Today News

Never Ever Give Up👍🏻
வாழு வாழ விடு 🤝🏼 Al Falah Dx CDC

22/04/2024

Today Fact 👍🏻👍🏻

22/04/2024

காசா மக்களின் மனதில் உள்ளதை கண்டுபிடித்த சியோனிச வெறியன்

"காசாவில் 2 மில்லியன் நாஜிக்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொரு யூதரையும் படுகொலை செய்யவும், கற்பழிக்கவும் மற்றும் கொலை செய்யவும் விரும்புகிறார்கள்" என்று இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் இஸ்ரேலில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமான வானொலி நிலையத்திற்கு தெரிவித்தார்.

மேற்குக் கரையில் திருடப்பட்ட பாலஸ்தீனிய நிலங்களில் கட்டப்பட்ட சட்டவிரோத குடியேற்றத்தில் வசிக்கும் தீவிர வலதுசாரி மந்திரி, பெரும்பாலான இஸ்ரேலிய அரசாங்க மந்திரிகளுடன் சேர்ந்து, பாலஸ்தீனியர்களை எல்லா இடங்களிலும், குறிப்பாக காசாவில், அவர்களின் அழிவை நியாயப்படுத்த தொடர்ந்து மனிதாபிமானமற்றவர்களாக ஆக்குகிறார்.

காசா பகுதியை ஆக்கிரமிப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் மேலும் வலியுறுத்தினார், இஸ்ரேலைத் தவிர்த்து அதை ஆளும் எவரும் "பயங்கரவாத அமைப்பாக இருப்பார்கள்" என்று வலியுறுத்தினார்.

22/04/2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இப்படியும் சம்பவங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வங்கி அமைந்துள்ள பகுதியில் பணப் பரிமாற்றம் செய்யும் போர்வையில் சுற்றித் திரிந்து பயணிகளின் பயணப்பொதிகளை திருடும் தம்பதியை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களனி, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண் மற்றும் 35 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

தனது மனைவியின் கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தம்பதி வருகை தருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிப் பகுதிக்கு வருகைத்தந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொருட்களை வைத்துவிட்டு, வெளிநாட்டு நாணயத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றும் போது, ​​அவர்களின் கவனம் பணப் பரிமாற்றத்தின் மீது திரும்பும் வரை காத்திருக்கின்றனர்.

22/04/2024

தியத்தலாவை விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள மேலதிகத் தகவல்கள்

தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 23 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2024 பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் இன்று காலை தியத்தலாவை நரியகந்த பந்தய திடலில் ஆரம்பமானது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்த பந்தயம் இறுதியாக கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட நிலையில் அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.



இதன்படி 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படவில்லை எனவும், இம்முறை போட்டிக்கு அதிகளவான பங்கேற்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று (21) காலை ஆரம்பமான இப்போட்டியில் கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பயணித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 8 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 4 பந்தய உதவியாளர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தின் பின்னர் பந்தயத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

22/04/2024

இஸ்ரேலுக்கு 26 பில்லியன் டொலர் பொதியை வழங்கும் அமெரிக்கா - உள்ளே என்ன இருக்கிறது..?

இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் முன்மொழியப்பட்ட உதவிப் பொதி.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட 95 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிப் பொதி இஸ்ரேலுக்கு $26.38bn ஒதுக்குகிறது.

தொகுப்பில் பின்வருவன அடங்கும்:

இஸ்ரேலின் ஏவுகணை மற்றும் ராக்கெட் பாதுகாப்பு அமைப்பை நிரப்பவும் விரிவாக்கவும் $5.2bn

மேம்பட்ட ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு $3.5bn

ஆயுத உற்பத்தியை அதிகரிக்க $1bn

இஸ்ரேலுக்கான பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு $4.4bn

$9.2 பில்லியன் மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவிக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சிக்கு (UNRWA) நிதி வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல்களில் ஏஜென்சியின் ஊழியர்கள் ஈடுபட்டதாக இஸ்ரேலிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இது பின்பற்றுகிறது.

Photos from Today News's post 21/04/2024

Green Home 🏘️👍🏻🏘️👍🏻🏘️👍🏻🏘️👍🏻🏘️👍🏻

21/04/2024

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு கோரி இன்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!

எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடுகின்ற போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சிறந்த தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அறவழி போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி பசறை, ஹாலிஎல, ஹப்புத்தளை, பள்ளகெட்டுவ மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு சகல தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் மருதபாண்டி ராமேஸ்வரன் கோரியுள்ளார்

21/04/2024

தமிழகத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது அழகிய குடும்பத்துடன்... 💯😍💞❣️❤️😻🥳💝

பிடிச்சிருந்தா ஒரு லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ❣️

21/04/2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 5 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று (20) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது.

அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கடுவாப்பிட்டி புனித செபஸ்தியன் தேவாலயத்தை மையப்படுத்தி தொடர் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஆராதனையில் பயங்கரவாத தாக்குதலில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தேவாலயங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

Photos from Today News's post 21/04/2024

🔴 உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை பெண் துஷாரி...! குவியும் பாராட்டு...!

தேடலின் வாழ்த்துக்கள் ❤️🥰👍

21/04/2024
Photos from Today News's post 21/04/2024

மிக முக்கியமான பதிவு அதிகம் பகிருங்கள் 👍🏻🤝🏼

21/04/2024

கினி நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது!

கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கி கடந்த முற்பட்ட கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி குறித்த பெண்கள் கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாய்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான பெண்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

21/04/2024

ஜனாதிபதி அம்பேவெல பால் பண்ணைக்கு கண்காணிப்பு விஜயம்

உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) முற்பகல் அங்கு விஜயம் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் மாதத்தில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது வழங்கப்பட்ட பணிப்புரைகளின்படி, கடந்த ஆண்டு பண்ணையில் விரிவான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று முற்பகல் அம்பேவெல பால் பண்ணைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பால் பண்ணை குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார மற்றும் அதன் பணியாளர்கள் வரவேற்றனர்.
பண்ணையின் புதிய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த ஜனாதிபதி, கறவை மாடுகள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர், ஊழியர்களுடன் சிறு உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பேவெல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள படிப்படியான வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பையும் பாராட்டினார்.
அதேபோன்று, பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அந்த அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட அதிதிகள் புத்தகத்தில் ஜனாதிபதி குறிப்பு ஒன்றையும் எழுதியதோடு, பண்ணை ஊழியர்களுடன் குழு புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டார். மேலும், வார இறுதி நாட்களில் பண்ணையை பார்வையிட வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்ததுடன், அவர்களின் விபரங்களை கேட்டறிந்து சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
1940 காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்பேவெல பண்ணை, 2001 ஆம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டதுடன், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான நவீனமயமாக்கல் காரணமாக, அது தற்போது இலங்கை மற்றும் தெற்காசியாவில் பால் உற்பத்தி மற்றும் பண்ணை தொழில்நுட்பத்தின் அதியுயர் தொழில்நுட்ப பாவனையுடன் கூடிய பிரதான மையமாக மாறியுள்ளதாக அம்பேவெல பண்ணை குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலிருந்து இந்தப் பண்ணையின் அபிவிருத்திக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய அவர், தொடர்ந்தும் பண்ணையின் செயற்பாடுகளைப் பார்வையிட வருகை தருவதையிட்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
2022 டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி பண்ணைக்குச் சென்றபோது, அதன் தினசரி பால் உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 40,000 லிட்டராக இருந்ததுடன், பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இவ்வருடம் நாளாந்தம் 52,000 லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இது 30% அதிகரிப்பாகும் எனவும் சரத் பண்டார மேலும் தெரிவித்தார்.
பால் உற்பத்தித் திறனை படிப்படியாக அதிகரித்து ஆண்டுக்கு 20 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்ய பண்ணை குழு செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கறவை மாடுகளில் உயர்தர வகைகளை இந் நாட்டிலேயே உருவாக்க அம்பேவெல குழுமம் தற்போது செயற்பட்டுள்ளதுடன், அந்த கறவை மாடுகளை பராமரித்தல், தேவையான உணவு நீராகாரம் வழங்குதல், எடையிடுதல், நோய் நிலைகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றை கண்டறியும்போதே மாடுகளை பிரித்துவிடுதல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் தானியங்கி முறையில் இயந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன.
கடந்த விஜயத்தின்போது ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுப் பணிகள் மற்றும் அனுபவத்திற்காக இந்தப் பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், மாதிரி பண்ணையாக மற்றுமொரு பண்ணை பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட எவரும் அங்கு வருகை தந்து மாதிரிப் பண்ணை அனுபவத்தைப் பெற முடியும் எனவும் சரத் பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுள்ளதாகவும், அம்பேவெல பால் பண்ணைக்கு நாளாந்தம் அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் சுட்டிக்காட்டிய சரத் பண்டார, பல வருடங்களின் பின்னர் ஒரே நாளில் அதிகளவான 9,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் ஒரே நாளில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண்ணைக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இவ்வருடம் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பண்டார மேலும் தெரிவித்தார்.

Photos from Today News's post 21/04/2024

காசாவில் தியாகிகள் 34,000 ஆக உயர்வு - 76,901 பேர் காயம்
அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 34,049 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

76,901 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.

5000 க்கும் அதிகமான கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

21/04/2024

நியூசிலாந்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்தின் படி, இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.
இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் தற்போது அங்கு தங்கியுள்ளதுடன், அவர்களுக்கு வசதிகளை வழங்குவதும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கங்களாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

21/04/2024

மகளை திருமணம் செய்து தரும் படி ஒரு தந்தையிடம் வாலிபர் வந்து கேட்டார்.

"ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல் என் மகள் உனக்கு சொந்தம்" என்றார் அந்த தந்தை.

எந்த நேரத்தில் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்படுகின்றது இதுவே அந்த கேள்வி.

பதில் தெரியாமல் இளைஞர் திருதிருவென முழித்த போது அந்த பொறுப்பான தந்தை சொன்னார்.

என் பொருள் விலை உயர்ந்தது அதற்கான மஹர் (விலை) உன்னிடம் இல்லை என்றார்.

21/04/2024

மக்களின் தோனியின் மீதான அன்புக்கு முதல் காரணம் அவருடைய தலைமைப் பண்புதான். தோனி விளையாடிய காலத்திலும் அதற்கு முன்பும் அவரை விடத் திறமையான எத்தனையோ வீரர்கள் வந்து போயிருக்கிறார்கள்.

ஆனால் அவரைப் போல ஒரு அணியை ஒருங்கிணைத்து வழிநடத்தி வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும் ஒரு லீடராக அவர்கள் இருந்ததில்லை. கபில் தேவை வேண்டுமானால் ஓரளவு ஈடாகச் சொல்ல முடியும். ஆனால் அவர் இயங்கிய காலமும் அப்போது இருந்த அழுத்தங்களும் வேறு. போகும் இடத்திலெல்லாம் கேமரா இல்லை. இந்தியா வெல்லாவிட்டால் வீடுகளில் கல்லெறிந்தவர்கள் இல்லை. தோனி தலைமை வகித்த காலம் மிகவும் சவாலான காலம்.

இது தவிர தோனியின் சாதாரணமான பின்னணி அவர் மீதான மக்கள் அபிமானத்துக்கு இன்னொரு காரணமாக இருந்திருக்கிறது.

21/04/2024

காலத்திற்கேற்ற பதிவு....

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!

1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.

2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.

3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.

5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.

6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.

7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.

8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.

உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை கொல்லும் போது (சில பாம்புகள் எளிதில் கொல்லப்படலாம்) சில பாம்புகளைக் கொல்ல முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.

நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.

21/04/2024

சாகசம் தொடர்ந்தால் பதில் அதிகபட்சமாக இருக்கும் - இஸ்ரேல் அனுப்பியது ட்ரோன்கள் அல்ல, பொம்மைகள்

'சாகசம்' தொடர்ந்தால் இஸ்ரேலுக்கு பதில் 'அதிகபட்சமாக' இருக்கும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சு கூறுகிறது

தனது நாட்டின் நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் செயல்பட்டால், ஈரான் "அதிகபட்ச" பதிலடி கொடுக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் கூறினார்.

"எங்கள் நலன்களுக்கு எதிராக இஸ்ரேலால் புதிய சாகசம் இல்லாத வரை, நாங்கள் எந்த புதிய எதிர்வினைகளையும் கொண்டிருக்கப் போவதில்லை," என்று அவர் கூறினார்.

"எனது நாட்டிற்கு எதிராக இஸ்ரேல் ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுத்தால், இது எங்களுக்கு நிரூபிக்கப்பட்டால், எங்கள் பதில் உடனடியாகவும் அதிகபட்சமாகவும் இருக்கும்" என்று அமிரப்துல்லாஹியன் அமெரிக்காவின் NBC செய்திக்கு அளித்த பேட்டியில் மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஈரான் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் பேசினார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் "தாக்குதல் அல்ல" என்று அமிரப்துல்லாஹியன் கூறினார்.

"அவை எங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளைப் போலவே இருந்தன - ட்ரோன்கள் அல்ல," என்று அவர் கூறினார்.

20/04/2024

Family Time ❤

Photos from Today News's post 20/04/2024

நியுஸிலாந்துக் கெதிரான இரண்டாவது T20 போட்டியில் பாக்கிஸ்த்தான் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி

5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என பாக்கிஸ்த்தான் அணி முன்னிலை

அதிக T20 போட்டிகளை வென்ற தலைவராக பாபர் அஷாம் சாதனை

New Zealand 🇳🇿 : 90 all out (18.1 overs )
🎾 Shaheen Shah Afridi : 3/13 (3.1)
🎾 Mohammad Amir : 2/13 (3)
🎾 Abrar Ahmed : 2/15 (4)

Pakistan 🇵🇰 : 92/3 (12.1 overs)
🏏 Mohammad Rizwan : 45 (34)*
🏏 Irfan Khan : 18 (18)*
🎾 Ben Lister : 1/10 (2)

Photos from Today News's post 20/04/2024

தனது விருதை காசாவுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய நடிகை அறிவிப்பு

சிறந்த நடிகைக்கான OTT விருதை வென்ற, நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தனது விருதை பலஸ்தீனத்திற்கு - காசாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விருதை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் ஆற்றிய சிறு குறிப்பொன்றை பகிர்ந்துள்ள பலஸ்தீன ஊடகங்கள் அவரது உரை உணர்வு மிக்கதாக இருந்ததாக வர்ணித்துள்ளன.

Photos from Today News's post 20/04/2024

இந்த என்ஜின் Japan Product மாதிரி எப்போ Start பண்ணாலும் ஓடும். 💥 | Mohammed Amir ❤️
3 Overs - 13 Runs - 2 Wickets

One of my Favourite Left Arm Pacer 💥

20/04/2024

இஸ்ரேலைப் பார்த்து ஈரான் அதிபர் சிரிக்கிறார்

தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலைப் பார்த்து ஈரான் அதிபர் சிரிக்கிறார் என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாங்கள் விருப்பத்துடன் போரிடுகிறோம், ஈரான் வெற்றி பெற்றுள்ளது, தொடர்ந்து வெற்றிகளை அடையும்.

இது நமது வலிமையையும், நமது மக்களின் இரும்பு விருப்பத்தையும், நமது ஒற்றுமையையும் பிரதிபலித்தது.

இஸ்ரேலிய தாக்குதல் இஸ்லாமிய குடியரசின் வலிமையையும் திறனையும் பலப்படுத்தியுள்ளது என்பதை அனைத்துப் பிரிவு மக்களும் அனைத்து அரசியல் பிரிவுகளும் ஒப்புக்கொள்கின்றன எனவும் ஈரான் அதிபர் குறிப்பிட்டுள்ளார்

20/04/2024

அவர் வட்டமும் தனது பெயரை மாற்றிக் கொள்ளும் தம்புல்லை அணி
: New Name for Dambulla: Dambulla Thunders

Dambulla Viiking ➡️ Dambulla Giants ➡️ Dambulla Aura➡️ Dambulla Thunders

20/04/2024

ஈஸ்டர் தாக்குதல் - புதிதாக எழுப்பப்பட்டுள்ள 5 கேள்விகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் யூடியூப் சேனலுக்கு வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை மேற்கோள்காட்டி அவர் இவற்றை கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களைப் பெற்றுக கொடுப்பதற்காக, கத்தோலிக்க பத்திரிகையான “ஞானார்த்த பிரதீபய”வின் தலைமை ஆசிரியர் சிறில் காமினி நேற்று (19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிறில் காமினி கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்து விட்டு சென்றார்.

அதன் படி, இது தொடர்பான 8 விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று ஊடகவியலாளர் சந்திப்பு அழைப்பு விடுத்திருந்தார்.

கொழும்பு உயர்மறைமாவட்ட ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி,

"முதலாவது... 2018 நவம்பர் 30 ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் அது தொடர்பான விடயங்கள்."

"இரண்டாவது... சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த IP முகவரியை யார் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி."

"மூன்றாவது... வவுணதீவு சம்பவத்தை தவறாக சித்தரித்த சம்பவம்."

"நான்காவதாக... தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் கைப்பேசிக்கு வந்த அழைப்பு."

"ஐந்தாவது... தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் யார்?"

20/04/2024

ஒரே நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

பாகிஸ்தான் - ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை 19-04-2024 அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் 6 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்று 24News TV சேனல் தெரிவித்துள்ளது.

ராவல்பிண்டியின் மாவட்ட தலைமையக மருத்துவமனையின் மருத்துவர்களின் கூற்றுப்படி, நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தாயும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராவல்பிண்டியின் ஹசாரா காலனியில் வசிக்கும் வஹீத்தின் மனைவியே இவ்வாறு ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்

20/04/2024

16 வயது மாணவனின் துணிச்சல் - பொலிஸார் பாராட்டு

ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.

திருடர்கள் மீது சைக்கிளை வீசிய 16 வயதுடைய பாடசாலை மாணவனின் துணிச்சலான செயற்பாட்டினால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்களிடம் இரண்டு தங்க சங்கிலிகள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி வரும் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலவந்தமாக பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

இதற்கிடையில், பாடசாலை மாணவரான அவரது 16 வயது மகன் சம்பவத்தை பார்த்துவிட்டு, தான் வந்த சைக்கிளை திருடர்களின் உடல் மீது வீசிவிட்டு, மோட்டார் சைக்கிளின் சாவியை கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஹொரண தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக குறித்த இடத்திற்கு வந்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் புலத்சிங்கள நரகல பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

இன்றைய முக்கிய செய்திகள்https://youtu.be/o9nQ-xS9TyM?si=_1tdSQq4ZldtqVpR
இன்றைய முக்கிய செய்திகள்https://youtu.be/h6yE87lZkzg?si=aJdlMEnF2eyYSnij
மாணவர்களின் பாட புத்தகங்களின் சுமையை குறைக்க தீர்மானம் https://youtu.be/EIjqeZgVPps?si=Dp-z-3v3IYEZiYYR
இன்றைய முக்கிய செய்திகள்https://youtu.be/EIjqeZgVPps?si=Dp-z-3v3IYEZiYYR
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் https://youtu.be/SRd5vg0hW7w?si=zsFS7cXDmq7AvvW0
முதலாவது Lanka T10 கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாக உள்ளதுhttps://youtu.be/UP8WvSv6_YM?si=GukPyZPzwhKDST36
புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது ICChttps://youtu.be/UP8WvSv6_YM?si=GukPyZPzwhKDST36
ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள்https://youtu.be/Nxgg_I9vsIE?si=Vr6fi87sdGMaqI6r
இன்றைய முக்கிய செய்திகள்https://youtu.be/Nxgg_I9vsIE?si=Vr6fi87sdGMaqI6r
இன்றைய முக்கிய செய்திகள்https://youtu.be/BIHVX0b5zII?si=T5iSY7bAZjCoq5XP
இன்றைய முக்கிய செய்திகள்

Category

Telephone

Address

Colombo

Other Journalists in Colombo (show all)
A R M JIFFRY A R M JIFFRY
Colombo

Official page of ARM JIFFRY SLBC & SLRC Tamil Sr.Announcer Sr.News Reader Sr.Cricket Commentator.

Meedum Ransara Meedum Ransara
Colombo

The conscience of a Journalist...

Ayesha gajanayaka Ayesha gajanayaka
Colombo

Journalist Presenter Siyatha Tv News i

Free moves link Free moves link
Colombo

New move link shear this page

VolleyWood-TV VolleyWood-TV
Colombo

Shafiya Nawzer Shafiya Nawzer
Colombo, 0700

Insight of Sri Lanka through my pictures 🏝 Editor 🖋 PR & Events 📰 Traveler 🏝 Lifestyle 👜

Political Ecology Sri Lanka Political Ecology Sri Lanka
Fort, Galle
Colombo

Traveler's Diary Traveler's Diary
Colombo
Colombo, 00130

Gagana Dilanka Perera Gagana Dilanka Perera
Colombo

Build up, be strong, dedicate yourself to the cause, success will keep you alive.

Balumgala Sniper Balumgala Sniper
Colombo

Here by included the exploration reveal of presidential awarded chamika of neth fm balumgala.

SL Reporter SL Reporter
Colombo

Welcome to SL Reporter on Facebook - a hub for latest news in Sinhala, Tamil & English. Like our pag