந்தல் உதிராமல் இருக்கும். மேலும் கூந்தல் கருமையாகச் செழித்து வளரும். இதிலுள்ள சத்துக்கள் முடி உதிர்வை பெருமளவில் கட்டுப்படுத்தும்.

இளமைத் தோற்றம் நீடிக்கும்

இந்தக் கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை வயதான தோற்றம் சீக்கிரம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

சுவாசக் கோளாறு, சளித்தொல்லை நீங்கும்

இந்தக் கீரை சுவாசம் சம்பந்தமான அத்தனைப் பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது. சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற அனைத்து வியாதிகளையும் இந்தக் கீரை குணப்படுத்தத் துணை புரிகிறது.

மலச்சிக்கல் தீரும்

இந்தக் கீரையில் சிறப்பான அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் இந்தக் கீரை மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் சுரக்கும்

குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது உகந்தது. இருப்பினும் சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாகக் காணப்படும். அவ்வாறான பெண்கள் தங்கள் உணவில் இந்தக் கீரையை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வழியில் அதிகரிக்கும்.

உடல் எடை குறையும்

இதை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் உடல் எடை மேண்மை அடையும். தேவையில்லா கொழுப்பு குறைந்து, உடல் எடை குறையும். தசைகள் வலுப்பெற்று பொலிவான தோற்றம் பெறுவீர்கள். அதிக எடையுடையவர்கள் இதை தினசரி உணவில் சேர்க்கலாம்.

இதய செயல்பாடு சிறக்கும்

இந்தக் கீரை இதயத்தை வலுப்படுத்த உதவும். இதனால் இதயம் சிறப்பான வகையில் செயல்படும். எனவே இருதய சம்பந்தமான எந்த வியாதியும் நெருங்கவே கூடாது எனில், வாரம் இருமுறையாவது இந்தக் கீரையை உணவில் சேருங்கள்.

வாயுத் தொல்லை நீங்கும்
இந்தக் கீரை குடல் வாயு தொல்லையைச் சரிப்படுத்தும். வாயுக் கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையைச் சாப்பிடலாம். இந்த கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவும்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

இந்தக் கீரையில் விட்டமின் சி போதிய அளவில் உள்ளது. இந்த சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உடலைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பற்கள் வலுவடையும்

முருங்கை இலைகளில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை பற்கள் வலுப் பெற உதவும். அதனால் பற்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

Place your order here: http://dharaniherbbals.in/

#தரணி_ஹெர்பல்ஸ்,
#புஞ்சைபுளியம்பட்டி.
+919965523001, +919965532001

Dharani Herbbals Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti

18/11/2023

மலைத்தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு.

பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.

இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

For orders: https://dharaniherbbals.in/product-detail/wild-honey-250-gm


See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

28/10/2023

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பல தீங்கான பொருட்கள் கலந்து விடுகின்றன. நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.

#கொழுப்பு

உட்கொள்ளப்படும் உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

#நீரிழிவு_நோய்

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

#மலச்சிக்கல்

பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

#நோய்_எதிர்ப்பு_சக்தி

நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை.

#புற்று_நோய்

கரும்பு சாறு மற்றும் நாட்டு சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தும் மேற்கிந்திய தீவு குடிமக்களுக்கு அவ்வளவாக புற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டு சர்க்கரைக்கு உள்ளதால் புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க, அதை உட்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

For orders: https://dharaniherbbals.in/.../amuthu-brown-sugar-powder...

| | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப்

27/10/2023

பீட்ரூட், பாதாம் , முந்திரி, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்துள்ளது .இதில் உள்ள முக்கிய பொருளான பீட்ரூட்-யில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் எண்ணில் அடங்காத சத்துகள் நிறைந்துள்ளன.
பாதாம்- யில் உள்ள மூலக்கூறுகள் கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கும்,ரத்த கொழுப்பை கட்டுப்படுத்தவும் மிகவும் உதவுகிறது, மேலும் முக சுருக்கங்களை நீக்கி இளமையுடன் இருக்க வைக்கும்.
"வாசனை பொருட்களின் அரசி" என்று அழைக்கப்படும் ஏலக்காய்-யும் இந்த மால்ட் யில் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் இந்த பீட்ரூட் மால்ட் யை பால்-யில் கலந்து குடித்தால் சத்தாகவும் இருக்கும் மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

26/10/2023

கருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.

🔶"இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது" என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது.

🔶பயன்கள்:
🔹சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும்.
🔹ஆஸ்துமா,
🔹சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும்.
🔹இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது.
🔹இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். 🔹குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

19/10/2023

ஆவாரம் பூ பூசு மஞ்சள் சோப்பு #பயன்கள்:
உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

22/09/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் #சிவப்புகவுனிஅரிசி
புரதச்சத்து நிறைந்தது.
தாய்ப்பால் அதிகரிக்கும்.
உடல் சூடு குறையும்.
எடை குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

|

20/09/2023

மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.
துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.
துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.

15/09/2023
09/09/2023

ஆவாரம்பூ சங்க காலம் முதலே பயன்படுத்தி வந்த பூ ஆகும் இதனை மடல் ம ஏறி வந்த தலைவன் சூடிக்கொண்டு வந்து தலைவனை கரம்பிடிக்க வருவதாக கூறப்படுகிறது.
குறிஞ்சிபாட்டில் 99 வகையான மலர்களில் அவரம்பூவும் ஒன்று.
ஆவாரை பூத்திருக்கச் சாவாரை காண்பது உண்டா? என்று பழமொழியும் உண்டு
ஆவாரம்பூ, அதன் சமூலம் அனைத்தும் உடலுக்கு பல வகையான நன்மைகளை அளிக்கவல்லது. தோல் நோய்களில் இருந்து சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் மேல்பூச்சாகவும், உட்கொள்ளவும் பயன்படுகிறது.
|

Photos from Dharani Herbbals's post 26/06/2023
25/05/2023

#செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :
செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு மற்றும் பேன்களை தடுக்கிறது மற்றும் முடியை மென்மையாகவும், பட்டுப்போகவும் செய்கிறது, மேலும் இது முடியை ஈரப்பதமாக்குகிறது.
` | | |

15/05/2023

Only the fittest will "SURVIVE"- Charles Darwin

| | |

21/03/2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.
காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
| | |

17/03/2023

அதிக மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருள்
மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள்களைதான் நம் முன்னோர்கள் சமையலில் பயன்படுத்திவந்தார்கள்.
ஆண்டாண்டு காலமாகவே பட்டை மருத்துவ குணங்களை கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தார்கள்.
இலவங்கபட்டை என்று அழைக்ககூடிய இது மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
26 மசாலா பொருள்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் இலவங்க பட்டையானது மிகச்சிறந்த ஆக்ஸினேற்றியாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
தேநீரில் அல்லது பட்டை தூள் சேர்த்த வெதுவெதுப்பான நீரை குடித்துவந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கவும் சுவாசப் புத்துணர்ச்சிக்கும் பட்டை பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வு ஒன்றில் தினமும் அரை டீஸ்பூன் அளவு இலவங்கப்பட்டை தூள் சர்க்கரை குறைப்பில் பெருமளவு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
| | |

11/03/2023

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
|

01/03/2023

#தரணி_ஹெர்பல்ஸ் #சிகைக்காய்ஷாம்பு #சிகைக்காய்தூள்
இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டு மரபியலில் பல நூறாண்டுகளாக இயற்கை முறையில் முடி பராமரிப்பதற்கு சிகைக்காய் பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். சிகைக்காயை சித்த மற்றும் ஆயூர்வேத மருத்துவத்தில் சிகைக்காயை மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
சிகைக்காய் காய் மற்றும் இலைகளில் அமிலங்கள் , புரதங்கள் அதிகமாக உள்ளதால் முடி மற்றும் தோல்பராமரிப்பில் முக்கிய பொருளாக இன்றுவரை இருந்துவருகிறது.
சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.
கண்டிஷனர் தேவையில்லை உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.
பொடுகை தடுக்கும் பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது. பொடுகிற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றால் தற்காலிக முடி உதிர்தல் ஏற்படும்.
| | | |

25/02/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களில் இந்த கருவேப்பிலையும் ஒன்று.
கருவேப்பிலை-யில் வைட்டமின் A,B, C கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
குறிப்பாக உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை அதிகமாக கொடுத்து, முடியை வளர வைக்க கூடிய சத்து இதில் உள்ளது, நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கிறது
ரத்தசோகை சரி செய்கிறது.
வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

06/02/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள் சோப்பு #பயன்கள்:
உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…
| |

09/01/2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.
காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

03/01/2023

ஆட்டுப்பால் சோப்
🔹சரும பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் ஆட்டுப்பால் மூலம் தீர்வு காணலாம்.
🔹ஆட்டு பாலில் தயாராகும் பொருட்கள் மற்றும் ஆட்டு பால், தோல் பிரச்சினைகளை குறைத்து, சரும ஆரோக்கியத்தை பேண உதவும்.
🔹ஏனென்றால், பசு அல்லது எருமைப்பாலுடன் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
🔹மேலும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவையும் நிரம்பியுள்ளன
🔹இவை தோல் பிரச்சினைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன.

15/11/2022

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி- #கருப்பு_கவுனி...
கருப்பு கவுனியின் பயன்கள்:
உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகக்கிறது.
உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.
நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..
தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ – பயன்கள்: தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.
|

27/10/2022

உடலுக்கு குளிர்ச்சி தரும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் அருகம்புல் பொடி...
1. அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி .
2. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.
3. வயிற்றுப் புண், இரத்த அழுத்தம் (பீ.பி), நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்..
4. சளி, சைனஸ், ஆஸ்துமா , நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
5. மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும்..
For orders: https://dharaniherbbals.in/product.../bermuda-grass-powder

01/10/2022

ரோஸ் வாட்டர் பயன்பாடுகள் :
முகத்தைத் தூய்மையாக்கி. சருமத் துளைகளுக்குள் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி சருமத்தைத் தூய்மைப்படுத்துவதில் ரோஸ் வாட்டர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ரோஸ் வாட்டரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்கு ஸ்பிரே செய்து கொண்டு, அப்படியே வைத்திருக்க வேண்டும்.

#மழை

FOR ORDER 👇👇👇 :
https://dharaniherbbals.in/product-detail/rose-water-100-gm

07/01/2022

என் சிறுவயது ஹீரோ..........
புஞ்சைப் புளியம்பட்டியின் அப்துல்கலாம்........
பல்வேறு வெற்றிகளை குவித்து எங்கள் ஊர்களுக்கும்,இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தவர் மதிப்புமிக்க நீலமணி அண்ணா. Neelamani Subramaniam .Former IIT Professor,
(Working in Kuwait Institute for Scientific Research as a Senior Research Scientis)அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தாலும் எளிமையின்
நாயகர். எவ்வளவு உயர்ந்தாலும் எளிமை யாய்
இருக்க வேண்டும் என்பதை வாழ்த்து காட்டும் எங்கள் Celebrity இவர்....
எங்கள் ஊர் சார்ந்த பல்வேறு அரசு பள்ளிகளுக்கு நன்கொடைகளை வழங்கியுள்ளார்...தனது கடின உழைப்பால் உயர்ந்தவர்...தனது படிப்புக்கான செலவை தானே பார்த்து கொண்டவர்.எங்கள் ஊர் இளைஞர்களுக்கு இன்றளவும் உதாரண மனிதராய் திகழ்கின்றவர்.
எனக்கு JRD டாடா, கவின்கேர் திரு.ரங்கநாதர் சார் போன்றோர் தொழிக களில் மானசீக குருகள் என்றால் நீலமணி சார் எனக்கு படிப்பில் , உழைப்பில் மானசீக குருவாய் திகழ்ந்தவர்......கல்வியில் இவர் எனது கனவு நாயகர்......அனைவரும் இந்த செமினாரில் கீழ்கண்ட இணைப்பை அணுகி பயன் பெறவும்........Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti
seminar details:
GrainEd opens registrations for the course
Ocean Engineering (Tamil - 2 hr)
by Dr Subramaniam Neelamani - Senior Research Scientist, Kuwait
Target audience : Class 8-12 students
Time : 6:30 - 7:30 PM IST
Jan 7, 14
Ocean Engineering is a branch of technological studies that deal with the design and operations of man-made systems in the ocean and other marine bodies. Through this course, Dr S Neelamani intends to provide an introduction to this ever-expanding domain. Major achievements in the field would be touched upon by citing case studies. The course would elaborate activities of Ocean Engineers, career opportunities in this field and academic institutes of repute.
Dr. S. Neelamani is a Senior Research Scientist, Coastal Management Program at Kuwait Institute for Scientific Research. Dr Neelamani has more than 350 scientific papers in reputed international and national Journals and conferences. Dr Neelamani’s specialization is Physical modeling on Coastal and Ocean structures, Ocean Energy and marine environmental issues. He was bestowed with the Scientific Achievement Award by Kuwait Institute for Scientific Research for 5 times since 2009 for his distinguished scientific contribution and achievements. He holds three US patents as lead inventor and has bagged recognitions from around the world for these inventions. His hobby is guidance and counseling of school children to excel in life.
https://us02web.zoom.us/j/88305548940
Meeting ID: 883 0554 8940
Passcode: 785461

Want your public figure to be the top-listed Public Figure in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

இந்தியாவிலே முதன்முறையாக வில்வப்பழ சர்பத்... தயாரிப்பு : #தரணி_ஹெர்பல்ஸ்.. #புஞ்சைபுளியம்பட்டி...குடல் பாதுகாப்பு:குடலை ...
ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் மகில் கொய்யா இலை டீ:கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த...
வைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் சிறப்பு மூலிகை தேநீர்- சித்த மருத்துவர் வீரபாபு...இதுகுறித்...
#தரணி_ஹெர்பல்ஸ்-ன் #மகில் சுக்கு காபி:மருத்துவ பயன்கள்சுக்கை மிஞ்சிய வைத்தியமுமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய சாமியுமி...
நுரையீரல் சளியை போக்கும் #வேடன் #நீர்_ஆவி பொடி:பயன்கள்:1) நுரையீரல் சளியை வெளியேற்ற உதவுகிறது.2) உடலில் உள்ள நச்சுக்கள் ...
யோகா என்னும் பழமையான கலைப்பயிற்சி மனிதர்களின் வாழ்வில் மனஅமைதியை ஏற்படுத்தி உடலை என்றும் பாதுகாப்பாக வைக்கின்றது....#தரண...
பெண்ணியம் காக்க #தரணி_ஹெர்பல்ஸ் குடும்பத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு...பெண்களிடம் கண்ணியமுடன் நடந்துகொள்வோம்... சமூக அ...
பல நாள் கனவே  ஒரு நாள் நனவே ..#தரணி_ஹெர்பல்ஸ் #புளியம்பட்டி to #சவுதிசவுதியில் 5 ஆவது கிளையை துவங்கும் எங்களுடைய வாடிக்க...
வைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் சிறப்பு மூலிகை தேநீர்- சித்த மருத்துவர் வீரபாபு...இதுகுறித்...

Category

Website

Address


NO:108, BHARATH NAGAR, 1ST Street, NEAR NOOR SAIT NURSERY & PRIMARY SCHOOL
Coimbatore
641001

Other Public Figures in Coimbatore (show all)
SATKA MATKA KING SATKA MATKA KING
Coimbatore

https://t.me/+d4qQQbYHgXUzZjQ1 https://t.me/+d4qQQbYHgXUzZjQ1

Sooraj Sooraj
Coimbatore

�Everything is Temporary........

We Support Balaji Uthamaramasamy We Support Balaji Uthamaramasamy
117 Sidhapudhur
Coimbatore, 641044

business man

Hari Haran Hari Haran
Coimbatore, 😔PLEASEDON'TUSEMEIMALREADYBROKEN😔

Rsnjeet kumar Rsnjeet kumar
Coimbatore

HARSIT

mahi_dha_ mahi_dha_
Coimbatore

Fusion car accessories Fusion car accessories
Coimbatore, 641008

All car accessories Car All Company Set....Speakers... Car seat covers Car full mats Horns..pulps.. fog lamps ..led lights Body Covers.. Amplifiers.. Woofers..Compant Speake...

Mrrபிரகாஷ் - திமுக - Vice Chairman Mrrபிரகாஷ் - திமுக - Vice Chairman
மலுமிச்சம்பட்டி திமுக கிளை கழகம்
Coimbatore

E Balagurusamy E Balagurusamy
Coimbatore
Coimbatore, 641046

Academic Advisor to Governor of Jharkhand | Chairman, EBG Foundation, Coimbatore | Author | Educator

kvelay kvelay kvelay kvelay
Coimbatore

DMK Cbe North DMK Cbe North
Coimbatore, 641006

வாழும் வரை திமுக

Jude Jude
Coimbatore