மக்கள் அதிகாரம் - கோவை மண்டலம்
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்கள் அதிகாரம் - கோவை மண்டலம், Political organisation, Coimbatore.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!
இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு எந்தவித பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் தமது விடுதலையை தமது சொந்தப் போராட்ட முயற்சியின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும். அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மையாகும்.
மேலும் படிக்க: https://www.vinavu.com/2024/09/23/sri-lanka-election-result-another-fascist-force-emerges-in-name-of-development/
#வினவு #மக்கள்அதிகாரம் #கோவை
இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி! இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு எந்தவித பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்ல.....
அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் பாசிச இஸ்ரேல் அரசு
அல்ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை மறைப்பதற்கு, இஸ்ரேல் அரசு தற்போது அல்ஜசீரா அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
https://www.vinavu.com/2024/09/24/fascist-israel-govt-order-closure-of-al-jazeera-office-in-ramallah/
#வினவு #மக்கள்அதிகாரம் #கோவை
அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் பாசிச இஸ்ரேல் அரசு அல்ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தது. இந்ந...
ரயில்வே துறையைச் சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்!
பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி அம்பானி, டாட்டாவுக்கு பலனளிக்கும் வகையில் செய்தது பாசிச மோடி அரசு. அதேபோல் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதியை தற்போது செய்து வருகிறது.
https://www.vinavu.com/2024/09/24/fascist-mob-handing-over-railway-to-corporate-by-allowing-to-rot/
#வினவு #மக்கள்அதிகாரம் #கோவை
ரயில்வே துறையைச் சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்! பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி அம்பானி, டாட்டாவுக்கு பலனளிக்கும்...
செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்தநாள் | பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய சமூகக் காரணிகளை ஒழித்துக் கட்டுவோம். அனுதினம...
ரயில்வே துறையை சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்!
இந்தியாவில் பயணிகள், ரயில்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரயில்வே துறையில் போதுமான அளவுக்கு பணியாளர்கள் இல்லை என்பது நீண்ட நாள் முறையீடாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதற்கு பணியாளர்களின் பணிச்சுமையும், பற்றாக்குறையும் முதன்மை காரணமாக கூறப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் ரயில்வே வாரியத்தின் தலைவர் - தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சதீஷ்குமார் பணியாளர் பற்றாக்குறை குறித்து நிதித்துறை அமைச்சகத்துக்கு எழுதி இருக்கும் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
2021 நிலவரப்படி இந்தியாவில் சராசரியாக 13,555 ரயில்கள் பயணிகளுக்காகவும், சரக்குகள் எடுத்துச் செல்வதற்காகவும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர். 150 கோடி டன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மொத்தம் 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ரயில்வேயில் மத்திய மண்டலத்தில் மட்டும் ஏறக்குறைய 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ரயில்களை இயக்குவது, பராமரிப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய பயணிகள் பாதுகாப்பு நோக்கிலான துறைகளில் மட்டும் இவ்வளவு பற்றாக்குறை இருப்பது கவலை அளிக்கிறது.
கடந்த 10ஆண்டுகளில் ரயில்வேயில் 31,000 கிலோமீட்டர் வழித்தடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 2019 - 2024 காலகட்டத்தில் 772க்கும் மேற்பட்ட புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2019ல் இருந்த இன்ஜின்களின் எண்ணிக்கை 2024 இல் 59.86 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இன்ஜின்களை இயக்குவதற்கு மட்டுமில்லாமல் இந்த கட்டமைப்பை பராமரிப்பதற்கும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் வேண்டும். ரயில் நிலையங்களில் உள்ள மின்படிகள் (எஸ்கலேட்டர்) மின் தூக்கிகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் விடும் மோடி அரசு அவற்றை நிர்வகிக்க தேவையான விகிதத்தில் பணியாளர் நியமனம் செய்வதில்லை.
வருவாய் நோக்கில் அரசுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் தான் இந்திய ரயில்வேயின் செயல்பாடு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 40 சதவீதமும் சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 31.40% அதிகரித்துள்ளன. புதிய பணியாளர் நியமனத்துக்கு பொருளாதார தடைகள் இருக்க வாய்ப்பு இல்லை. எனினும் பணிகளை மின்னணு மயமாக்குதல், பணி அயலாக்கம் (அவுட்சோர்சிங்) ஆகிய நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களுக்கான இடங்கள் குறைக்கப்படுகின்றன. எனினும் மனிதர்களின் நேரடி பங்களிப்பு இன்றி பல வேலைகள் தேக்கம் அடைவதும், வேலையின் தரம் குறைவதும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகின்றன.
ரயிலின் ஒரு பெட்டிக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதனை அதிகாரி (டிடிஇ) இருந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது ஒரு ரயிலுக்கே மொத்தமாக இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் தான் உள்ளனர். ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஒரே பணியாளரே தொடர்ந்து இரண்டு ஷிப்ட் ரயிலை இயக்க வேண்டிய நிலையும் கூட இருப்பதாக ரயில்வே தொழிலாளர் அமைப்புகள் முறையிட்டு வருகின்றன. இது சில வேலைகளில் விபத்துகளுக்கு வழி வகுப்பதும், அது ஓட்டுனரின் தவறாகவும் அலட்சியமாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுவதும் புதிதல்ல.
இந்தச் சூழலில் தான் பணியாளர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு தேவை என ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் சதீஷ்குமார் சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே துறைக்குள்ளிருந்து எழுந்திருக்கும்
முக்கியமான குரல் இது.
ஆனால் பாசிச மோடி அரசு இதையெல்லாம் தெரியாமல் செய்யவில்லை. பிஎஸ்என்எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பிற பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி அம்பானி, டாட்டாவுக்கு பலனளிக்கும் வகையில் செய்தது. இதுபோல் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதி இதனுள் அடங்கியுள்ளது.
தனியாருக்கு ரயில்வே துறையை தாரைவார்க்கும் பாசிச மோடி அமெரிக்காவிற்கு சென்று வெள்ளியில் செய்த ரயிலை பைடனுக்கு பரிசளித்துள்ளது தற்செயலானதல்ல. இதை ஒரு அடிமை தன் ஆண்டைக்கு மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து பரிசளிக்கும் குறியீடாக கொள்ளலாம். இன்னும் பல விசயங்களை குறியீடாக நமக்கு தெரிவிப்பார் பிரதமர் மோடி என நாம் உறுதியாக நம்பலாம். கார்ப்பரேட்டுகளையும் அவர்களுக்கு நாட்டின் வளங்களை கூறுபோடும் சங்பரிவார பாசிசக் கும்பலையும் வீழ்த்தாமல் நமது வளங்களையும், எதிர்காலத்தையும் நாம் காத்துக் கொள்ள முடியாது.
பதிவு
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் - நெல்லை மண்டலம் புதிய தொழிலாளி Communist Party of India -Marxist Leninist- Liberation CPIML May17 Movement
புதிய ஜனநாயகம் புத்தக அரங்கில்....
மாணவர்கள் மற்றும் ஜனநாயகசக்திகள்!
அரங்கக்கூட்டம் - மேட்டுப்பாளையம் - புகைப்படங்கள்
#மக்கள்அதிகாரம் #கோவை #மேட்டுப்பாளையம் #அரங்கக்கூட்டம் #புதியஜனநாயகம் #வெளியீடுகள்
மேட்டுப்பாளையம் - அரங்கக்கூட்டம்! - மகஇக - சிவப்பு அலை கலைக்குழு - பாடல் - புகைப்படங்கள்
மக்கள் அதிகாரம் - கோவை
#மகஇக #சிவப்புஅலை #கலைக்குழு #மேட்டுப்பாளையம் #அரங்கக்கூட்டம் #கோவை #மக்கள்அதிகாரம்
அரங்கக்கூட்டம் - மேட்டுப்பாளையம் - புகைப்படங்கள்
“பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு”
மக்கள் அதிகாரம் - கோவை
#மக்கள்அதிகாரம் #மேட்டுப்பாளையம் #அரங்கக்கூட்டம்
“பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு”
அரங்கக்கூட்டம் - மேட்டுப்பாளையம் - புகைப்படங்கள்
மக்கள் அதிகாரம் - கோவை மண்டலம்
#மேட்டுப்பாளையம் #அரங்கக்கூட்டம் #மக்கள்அதிகாரம்
பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு” அரங்ககூட்டம்.✊
மேட்டுப்பாளையத்தில் செப் 22, காலை 10.30 மணிக்கு சேரன் மஹாலில் நடைபெற இருக்கின்ற அரங்கக் கூட்டத்திற்கு ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
9488902202
கோவை மேட்டுப்பாளையத்தில் செப் 22, அன்று காலை 10 மணிக்கு சேரன் மஹாலில் நடைபெற இருக்கின்ற அரங்கக் கூட்டத்திற்கு ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
கோவையில்....
சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்ணடிமை எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமூக நீதி, (சனாதன) பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப்பிடித்த பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு கோவை மக்கள் அதிகாரம் சார்பாக மாலை அணிவித்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
#பெரியார் #பெரியார்146 #மக்கள்அதிகாரம் #கோவை
மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி (1872 – 1936) | வெளியீடு
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹10 | தொடர்புக்கு: 9385353605
https://www.vinavu.com/2024/09/14/voc-a-great-leader-publication/
மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி (1872 – 1936) | வெளியீடு வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹10 | தொடர்புக்கு: 9385353605
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் 2 | கோவை தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் – அரங்கக் கூட்டம் | தேதி : 22.09.2024 | நேரம் : காலை 10 மணி | இடம் : சேரன் மஹால் (ஈஸ்வரியம்மா....
பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்
சேரன் மஹால்
(ஈஸ்வரியம்மாள் பேலஸ்) பங்களா மேடு, மேட்டுப்பாளையம், கோவை.
செப்டம்பர் 22, 2024
ஞாயிறு
காலை 10 மணிக்கு
நிகழ்ச்சி நிரல்
தலைமை :
தோழர்.மாறன், மக்கள் அதிகாரம்.
வரவேற்புரை
தோழர்.சங்கர், மண்டல செயலாளர், மக்கள் அதிகாரம்.
முன்னிலை
திரு.VMT.ஜாபர்,
வடக்கு மாவட்ட செயலாளர்,
மனிதநேய ஜனநாயகக் கட்சி.
திரு.உமர் பாரூக்,
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேசன் டிரஸ்ட்
தோழர்.நாகேந்திரன்
மு.மாவட்டத் தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சி
தோழர்.குடியரசு, மண்டல செயலாளர் (கோவை, நீலகிரி), விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர்.சபாபதி,
மாநில அமைப்பு செயலாளர்,
தமிழ் புலிகள் கட்சி.
தோழர்.நாகராசன்,
பொதுச்செயலாளர்,
சமூகநீதிக் கட்சி.
திரு.முஹம்மது அப்பாஸ்,
வடக்கு மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி.
திரு.F.முஹம்மது அப்பாஸ்,
நகர தலைவர் SDPI
வாழ்த்துரை :
திரு.முகமது சுலைமான்,
வழக்கறிஞர்.
திரு.ஜெமீஷா, வழக்கறிஞர்,
மண்டல ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய வழக்கறிஞர்கள் குழமம்.
தோழர்.ராஜன்,
மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
சிறப்பு பேச்சாளர்கள்:
தோழர்.சக்திவேல், வழக்கறிஞர்,
இணைச் செயலாளர்,
ஜாக் கூட்டமைப்பு.
தோழர். வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
நன்றியுரை :
தோழர்.குமார்
மண்டல துணை செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
ம.க.இ.க-வின் சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
தொடர்புக்கு : 94889 02202
பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்
சேரன் மஹால்
(ஈஸ்வரியம்மாள் பேலஸ்) பங்களா மேடு, மேட்டுப்பாளையம், கோவை.
செப்டம்பர் 22, 2024
ஞாயிறு
காலை 10 மணிக்கு
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
தொடர்புக்கு : 94889 02202
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு. வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி !
10 .09. 2024
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ( மாநில ஒருங்கிணைப்புக் குழு ) மக்கள் அதிகாரம் ஆகிய எமது அமைப்புகளுக்கு பல்வேறு நெருக்கடியான காலங்களில் ஆதரவளித்தும் செயல்பட்டு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு .வெள்ளையன் அவர்களுக்கு எமது அமைப்புகளின் சார்பில் அஞ்சலியை செலுத்துகிறோம்.
வணிகர் சங்கங்களின் பேரவை மூலம் பல்வேறு சிறு தொழில் வியாபாரிகளுக்கு அந்நிய மூலதன எதிர்ப்பு, கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பு, தனியார்மய - தாரளமய- உலகமய எதிர்ப்பு அரசியலை கற்றுக் கொடுப்பதில் முனைப்பாக செயல்பட்டவர்.
குறிப்பாக, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது அன்றைய மன்மோகன்சிங் தலைமையிலான அரசு. இதனை எதிர்த்து ரிலையன்ஸ் பிரஷ் சங்கிலித் தொடர் கடையினை முற்றுகையிட்டு போராடிய போது அப் - போராட்டத்தில் ஊக்கமாக அந்த கலந்து கொண்டார்.
எமது மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் மூலம் தான் தனியார்மய - தாராளமய - உலகமய எதிர்ப்பு அரசியலை கற்றுக் கொண்டேன் என வெளிப்படையாக பல்வேறு மேடைகளில் பேசியதுடன் வணிகர் சங்க கூட்டங்களில் வணிகர்களுக்கு சுதேசி உணர்வை ஊட்டும் வகையில் அந்நிய நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பேசுவார். இது குறித்து விளக்கி எழுதப்பட்ட சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு : வாழ்வா - சாவா போராடு என்ற வெளியீட்டை வணிகர்களுக்கு பல நூறு எண்ணிக்கையில் வாங்கிக் கொடுத்ததுடன் அதனை படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
2015 ஆம் ஆண்டு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது பல்வேறு தோழர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் துணிச்சலாகவும் போர்க்குணமாகவும் எமது போராட்டங்களில் பங்கேற்று உடன் நின்றவர்.
பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் நேரடியாக ஈடுபட்டவர்.
சுதேசிப் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்நிய மூலதனம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர். ஏகாதிபத்திய அடிமை பண்பாட்டை குறிக்கும் கோக் - பெப்சி போன்ற குளிர் பாணங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் உள் நாட்டு உற்பத்தி அடிப்படையிலான குளிர்பானங்கள் , மற்றும் இளநீர் அருந்த வேண்டும் என்பதை ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கினார்.
தன் வாழ்க்கை முழுவதையும் சிறு தொழில் வியாபாரிகளுக்காகவே அர்ப்பணித்தவர். தனது இறுதி நாட்களில் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்தும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க கூடாது வணிகர்களைத் திரட்டி போராடினார்.
இப்படி ஓய்வு உறக்கம் இன்றி உழைத்த திரு .வெள்ளையன் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக மரணமடைந்து உள்ளார்.
அவருடைய குடும்பத்தாருக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் எமது அமைப்புகளின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சில்லறை வணிகத்தையும், நாட்டையும் சூறையாடும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்த்து போராடுவதே திரு. வெள்ளையன் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன் ,
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ( மாநில ஒருங்கிணைப்பு குழு)
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு - புதுவை
வெல்லட்டும் மணிப்பூர் மக்கள் போராட்டம்!
Peace-broker!
Post: Cartoonist Satish Acharya
செம்புரட்சிக்குத் தலைமை ஏற்று உழைக்கும் மக்களின் அரசு ஒன்றை அமைத்த மாசேதுங் மறைந்த நாள் 9 செப்டெம்பர் 1976.
சோசலிச புரட்சி சாத்தியமே இல்லை என கருதப்பட்ட பின்தங்கிய நிலபிரபுத்துவ சமூகமான சீனாவில், எளிய விவசாயிகளைத் திரட்டி ஒரே சமயத்தில் உள்நாட்டு எதிரிகளையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகளையும் தோழர் மாசேதுங்கின் தலைமையின் கீழ் முறியடித்து வெற்றிகண்டது சீன செஞ்சேனை. மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் ஊன்றி நின்ற மாசேதுங் ஒரு கவிஞரும் ஆவார்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Coimbatore