Vaideeka Samajam

Vaideeka Samajam

You may also like

Sathuram.org
Sathuram.org

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vaideeka Samajam, Community Center, 40, 13th cross, New Thillai Nagar(N), P. N. Pudur, Coimbatore.

Mobile Uploads 26/09/2015
Timeline photos 06/03/2015

சந்தனக் காப்பு அலங்காரம்

திருஉத்திரகோச மங்கை ஆலயத்தில் உள்ள நடராஜர் சிலையானது மரகதத்தினால் ஆன திருமேனியாகும். எனவே இந்த இறைவன் எப்போதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே வீற்றிருப்பார்.

திருவாதிரை ஒருநாளில் மட்டுமே சந்தனக்காப்பு இல்லாத மரகத நடராஜரை தரிசனம் செய்ய முடியும். அன்றைய தினம் பூஜை முடித்து மீண்டும் சந்தனக்காப்பு சாத்தப்படும். இந்த சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அடுத்த வருட திருவாதிரை வரை இறைவன்
பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Timeline photos 23/06/2014

சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?

தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

24/03/2014

24.03.2013.panguni matham.10.monday. moola nakshatram.mornig.11.46am.after poorada nakshatram.sidda yogam.krishna paksha ashtami thithi03.44pm.after navami.shradha thithi ashtami.

Aga Vaikunthichya raya.. (By Anand Bhate) 03/12/2013

Aga Vaikunthichya raya.. (By Anand Bhate) Aga Vaikunthichya Raya... a very popular Natya geet.. sung by Anand Bhate (Anand Gandharva) Accompanied by Rahul gole on Organ

Timeline photos 02/12/2013

ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை( ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள்)

எந்த ஒன்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பெரும்பாலும், அனைவருமே ஒரு பக்கத்தையே பார்ப்போம். மறுபக்கத்தைப் பார்க்கமாட்டோம். நமக்கு நன்றாகவே தெரிந்த துரோணர், குசேலர் என்னும் இருவரின் கதைகளையும் இங்கே தன் பாணியில் சொல்லி, அவற்றின் மறுபக்கத்தை அலசி ஆராய்ந்து அறிவுறுத்துகிறார் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள்.

துரோணரும், இளவரசனான துருபதணும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது துருபதன் தன் நண்பனான த்ரோணரிடம், “நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்” எனச் சொல்லியிருந்தான்.எங்கே… சொன்னபடி நடந்துகொண்டானா துருபதன்? அதுபற்றி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகளே இங்கே மனம் திறக்கிறார்.

“பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவித்தது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட துருபதனிடம், ‘ நம் பழைய கிளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், ‘இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friend-ship கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான்.

இதிலே, அவனுக்கு எதிரடி தரவேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு துருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். திரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, ‘நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?’ என்று துருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந்தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப்படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷாத்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடம் வன்மம் கொண்டான்.

கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, “அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:” என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, “குஞ்ஜர” (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனச் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு உட்கார்ந்து விட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரை கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதை பார்த்துப் பாண்டவ சைன்யத்தினர் உள்பட எல்லாரும் ‘தகாத கார்யம் நடக்கிறதே’ என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.

இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனசுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் ஸஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்து பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, ‘இது நம் அகந்தானா?’ என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸத்யமாகவும், மனஸை உறுத்துகிறார் போல போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது….

குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடன் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

த்ரோணரும் மஹா பெரியவர்தான் என்றாலும் ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது.

த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் எதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமானமும் க்ஷாத்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனசைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமில்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சிக்ஷை கற்றுக் கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படி செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக்கிறது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கு எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வார்த்தயம்புகளை பீமசேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடத்தாதற்காகப் ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.

ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன

Timeline photos 01/10/2013

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான - யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.

அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... கரக்... கரக்... என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான். என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.

கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு - வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.

தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்துவிடுகிறோம். அதாவது.. தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பிவிட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம். கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.

Timeline photos 25/09/2013

பழங்களின் மருத்துவ குணங்கள்:-
1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம்,
மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் :-
குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம் :-
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும்
நல்லது.
4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக்
குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம் :-
கண்ணிற்குக் குளிர்ச்சி
6. நேந்திர வாழைப்பழம் :-
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்க
7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப்
போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக்
கோளாறுகள், இதய நோய்கள், இரத்த
அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும்,
வாய்ப்புண், வயிற்றுப்
புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.
9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின்
மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக
திராட்சை பழங்களைப்
பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்ட
2 வேளை கொடுத்தால்
இக்குறைபாடுகள் நீங்கும்.
10. மஞ்சள் வழைப்பழம் :-
மலச்சிக்கலைப் போக்கும்.
11. மாம்பழம் :- மாம்பழம்
சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம்
சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
மாம்பழத்தில் வைட்டமின் …ஏ
உயிர்சத்து நிறைந்துள்ளது.
இதனை உட்கொள்வதால் நமது ரத்தம்
அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல
பலம் கிடைப்பதாக உள்ளது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும்
அளிக்கிறது.
12. கொய்யாப்பழம் :- உடல்
வளர்ச்சியும் எலும்புகள் பலமும்
பெறுகின்றன. வயிற்றில் புன்
இருந்தால் குணப்படுத்தும். சி உயிர்
சத்து அதிக அளவில்
நிறைந்துள்ளது. வளரும்
சிறுவர்களுக்கு வைட்டமின் …சி†
உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தைய
உறுதியையும் அளிக்கின்றது.
மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப்
பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பய
பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த
சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம்
சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி க
விஷ கிருமிகளை கொல்லும்
சக்தி கொய்யாப்
பழத்திற்கு இருப்பதால்
வியாதியை உண்டு பண்ணும் விஷக்
கிருமிகள் ரத்தத்தில் கலந்தால்
அதை உடனேயே கொன்று விடும்.
13. பப்பாளி :- மூல நோய்,
சர்க்கரை நோய், குடல்
அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய
பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ†
உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல்
சம்மந்தமான குறை பாட்டிற்கும்,
சிறு நீர்ப்பையில் உண்டாகும்
கல்லை கரைக்கவும் பப்
பாளி சாப்பிட்டால் போதும். மேலும்-
நரம்புகள் பலப் படவும்,
ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த
விருத்தி உண்டாகவும், ஞாபக
சக்தியை உண்டு பண்ணவும்
பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சாpயான அளவில்
இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும்
பெண்மணிகள் தினமும்
பப்பாளிப்பழம் உண்டு வந்தால்
மாதவிடாய் குறைபாடு சீராகும்.
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்ட
எவ்வகை நோய்க்கும் ஆளாக
நோpடாது. எந்த வகையான
தொற்று நோய் பரவினாலும்,
அது இவர்களை தாக்காது.
பப்பாளி பழத்தில்
இயற்கையாகவே விஷக்கிருமிகளை க
ஒரு வகை சத்து இருப்பதால்
பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின்
ரத்தத்தில் நோய் கிருமிகள்
தங்கி நோயை உண்டு பண்ண
வாய்ப்பில்லை.
14. செர்ரி திராட்சை :-
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.
15. அன்னாசி :- அன்னாசி பழத்தில்
வைட்டமின் …பி உயிர்சத்து அதிக
அளவில் உள்ளது. அது உடலில்
ரத்தத்தை விருத்தி செய்வதாகவும்,
உடலுக்கு பலத்தை தருவதாகவும்
இருப்பதோடு பல
வியாதிகளை குணப்படுத்தும் அhpய
மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல்
இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம்
ஒரு சிறந்த டானிக். நன்றhக பழுத்த
அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டு
செய்து வெய்யிலில் தூசிப்படாமல்
உலர்த்தி வற்றல்களாக
செய்து வைத்து கொண்டு தினமும்
படுக்க
செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு மு
ஒரு டம்ளர் பாலில் ஓர்
ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற
வைத்து, பின் படுக்கச் செல்லும்
போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள்
சாப்பிட்டு வரவேண்டும். இதனால்
பித்தம் சம்மந்தமான
அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்
பெண்களுக்கு ஏற்படும்
வெள்ளை நோய் குணமாகும்.
16. விளாம்பழம் :- விளாம்பழம் பல
வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த
பழமாகும். இதில் இரும்பு சத்தும்,
சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ
சத்தும் உள்ளது. இப்பழத்துடன்
வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள்
சாப்பிட்டு வந்தால் பித்தம்
சம்மந்தமான அனைத்து கோளாறுகளும்
குணமாகும்.
பித்தத்தால் தலை வலி,
கண்பார்வை மங்கல், காலையில்
மஞ்சளாக வாந்தி எடுத்தல்,
சதா வாயில் கசப்பு, பித்த
கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக
வேர்வை, பித்தம் காரணமாக இளநரை,
நாவில்
ருசி உணர்வு அற்றநிலை இவைகளை
பழம் குணப் படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும்
நோய் அணுக்களை சாகடிக்கும் திறன்
உண்டு. எனவே எந்த நோயும்
தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண
குறைபாட்டை போக்கி பசியை உண்டு
ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.
முதியவர்களின் பல்
உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல
மருந்து.
17. மாதுளம் பழம் :- மாதுளம்
பழத்திற்கு மலத்தை இளக்கும்
சக்தி உணடு. மலச்சிக்கலால்
கஷ்டப்படுபவர்கள்
தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்
பழத்தை சாப்பிட்டு வந்தால்
மலச்சிக்கலிலிருந்து குணம்
பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள்
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாது
பழம் சாப்பிட்டு வந்தால் இருமல்
குணமாகும். பித்த சம்மந்த மான
அனைத்து உடல்நல
குறை பாட்டிற்கும் மாதுளம்
பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின்
தோலை அம்மியில் மை போல்
வைத்து அரைத்து அதில்
எலுமிச்சம்பழம்
அளவு எடுத்து அரை ஆழாக்கு எரும
கலந்து மூன்று நாள் காலையில்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற
மருந்துகள் கொடுத்தும் குணமாகாத
சீதபேதி உடன் நிற்கும்.
18. வாழைப்பழம் :- மலச்சிக்கல்
இருப்பவர்கள், மூலநோய்
குறைபாடு இருப்பவர்கள் தினமும்
வாழைப்பழம்
ஒன்றை சாப்பிட்டு வந்தால்
மலச்சிக்கல், மூல நோய்
குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.
மேலும் தினமும்
இரவு உணவிற்கு பின் ஒரு பழம்
வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண
சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும்,
கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன்
அவர்களுக்கு தினசாp உணவில்
செவ்வாழைப்பழம்
வேளைக்கு ஒன்று வீதம் 21
நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண்
பார்வை கொஞ்சம் கொஞ்சமாக
தௌpவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும்
கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம்
வருந்தி கொண்டிருக்கும்
தம்பதியர்கள்
செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பி
உடலில் உயிர் சக்தி அணுக்கள்
போதுமான அளவில்
பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர்
விட்டு கரைத்து மூன்று வேளை கொட
வயிற்றுப்போக்கு நின்று விடும்.
இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ
பயன் மிக்கதாகவே இருக்கின்றது.
இதில் வைட்ட மின் …ஏ†
உயிர்சத்து அதிகம் இருப்பதால்
இதை சாப்பிட்டால் உடல்
வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ†
உயிர்
சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்
சக்தி இருப்பதால் உடலில்
தொற்று நோய் தொற்றாது.
19. ஆரஞ்சுப்பழம் :- ஆரஞ்சில்
வைட்டமின் …ஏ அதிகமாகவும்,
வைட்டமின் …சி-யும், …பி-யும்,
பி-2ம் உள்ளன. மேலும் இதில்
சுண்ணாம்புச்சத்தும்
மிகுந்து காணப்படுகிறது. பல
நாட்களாக வியாதியால்
பாதித்து தேறியவர்களுக்கு
இதுவொரு சிறந்த இயற்கை டானிக்
ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல்
கஷ்டப்படுபவர்கள் படுக்க
போவதற்கு முன்பாக அரை டம்ளர்
ஆரஞ்சு பழச்சாறுடன்
சிறிது சுத்தமான
தேனை சேர்த்து சாப்பிட இரவில்
நன்றhக தூக்கம் வரும். பல்
சதை வீக்கம்,
சொத்தை விழுந்து வலி ஏற்படுதல்,
பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல்
இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர்
ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழ
உடன் நிவாரணம் பெறலாம்.
20. திராட்சைப் பழம் :-
எல்லா வகையான திராட்சையிலும்
பொதுவாக வைட்டமின் …ஏ
உயிர்சத்து அதிக அளவில்
காணப்படும். பொதுவாக சாpயாக
பசி எடுக்காமல் வயிறு மந்த
நிலையில் காணப்படுபவர்கள்
கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர்
திராட்சையில் அரைடம்ளர்
சாறு எடுத்து அதனுடன்
சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்த
மந்த நிலை நீங்கி நன்றhக
பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக
கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு
வரப்பிரசாதமாகும். மாத
விலக்கு தள்ளிப்போதல், குறைவாக
வும், அதிகமாகயும் போதல் போன்ற
குறைபாடுகளுக்கு
கருப்பு திராட்சை சாறு அரை டம்ளாp
சிறிது சர்க்கரை சேர்த்து தினமும்
வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வந்தால் முறையான கால
இடைவெளியில்
மாதவிலக்கு வெளியாகும்.
திராட்சை சாற்றினை தொடர்ந்து 21
நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில்
புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும்
புண் ஏற்படும். வாயில் உள்ள
புண்ணை ஆற்ற வேண்டுமானால்
முதலில் வயிற்றில் உள்ள
புண்ணை ஆற்ற வேண்டும். இருமல்
நின்று விடும்.
அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய
இஞ்சி துண்டை நறுக்கிப்
போட்டு கொதிக்க
வைத்து இறுத்து ஆற
வைத்து இதேபோல்
தொடர்ந்து காலை மாலையாக
மூன்று தினங்கள்
கொடுத்து வந்தாலும் இருமல்
நின்று விடும்.
தலைவலி இருப்பவர்கள் சூடான கப்
காபியில்
அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்த
நாட்கள் குடித்து வந்தால்
பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில்
எலுமிச்சை பழத்தினை இரண்டாக
பிளந்து ஒரு பாதியை கொட்டிய
இடத்தில் நன்றhக தேய்க்க வேண்டும்.
இவ்வாறு இரண்டு துண்டுகளையும்
தேய்த்துவிட்டால்
சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம்
இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம்
பழத்தினை அடிக்கடி உபயோகித்து
அதிகாpப்பால் உண்டாகும்
வயிற்று வலி, பித்தத்தால் ஜPரண
உறுப்புகளில் ஏற்படும்
குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும்
சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல்,
உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள்
வராது.
21. பேரீச்சம்பழம் :- தினமும் இரவில்
படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர்
காய்ச்சிய பசும் பாலையும்,
இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும்
உண்டு வந்தால் உடல் நல்ல
பலம்பெறும். புதிய ரத்தமும்
உண்டாகும். தோல் பகுதிகள்
மிருதுவாகவும், வழுவழுப்பாகவும்
இருக்கும். கண் சம்மந்தமான
கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான
கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய்
கிருமிகள் நம்மை அணுகாது. பல்
சம்மந்தமான வியாதிகளும்
குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
22. எலுமிச்சம்பழம் :-
அளவிற்கு மீறி பேதியானால்
ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்
நீhpல் கலந்து கொடுத்தால்
உடனடியாக பேதி நின்றுவிடும்.
கடுமையான வேலை பளுவினால்
ஏற்படும் களைப்பை போக்க
எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்ற
உடனே களைப்பை போக்கும்.
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால்
கஷ்டப்படுகிறவர்கள்
ஒரு எலுமிச்சை பழச்சாறுடன்
ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை,
மாலையாக தொடர்ந்து 3 நாட்கள்
சாப்பிட்டு வந்தால் கபம்
வெளியாகி உடல் நன்கு தேறும்.

Timeline photos 21/09/2013

கல்வியில் சிறந்து விளங்க..
ஹயக்ரீவர் மூலமந்திரம்..

உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய..

14/09/2013

World Wide Tamil People

தெரிந்து கொள்ளுங்கள். World Wide Tamil People

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் ..4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்...
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம் பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

26/01/2013

Vaideeka Samajam

I'm now broadcasting live at www.vaideekasamajamcbe.org

vaideekasamajamcbe.org

02/09/2012

Vaideeka Samajam's cover photo

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


40, 13th Cross, New Thillai Nagar(N), P. N. Pudur
Coimbatore
641041

Other Community Centers in Coimbatore (show all)
Lingam mahal Lingam mahal
Site Num 33, 34 T. V. S Nagar Mainroad Koundampalayam Coimbatore
Coimbatore, 641030

Lingam mahal is a mini hall with a seating capacity of 150 to 200 people.

Kovai Dreamers Kovai Dreamers
V N R Nagar, Vadavalli
Coimbatore, 641041

Welcome to Kovai Dreamers. We will be working towards building a strong running community.

SSVM Transforming India SSVM Transforming India
72, Vaigai Nagar, Thirupathi Nagar, Perumal Nagar, Kovaipudur
Coimbatore, 641042

SSVM Transforming India Conclave 2nd edition - Unleash The Power Within You

Shree Valliamman Mahal Shree Valliamman Mahal
419/1B Sri Valliamman, D M Kovil Street, Marudhamalai Adivaram, Adivaram
Coimbatore, 641046

Shree Valliamman Temple Mahal located at the foothills of marudhamalai is one among the most magnifi

Hinduism now tamil Hinduism now tamil
Coimbatore, 641001

1 Billion Lives Enriched 11,514 Digital Ecosystems 193 Countries kailaasa.org/digital

Zaista Zaista
35, Kuchi Naidu Layout, Masakapalayam
Coimbatore, 614004

zaista.io A Blockchain-based platform from syndicate technologies strives to change this entirely by

Kovai Nagaichuvai Sangam Kovai Nagaichuvai Sangam
Coimbatore

உங்களை மகிழ்விக்க , கவலைகளை போக்க இதோ

Thambraas Kovai Thambraas Kovai
394, Thadagam Road, R S Puram
Coimbatore, 641002

Thamizhnadu Brahmin Association Coimbatore

RV Park Inn RV Park Inn
Coimbatore, 641103

MINI HALL AVAILABLE FOR ALL OCCASIONS EARING CEREMONY,PUBERTY FUNCTION,BIRTHDAY FUNCTION,MARRIAGE, RECIEPTION,GET TOGETHER

RV Park Inn RV Park Inn
SF No. 86, Trichy Road, Chinthamanipudur
Coimbatore, 641103

Marriage/function/party hall | Capacity : upto 250 | SF No 86, Trichy Road, Chinthamanipudur, CBE