வாழ்க தமிழ்
Nearby schools & colleges
Mathura
Mathura
Patna
Mathura
625001
625001
625001
625022
Bigmakers
625001
madurai
தாய் மொழி தமிழ் எனும் போதினிலே சக்தி ?
தாய் மொழி தமிழ் எனும் போதினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி
மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி
நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
#மதம்
நாள் என் செயும்?
வினைதான் என் செயும்?
எனை நாடி வந்த
கோள் என் செயும்?
கொடும் கூற்று என் செயும்?
குமரேசர் இருதாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே
இந்தப் பாடல் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழகப் புலவர் அருணகிரிநாதரால் எழுதப்பட்டது. இது கந்தர் அலங்காரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் முருகப்பெருமானின் சக்தியையும், அவரது அருளைப் பற்றியும் பேசுகிறது.
பாடல் 14 வரிகளைக் கொண்டது. முதல் நான்கு வரிகளில், பாடல் சொல்லும் நபர் தனது எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார். அவர் நாளும், வினையும், கோளும், கொடும் கூற்றையும் பற்றி கவலைப்படுகிறார்.
ஐந்தாம் வரி முதல் பதினான்காம் வரி வரை, பாடல் முருகப்பெருமானை வழிபடுகிறது. பாடல் சொல்லும் நபர் முருகப்பெருமானின் இரு தாளங்களையும், சிலம்பங்களையும், சதங்கைகளையும், தண்டையையும், சண்முகங்களையும், தோளையும், கடம்பமலர் மாலையையும் தரிசிக்கிறார். அவர் முருகப்பெருமானின் தோற்றத்தைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்.
இந்தப் பாடலின் பொருள் பின்வருமாறு:
நாளென் செயும்? - நாட்கள் என்ன செய்வார்கள்?
வினைதான் என் செயும்? - வினைகளே என்ன செய்வார்கள்?
எனை நாடி வந்த கோள் என் செயும்? - என்னை நாடி வந்த கோள்கள் என்ன செய்வார்கள்?
கொடும் கூற்று என் செயும்? - கொடிய கூற்றுகள் என்ன செய்வார்கள்?
குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன் வந்து தோன்றிடினே. - குமரேசரின் இரு தாளங்களும், சிலம்பங்களும், சதங்கைகளும், தண்டையும், சண்முகங்களும், தோளும், கடம்பமலர் மாலைகளும் எனக்கு முன் வந்து தோன்றின.
இந்தப் பாடல் முருகப்பெருமானின் அருளைப் பற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பாடல் சொல்லும் நபர் தனது எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார், ஆனால் முருகப்பெருமானின் தோற்றத்தைக் கண்டதும், அவரது அருளை உணர்ந்து, கவலைகள் நீங்குகின்றன.
* #காமராஜர் மறைவையொட்டி அப்பொழுதே துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்கம் !!*
(நாம் இப்போது நினைப்பதை அப்போது வெளிப்படுத்திய சோ)
பெருந்தலைவர் திரு. காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இதோ!!!
''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது.
◼யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
◼மனம் சாய்ந்த பிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
◼ஒரு சரித்திரம் முடிந்தது" என்று சொல்வார்கள் .
◼ஒரு சகாப்தம் முடிந்தது" என்று சொல்வார்கள்.
◼ஒரு தியாக பரம்பரை முடிந்தது'' என்று சொல்வார்கள் . *எல்லாமே முடிந்துவிட்டது" என்று சொல்வதுதான் உண்மையோ* என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
◼மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது.
◼வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும்
சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப்பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச்சேர்ந்துவிட்டார்.
◼மற்றவர்களையெல்லாம் வாழவைக்க நினைத்த அந்த மனிதனை , வாழவேண்டிய விதத்தில் வாழவைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து "வாழ்க'' என்ற கோஷம் வானதிரக்கிளப்பி , அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.
◼நேர்மை விடைபெற்றுக் கொண்டுவிட்டது. பொதுப்பணி , சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிட்டது.
◼திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. *இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.*
◼காலம் நமக்குப்புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... *நமக்கு வேண்டியதுதான்.*
◼யாரும் , யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை நமக்கு நாமே அழுதுகொள்வோம். அனுபவிக்கவேண்டிய தண்டனைகளை இனி நாம்தானே அனுபவிக்கப்போகிறோம்?
◼இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது.
◼இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... *படவேண்டியது இனி நாம்தான்...*
புலத்தில் புலனானது!
“ஐயா வணக்கம்."
"வணக்கம். சொல்லுங்க."
"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"
"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"
"நேற்றுதான் ஐயா புலனம் (WhatsApp) மூலம் அனுப்பினேன்.
இன்று காலை பற்றியம் (Messenger) மூலமும் பகிர்ந்தேன்."
"நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது தொலைவரி (Telegram) தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். இயங்கலை (Online) மூலம் பங்கேற்கலாமா ?"
"சரி ஐயா. காயலை (skype) மூலம் பேசுங்கள்.
நாங்கள் ஒளிவீச்சி (Projector) மூலம் பங்கேற்பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்."
"மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு.இல்லையெனில் தடங்காட்டி (GPS) உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன். பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன்.தாங்கள் அதை உங்கள் படவரி (Instagram) மூலமும், கீச்சகம் (Twitter) மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்."
"நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் அருகலை (WiFi) வசதி இருக்கிறதா?" இல்லை ஐயா. எனது இன்னொரு திறன்பேசி (smart phone) மூலம் பகிரலை (Hotspot) உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா.
உங்கள் இல்லத்தில் ஆலலை (Broadband) இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?"
"இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை."
"உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, வலையொளி (youtube) மூலமும், முகநூல் (facebook) மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை வன்தட்டில் (Hard disk) சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு முடக்கலை (Offline) யிலும் கண்டு களிக்கலாம்." மிக்க நன்றி.
⭕ WeChat - அளாவி
⭕Bluetooth - ஊடலை
⭕ Thumbdrive - விரலி
⭕ cctv - மறைகாணி
⭕ OCR - எழுத்துணரி
⭕ LED - ஒளிர்விமுனை
⭕ 3D - முத்திரட்சி
⭕ 2D - இருதிரட்சி
⭕ printer - அச்சுப்பொறி
⭕ scanner - வருடி
⭕ Simcard - செறிவட்டை
⭕ Charger - மின்னூக்கி
⭕ Digital - எண்மின்
⭕ Cyber - மின்வெளி
⭕ Router - திசைவி
⭕ Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
⭕ Thumbnail சிறுபடம்
⭕ Meme - போன்மி
⭕ Print Screen - திரைப் பிடிப்பு
⭕ Inkjet - மைவீச்சு
⭕ Laser - சீரொளி
ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் இவ்வளவு பெரிய உண்மை.. கதை அல்ல நிஜமே !
ஒரு பாடலின் கதை
🎼🎼🎼🎺🎺🎺🎼
இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”
எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!
ஆனால் இன்று ஏனோ....
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே ,
மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -
மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*
# பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...
“ அது வந்து....
அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில்
அதுவும் ஒன்று....
அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”
# சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..
கண்ணதாசன்...!
சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..!
அவர் ஒரு வரி எழுதினால் ..
அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!
கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி...
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....
அது இதுதான்...!
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்...
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும்
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் ....
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி ,
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்...
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்...
வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
#.. கதையைப் படித்து முடித்த நான் ,
கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”...கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் ,
இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..!
இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் ,
கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் ,
எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?
“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”
# கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல...
பூஜிக்க வேண்டிய கவிஞன்..!
சித்திரை திருநாள்
பத்தரைமாற்றுத் தங்கமே
புதுச் சித்திரையே
முத்திரை பதித்திடவே
வருகவே
வெத்திலை பாக்குடன் வரவேற்போம்
நித்தமும் சீரும் சிறப்பும் நல்கு நீ
நல்விதையை
நாளும்
விதைத்திடு
பொல்லாங்கு யாவையும்
புறந்தள்ள்ளி வை
புதுக் குருதி நீர்வார்த்து
புடம்போட்டு மனிதரை வளர்
வெற்றிக் கணக்கு உன்னில் தொடங்கட்டும்
வீழ்ந்து மடியட்டும் வைரஸ் நோய்கள்
வையத்தோரை
வளமாய் நீயும் வாழவை
நல்வரவு சொன்னோம்
இருகை குவித்தே
நலங்கள் பல
தருவாய் நீ
சித்திரை வாழ்த்துகள்
செந்தமிழ் வணக்கங்கள்
தோழமையுடன்
சீனிசந்திரசேகரன்
உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது.
எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண், தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன்.
பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு.
என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட நம்பிக்கைகளையும், மனக் கலக்கங்களையும், தேவையில்லாத பழம் வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள்.
எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும், நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள்.
தன் பெண்கள் மற்றும் பேரக் குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள். எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம்.
தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும், எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம், என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள்.
1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை.
“வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”.
அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம்.
நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை.
பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது. இறுதி நிமிடங்கள் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும் உறங்கவில்லை.
அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்.
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள்.
என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன்.
நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்கு கல்லாதவள் என்னுளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.
அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறைப் பாடினாள்.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய்.
உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்..
“திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான். திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”
அவள் மூச்சு நின்று விட்டது.
அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள்.
என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி.
டாக்டர் விஜயா பாரதி, 1960களிலேயே, பாரதியின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் கவிதைகளைப் பிழை நீக்கி நான்கு பகுதிகளாகப் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அறம்
செய்தல் உன் கடனே,அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே!
-பாரதியார்
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்....
கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -
பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?
பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.
பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –
பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.
கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –
பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.
கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?
பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.
கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!
பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!
கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?
பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.
கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?
பதில்: சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?
கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?
பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.
கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?
பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.
கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?
பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.
கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?
பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’
கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்?
பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்...
சுஜாதாவை ருசிப்பவருக்காக....
நன்றி :...சுட்டு ஃபார்வரட் செய்தவருக்கு.... 🙏
சோழப் பேரரசு குறித்து, நான்கு ஆய்வுக் கட்டுரைகளை எழுதப் போவதாக, டைம்ஸ் ஏடு அறிவித்து, இன்று ஒரு பக்கம் எழுதி இருக்கின்றது. படித்தேன்.
சில குறிப்புகளைத் தருகின்றேன்.
ராஜராஜ சோழன், 985 முதல் 1014 வரை,
29 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். .
தன் ஆட்சிப் பரப்பின் எல்லைக்கு உட்பட்ட நிலங்களை அளந்தார்.
அவர் ஒரு சைவர் என்றாலும், வைணவர்கள், பௌத்தர்களுக்கும், நிலமும், பொருளும் கொடையாக அளித்தார்.
அவர் கட்டிய உய்யகொண்டான் கால்வாய், 1000 ஆண்டுகள் கடந்த நிலையில்,
இன்றைக்கும் 32000 ஏக்கர் நிலத்திற்குப் பாசன நீர் தருகின்றது.
அவர்,
தெற்கு சேரர்கள், மதுரைப் பாண்டியர்கள்,
ஆந்திராவின் கிழக்கு சளுக்கியர்கள்,
கர்நாடகத்தின் ராஷ்டிரகூடர்கள், ஒடிசாவின் கலிங்கர்கள், இலங்கை, இலக்கத்தீவு, மாலத்தீவு நாடுகளை வென்றார்.
கன்னடச் சளுக்கியர்களின் மன்யகேட்டா நகரை வெற்றி கொள்ள விழைந்தார்.
ஆனால், அது முடியவில்லை.
பின்னர், அவரது மகன் இராசேந்திர சோழன் அதை வென்றார்.
உடையாளூர் கைலாசநாதர் ஆலயத்தின் சிவன் காலடியில் உள்ள சிறிய சிலை, சிவபாத சேகரன் என அழைக்கப்படுகின்றது. அது ராஜராஜனின் திருமேனிதான் எனக் கருதப்படுகின்றது.
இன்று நமக்குக் கிடைத்து இருக்கின்ற நாணயங்களுள் 80 விழுக்காடு, ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவை.
தாமிரப் பட்டயங்களின் மெய்க்கீர்த்தி எழுதச் செய்தார்.
தஞ்சாவூர் கோவில் கட்டுமானம் குறித்து பல தரவுகள் உள்ளன. அதை நான் எழுதவில்லை.
ஆனால், அங்கே ஒரு ஐரோப்பியர் தலையில் தொப்பியுடன் உள்ள சிலை இருக்கின்றது.
அதை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.
அது ராஜராஜன் காலத்தைச் சேர்ந்தது அல்ல.
பின்னாளில், 1620 களில், நாயக்க மன்னர்கள்,
கோவிலுக்குத் திருப்பணி செய்தபோது,
தரங்கம்பாடிக்கு வந்த டச்சுக்காரர் ஒருவருடைய தோற்றதை அங்கே செதுக்கியதாகத் தெரிகின்றது.
இறுதி நாள்களில், ராஜராஜனும், அவரது மனைவி லோகமாதேவியும், ஹிரண்ய கர்ப்பம், துலாபாரம் ஆகிய சடங்குகளை, திருவிசைநல்லூர் கோவிலில் செய்தார்கள். அது 1013 ஆம் ஆண்டு.
அதன்பிறகு, அவர்கள் வானப்பிரஸ்தம் சென்றார்கள்.
பழையாறை அரண்மனைக்கு அருகில் ஒரு இடத்தைத் தெரிவு செய்து,
அங்கே வாழ்ந்து மறைந்தார்கள்.
அப்போது அவருக்கு 65 வயதுக்கு மேல் இருக்கலாம்.
அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை
என்கிறார்,
கல்வெட்டு அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம்.
மேலும் அறிய, முழு கட்டுரை படியுங்கள்.
அருணகிரி
06.09.2022
தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Madurai
4/1614 1st Floor, Kurinji Street, Annanagar
Madurai
we offer placement training course and offer placement in both banking and It sector with 100%inter
23, Viswanatha Nagar, K. Pudur
Madurai, 625007
Those who want tuitors for all the subjects,spoken English and grammar can contact as.
Madurai
Regarding the Rehabilitation Services for Special Children, Special Parents & Rehabilitation Professionals
Madurai, 625001
The bookworm is page where you can see post based on TNPSC group exams. And you can get link to download materials and You can also DM us to clarify Doubt on portion of TNPSC Group...
Therkutheru
Madurai
Vaigai College of Engineering (VCE) was established in the year 2012. VCE offers comprehensive Engin
Madurai, 625301
Latha Mathavan Group Of Institutions. Run by Karuppiah Pillai Theivanai Ammal Educational Trust. We
Madurai, 625014
அரசுப் பணிக்கான சிறந்த பயிற்சி மையம். உங்கள் அரசு வேலைக்கான கனவு நனவாக பயிற்சியில் இணைந்து பயன்பெறுவீர். சிவதன்யா ஐ.ஏ.எஸ் அகாடமி, யாதவர் மகளிர் கல்லூரி அருகில், திருப்பாலை - மதுர...
Madurai, 625107
Coconut Boxs is a Mathematics Kit designed for learning maths in a deeper, creative and fun way. You