NegoMed Family Care

NegoMed Family Care

Rahumana Bath Family Clinic
රහුමාන නාන පවුල් සායනය
ரகுமானா பாத் மருத்துவ நிலையம்

22/03/2024

I noticed a lot of posts being circulated about the findings of a recent study. I thought it was best to share my perspective with my patients. So, does intermittent fasting have a connection to cardiovascular disease?

A recent study involving over 20,000 adults revealed that 8-hour time-restricted eating or intermittent fasting increases the risk of cardiovascular mortality by 91%.

The findings are still at the preliminary stage and are yet to be peer-reviewed & published to determine the validity of the study. This is only an abstract, and we do not know how reliable the study design was.

Also, 20,000 adults is a large sample size, and controlling the variables is as difficult as controlling the eating habits of 20,000 people. The report appears to be based on self-reported dietary information, which is not very reliable.

Even though the study found a link between an 8-hour eating window and cardiovascular mortality, it doesn't necessarily imply that time-restricted eating causes cardiovascular death. Smoking, alcohol use, intake of fatty & processed food, a sedentary lifestyle, and many other factors can also contribute to cardiovascular disease.

Stay calm; there's no need to worry.

Therefore, until the research is validated, I advise those who follow an intermittent fasting routine to stick to it. Be mindful of what you eat and have a balanced diet. Remember to stay away from unhealthy food choices even after fasting.

I advise those who smoke or have high blood pressure, diabetes, or cholesterol to undergo regular health screenings, as prevention is always better than cure.

21/03/2024

யாழ்ப்பாணத்தில் இலவச
தங்குமிட வசதி அதிகம் பகிருங்கள் தேவையுடையவர்கள் பயன் அடைய...

இலங்கையின் பல்வேறு பகுதிகளில்
இருந்தும் யாழ்ப்பாணம்
போதனா வைத்திய சாலைக்கு
சிகிச்சை பெறுவதற்காக வருகை
தருவோர் தங்குமிட வசதிக்காக
பல்வேறு அசௌகரியங்களை
எதிர்நோக்கி
வருவதை நாம் அறிகின்றோம்.

இவற்றைக் கருத்தில் கொண்டு
யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ
மஸ்ஜித் நிர்வாகத்தினராகிய நாம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த
நலன் விரும்பி ஒருவர் ஊடாக,
தங்கி நின்று
நோயாளியை பராமரிப்போருக்கான
இலவச தங்குமிட வசதி ஒன்றை
ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே சிரமங்களை தவிர்த்து,
நேர்த்தியான நிர்வாக
நடவடிக்கைகளை வழங்க
முன்கூட்டிய தொடர்பாடல்கள்
வழிவகுக்கும் என நம்புகிறோம்.

எமது நல்லறங்கள் அனைத்தையும்
வல்லவன் ரஹ்மான் ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக.

ஆமீன்.

தலைவர் மர்யம் ஜும்ஆ
மஸ்ஜித் யாழ்ப்பாணம்.

அஷ்ஷைஹ்க்
Faizer M Aliyar
(Casimi Madhani)

0777155119 / 0778831938

11/03/2024

நீரிழிவு நோயுள்ளவர்கள் ரமழான் மாதத்தில் நோன்பு பிடித்தல் - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

பொது விழிப்புணர்வு கலந்துரையாடலில் பங்கேற்க உங்களை அழைக்கின்றோம்.

திகதி: 17 மார்ச் 2024
நேரம்: மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை
தலைப்பு: " நீரிழிவு நோயுள்ளவர்கள் ரமழான் மாதத்தில் நோன்பு பிடித்தல் - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை"

நிகழ்ச்சியோடு இணைய கீழ்வரும் இணைப்பை தட்டவும்:
https://us02web.zoom.us/j/87458249751

11/03/2024

இறைவனால் எங்களுக்கு அருளாக வழங்கப்பட்ட புனித ரமலான் மாதத்தை அடைந்து கொள்ளப் போகிறோம்.
❤️ உடற்பருமனைக் குறைத்தல்,
❤️ சமிபாட்டுத் தொகுதியை சீராக்குதல்,
❤️ கொழுப்பு,உயர் குருதி அமுக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துதல்
என நோன்பின் மருத்துவப் பயன்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

ஆயினும் இந்த அழகிய 30 நாட்கள் பயிற்சி நெறியை எங்களுடைய
❌ பிழையான உணவு பழக்கவழக்கங்கள்,
❌ முறையற்ற தூக்கம்,
❌ சீரற்ற செயற்பாடுகள்
போன்றவற்றால் இழந்து கொண்டிருக்கிறோம்.

எனவே எங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக நோன்பின் உச்ச பயன்களை அடைந்து கொள்ளும் ஒரு முயற்சியாக எங்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் எவ்வாறு அமையவேண்டும் என நோக்குவோம்.

❤️ நாங்கள் காலையில் எழுந்தவுடன் ஸஹருடைய வேளையில் ஒரு கிளாஸ் நீரோடு எங்களுடைய நாளை ஆரம்பிப்பது சிறந்த முறையாகும்.

எங்களுடைய ஸஹர் உணவு எளிமையான பகல் உணவை அல்லது தரமான ஒரு காலை உணவை ஒத்திருத்தல் அவசியமாகும்.

❤️ இதற்காக முழுமையான தானிய வகைகள் (whole grains) அல்லது நார்ச்சத்து கூடிய உணவு வகைகளை ( high fiber diet) தேர்ந்தெடுக்கலாம்.

இத்தகைய உணவு வகைகள் உணவு இலகுவாக சமிபாடடைய உதவுவதோடு மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும். மேலும் நோன்பு நேரத்தில் நீண்ட நேரத்திற்கு சக்தியை வழங்கி எங்களுடைய வேலைகளில் உற்சாகமாக ஈடுபட உதவும். உதாரணமாக சோறு, ஓட்ஸ், கோதுமை உணவுகளை தெரிவு செய்யலாம்.

இவற்றோடு போதியளவு மரக்கறிகளையும், புரதம் நிறைந்த உணவு வகைகளையும்(பால் / முட்டை / இறைச்சி வகைகள்) சேர்த்துக் கொள்ளுதல் சிறந்ததாகும்.

❤️ தினமும் பலவகையான மரக்கறிகளையும், பழங்களையும் உண்பதன் மூலம் எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதோடு உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும்.

❌ அதிகளவு உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை இயலுமானவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகளவு உப்பு தாகத்தை அதிகப்படுத்தும்.

மேலதிக ஆகாரமாக யோகர்ட் / தயிர் / பழவகைகளை சேர்த்துக்கொள்ளலாம். சஹர் உணவை தவறவிடக்கூடாது. அவ்வாறு தவற விடுவதானது நோன்பு நேரம் நீடித்து இலகுவாக களைப்படைய இடமளிக்கும்.

#இப்தார் நேரத்தை இரண்டாக பிரித்துக் கொள்வது சிறந்ததாகும். ஏனெனில் நோன்பிலிருந்து உடலுக்கு சடுதியாக அதிக உணவுகளை திணிப்பது நல்லதல்ல.

✅ முதலில் வழக்கமான ஆரோக்கிய முறையில் நீர், ஈச்சம் பழங்களோடு நோன்பை திறந்து கொள்வோம். ஈச்சம் பழங்கள் உடலுக்குத் தேவையான மினரல்கள், நார்ச்சத்து மேலும் இயற்கை வெல்லம் என்பவற்றை கொண்டுள்ளது.

✅ போதியளவு நீர் அருந்துவது அவசியமாகும்.

✅ அத்தோடு அதிளவான பழங்களை ( வோட்டர்மெலோன், ஒரேஞ், அப்பிள்,கிரேப்ஸ் ) உட்கொள்வது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

சற்றுத் தாமதமாக அதாவது மஹ்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு பின் கஞ்சி அல்லது சூப் வகை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏனைய பானங்களான வீட்டில் தயாரிக்கப்பட்ட சீனி குறைந்த பழச்சாறு/ பால் / இஞ்சி கலந்த தேனீர் / கோப்பி இவற்றில் ஏதாவது ஒன்றையும் அருந்தி நம்மை உற்சாகப் படுத்திக் கொள்ளலாம்.

❌ இயன்றளவு எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளான சம்சா, ரோல்ஸ், கட்லட், பெற்றிஸ் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் எளிய வெல்ல( simple sugars) உணவு வகைகளான சோடா, ஐஸ்க்ரீம், பலூடா போன்றவற்றையும் தவிர்த்துக் கொள்ளுதல் சிறந்ததாகும். ஏனெனில் தொடர்ச்சியாக 30 நாட்களும் அளவுக்கதிகமான தீய கொழுப்பு, சீனி போன்றவை உடலில் சேருமாயின் உடற்பருமன் அதிகரித்து நாளடைவில் அது தொற்றா நோய்களுக்கு (Non communicable diseases) வழிவகுக்கும்.

எண்ணெயில் பொரிப்பதற்கு மாற்றீடாக ஏனைய ஆரோக்கிய சமையல் முறைகளான அவித்தல் (steaming), பேக்கிங், மிதமான எண்ணெயில் வறுத்தல் ( stir frying) போன்றவற்றை உபயோகிக்கலாம்.

#இப்தார்_முதல்_ஸஹர் வரையான நேரத்தில் அதிகளவு (குறைந்தது ஒரு லீட்டர்) நீர் அருந்துங்கள். நோன்பு காலத்தில் மிகச்சிறந்த பானம் நீர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

❤️ நிறைவான கஞ்சியை உட்கொண்டிருந்தால், இரவு உணவை மரக்கறி ஒம்லெட் அல்லது மரக்கறி சலாட் போன்ற எளிய உணவாக அமைத்துக்கொள்ளலாம்.

கஞ்சியில் போதியளவு அரிசி, மரக்கறி வகைகள், இறைச்சி, எண்ணெய் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தால் அந்த கஞ்சி ஒரு தரமான இரவு உணவிற்கு சமமாக அமையும்.

✅ தேவையான அளவு புரதங்களை (மீன் /முட்டை /இறைச்சி வகைகள்) நாளாந்தம் எடுத்துக்கொள்ளுங்கள்.

தராவீஹ் தொழுகையின் பின்னர் பழ வகைகள்/ யோகட் /தயிர் போன்றவற்றை மேலதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

உடலுக்கு உகந்த ஆரோக்கியமான கொழுப்பு வகைகளான அவகாடோ, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

✅ தினமும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிக ஆரோக்கியமானது.

நோன்பு நேரங்களில் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால் இஃப்தாரின் பின்னர் உடற்பயிற்சிகளை முறையாக அமைத்து கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையும் சிறந்த உடற்பயிற்சியாகும். அத்தோடு தொழுகைகளுக்கு மஸ்ஜிதுகளுக்கு செல்லும் போதும் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து நடந்து செல்லுதல் சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.

❤️ எனவே ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான உறக்கம் ,அழகிய அமல்கள் போன்றவை மூலமாக ரமழானின் உடல்,உள, ஆன்மீக ரீதியான முழுப் பயன்களையும் அடைந்து கொள்வோம்.

ஆரோக்கிய ரமழான் – ஒரு நினைவூட்டல்

Dr. Sajeetha Musathique (MBBS, MSc-Nutrition)

Courtesy: Dr Ziyad Aia

30/12/2023

🚨 இந்த சிறப்பு அறிவிப்பு ஏப்ரல் 7, 2023 க்கும் ஜூலை 5, 2023 க்கும் (இரண்டு நாட்களும் உட்பட) இடையே பிறந்த குழந்தைகளின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கானது.

🦠 மூளை பாதிப்பு, நுரையீரல் அழற்சி (நிமோனியா), பார்வை குறைப்பாடு, காது கேளாமை, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சின்னமுத்து, தற்போது உலகின் பல நாடுகளிலும், இலங்கையிலும் இளம் குழந்தைகளிடையே பரவி வருகிறது.

🚩 கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள சுகாதார மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

💉இச்சூழலைக் கருத்தில் கொண்டு, அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி, அதாவது 6 - 9 மாத வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் சின்னமுத்து தடுப்பூசி மேலதிக டோஸ் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

🏥 சின்னமுத்து தடுப்பூசியின் மேலதிக டோஸ் உங்கள் அருகிலுள்ள தடுப்பூசி கிளினிக்கில் 6 ஜனவரி 2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

✅ இது 9 மாதங்கள் மற்றும் 3 வயதில் தற்போது கொடுக்கப்படும் இரண்டு சின்னமுத்து தடுப்பூசிகளுடன் மேலதிகமாக கொடுக்கப்பட உள்ளது. இது தற்போது கொடுக்கப்படும் (MMR) தடுப்பூசியே.

🟢 முன்னர் சின்னமுத்து நோயால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கண்ட வயதினரின் ஆபத்து மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசியின் மேலதிக டோஸ் வழங்கப்படும்.

👶🏻 உங்கள் குழந்தை பரவும் சின்னமுத்து நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, தகவலறிந்த மற்றும் பொறுப்பான பெற்றோராக உங்கள் கடமையை தவறாமல் செய்யுங்கள்.

29/12/2023

Secretary MoH announces Supplementary Immunization Activity for measles on Jan 6 for 6-9 month olds at immunization centres in 9 high-risk districts. WHO &
UNICEF Sri Lanka urge parents to protect children with the highly effective MMR vaccine against a potentially serious illness.

Ministry of Health - Sri Lanka World Health Organization South-East Asia Region - WHO SEARO

12/12/2023
15/10/2023

இலங்கையில் குறிப்பாக கொழும்பில் பரவி வரும் "கண் நோய்" Conjunctivitis / Pink Eye / Madras Eye இனால் அச்சம் தேவையா?⁉️ இதற்கான காரணங்கள்? மருத்துவம்? தவிர்க்கும் வழிகள்?

பரவி வரும் இந்த கண் தொற்று காரணமாக கொழும்பு மாநகர சபைக்கு உரித்தான பாடசாலை சிலவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக செய்திகள் கிடைக்கின்றன.

குறிப்பாக Kotahena Madhya Maha Vidhyalayaக்தில் 100 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதால் திங்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பாடசாலைகளும் அச்சத்தில் உள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

முதலில் இந்த "கண் வருத்தம்" எனும் Conjunctivitis/ Pink Eye / Madras Eye எனப்படுவது ஆபத்தான நோய் நிலைமை அல்ல.

இது பொதுவாக வைரஸ் தொற்றினால் (Adeno Virus) ஏற்பட்டு பெரும்பாலும் 3/4 தினங்களில் தானாக குணமாகக் கூடியது.

சில நேரங்களில் பக்றீரியா தொற்று (Secondary Bacterial infection) ஏற்படும்போது Anti Bacterial eye drops / Ointment அவசியப்படலாம்.

⁉️ நோய் #அறிகுறிகள்:

✅ இதன் பிரதான அறிகுறியாக கண்ணின் Conjunctiva எனும் வெண்ணிறப்பகுதி சிவப்பு நிறமடையும். (இது ஒரு கண் / இரு கண்களிலும் ஏற்படலாம்)

✅ கண்ணிலிருந்து நீர் வடிதல்

✅ கண் அரிப்பு / எரிவு

✅ வெளிச்சத்தை பார்க்க முடியாமை

✅ தலைவலி

போன்றவை ஏற்படும்.

மேலதிக பக்றீரியா தொற்று ஏற்படும் போது

❌கண்ணிலிருந்து மஞ்சள்/பச்சை நிற பூளை வெளியாதல்

❌ கண் மடல்கள் வீங்கி தூங்கி எழும்போது கண்களை திறக்க முடியாமல் ஒட்டியிருத்தல்

போன்ற அறிகுறிகள் தென்படும்.

⁉️ #சிகிச்சை:
ஏற்கனவே சொன்னது போல் இது Virus தொற்றினால் உண்டாவதால் 3/4 நாட்களில் தானாக குணமாகக் கூடியது.

மஞ்சள்/பச்சை நிற Discharge, கண்மடல்கள் வீக்கம், தூங்கி எழுந்து கண்களை திறக்க கடினமாதல் போன்றவை பக்றீரியா தொற்றின் அறிகுறிகளாதலால் வைத்திய ஆலோசனைப்படி Antibacterial Eye Drops பாவிக்க வேண்டி ஏற்படலாம்.

🛑 5 நாட்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் வைத்திய ஆலோசனையை பெற வேண்டும்.
(அரிதாக 5 நாட்களுக்கு மேற்பட்ட தொற்று கண்மணியை (pupils) பாதித்து சிறுவர்களின் பார்வையை பாதிக்கலாம். அவ்வாறான அறிகுறிகள் தோன்றும்போது உடனடியாக கண் வைத்திய நிபுணரை நாட வேண்டும்.)

⁉️ பரவலை #தடுத்தல்:

பொதுவாக இந்நோய் தொடுகை மூலமே பரவுகிறது.

Conjunctivitis/ pink eye கண் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அரிப்பு காரணமாக கண்களை சொறிந்து அதே கையை பாடசாலை மேசை,கதிரை, பொதுப் போக்குவரத்து Bus போன்றவற்றில் பிடிக்கும்போது
அதனை இன்னொருவர் தொடுவதன் மூலம் பரவுகிறது.

(அல்லது உடல்கள் நெருக்கமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பரவலாம்.)

எனவே:
✅ கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல்

✅Hand Sanitizer பாவித்தல்

✅ கண்களை கைகளால் தொடுவதை தவிர்த்தல்
போன்றவற்றை கையாளலாம்.

✅ அதேபோல் கண் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அத்தகையவர்கள் பாடசாலை/ வேலைத்தளங்களுக்கு விடுமுறை பெறுவதன் மூலம் ஏனையவர்களுக்கு இத்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.

சுகாதார அமைச்சும் நோய் அறிகுறிகளை காண்பிக்கும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என்று அறிவுறுத்துகிறது.

✅ வீடுகளில் நோய் அறிகுறிகள் காண்பிப்பவர்களின் தலையணை , Bedsheets என்பவற்றை பகிராதிருப்பதோடு சுடுநீரில் கழுவுவதன் மூலம் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் பரவுவதை தவிர்க்கலாம்.

🛑⁉️ பி.கு:
இந்த Conjunctivitis/ Pink eye எனும் தொற்றுக்கு ஏன் Madras eye என பெயர் வந்தது?

1918ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவின் Madras (இன்றைய சென்னை)யில் இந்த நோய் பரவல் முதன்முதலாக அவதானிக்கப்பட்டது.

கோடைக்கால விடுமுறையில் Madras சென்ற பலருக்கு இத்தொற்று ஏற்பட்டதால் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் Madras Eye என்பது ஒரு பிராந்திய சொல் வழக்கே. மருத்துவ பெயர் Conjunctivitis. இருப்பினும் இந்திய Mediaக்களில் Madras Eye ( மெட்ராஸ் ஐ ) என்பது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

By: Dr. A I A Ziyad
Clinical Informatics & Research Fellow,
University of Southampton




#மெட்ராஸ்_ஐ

17/08/2023

Join us in making a meaningful impact on the lives of underprivileged school children through our School Midday Meal Program. Your generous contribution can ensure that these young minds receive nourishing meals during their school day, empowering them to excel academically and build a brighter future. Together, let's extend a helping hand and invest in the education of these deserving children. Donate now and be a part of their journey to success.

https://gphelpinghands.org/index.php/donations/brilliant-after-all-a-new-album-by-rebecca-help-poor-people-2-2-3/

Save the National Immunisation Programme – DailyNews 24/07/2023

Save the National Immunisation Programme

Save the National Immunisation Programme – DailyNews Editorial Save the National Immunisation Programme by Gayan Abeykoon July 24, 2023 July 24, 2023 1:00 am 0 comment 424 This week we talk about one of the crucial topics and it is all about children, and the lives of our future generation. We talk about this topic today due to well-arranged misleadin...

14/07/2023

𝗜𝗳 𝗻𝗼𝘁 𝘁𝗿𝗲𝗮𝘁𝗲𝗱, diabetes can cause:
👁️ blindness
❗️kidney failure
🫀 heart attack
🧠 stroke
🦵 lower limb amputation
Access to early diagnosis and treatment is key to prevent such complications.

08/06/2023

Body/ Facial lotions & Cream
‼️இலங்கையில் கிரீம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை‼️

பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் #கிரீம்கள் மற்றும் #லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவன அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு. ரஞ்சனா தெரிவிக்கையில்,

கடந்த வாரம் நுகர்வோர் அதிகாரசபையின் விசேட அதிரடி சோதனைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் விபரங்கள் இன்றி சட்டவிரோத லோஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் 7 வகையான உடல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் 6 வகையான பாதரசத்தின் அளவு ஒரு கிலோவிற்கு 8.1 மில்லிகிராமிலிருந்து 31.540 மில்லிகிராம் வரை மிக அதிகமாக இருந்ததாக இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வுக்கூடம் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் உடலை வெண்மையாக்கும் கிரீம்களில் பாதரசம் அதிகம் உள்ளதாகவும், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஒவ்வொரு உறுப்புக்கும் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான கிரீம்கள் மற்றும் திரவங்களை கொள்வனவு செய்யும் போது, ​​குறிப்பாக இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுமாயின் அங்கு பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழில் நீர்கொழும்பு முகநூல்

08/06/2023

ஒரு வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் பதிவு !‼️

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் #கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41883 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

வருடத்தின் இதுவரையான காலப்பதிக்குள் 25 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

03/04/2023

இலங்கை மக்களிடையே இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்களும் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவிப்பு!
இருமல்,காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

23/03/2023

🛑 நோன்பு திறந்தவுடன் (இப்த்தார் நேர) தலைவலிக்கான (Headache) காரணங்களும் தவிர்க்கும் வழிகளும்!

ரமலான் நோன்பு ஆரம்பித்தவுடன் நோன்பு நோக்கும் பலர் எதிர்நோக்கும் பிரச்சினை நோன்பு திறந்தவுடன் உண்டாகும் தலைவலி. இது பொதுவாக நோன்பு பிடிக்கும் ஆரம்ப நாட்களில் அதிகமாக காணப்படும்.

பொதுவாக ரமலான் நோன்பு என்பது அதிகாலை 4.30 இல் இருந்து மாலை 6.30 வரை கிட்டத்தட்ட 14 மணிநேரம் எதுவும் உண்ணாமல் பருகாமல் இருப்பதாகும். (இந்த நேரம் சூரியன் உதிப்பு மறைவு நேரத்தை பொறுத்து நாட்டுக்கு நாடு வேறுபாடும். Eg: Norway போன்ற நாடுகளில் 20 மணித்தியாலம்.)

பொதுவாக நோன்பு திறக்கும் நேரம் உண்டாகும் தலைவலி மன அழுத்தத்தின்போது உண்டாகும் தலைவலியை ஒத்தததாக இருக்கும். (tension Headache. non-pulsating pain of mild or moderate intensity). ரமழானுக்கு முந்திய காலங்களில் அடிக்கடி தலைவலி, Migraine போன்றவற்றால் அவதியுறுவோருக்கு நோன்பு திறந்தவுடன் தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

❓ நோன்பு திறந்தவுடன் சடுதியான தலைவலிக்கான காரணங்கள் என்ன?

❌ 01. நோன்பு திறக்கும்போது ஒரேயடியாக அதிக உணவினை உண்ணல்:
நோன்பு நேரம் இரத்தத்தில் குறைந்த நிலையில் பேணப்பட்ட Glucose அளவு சடுதியாக அதிகரிக்கும்போது சிலருக்கு தலைவலி உண்டாகிறது. அதிலும் குறிப்பாக சீனி சேர்க்கப்பட்ட பானங்கள் (Sugary Drinks, Faluda etc) மிக விரைவில் அகத்துறிஞ்சப்பட்டு Glucose அளவை சடுதியாக அதிகரிக்கிறது.

❌ 02. மூளைக்கான இரத்த ஓட்டம் குறைவடைதல்:
பட்டணியாக கிடந்த சமிபாட்டு தொகுதிக்கு நோன்பு திறக்கும்போது ஒரேயடியாக அதிக உணவு செல்லும்போது சமிபாட்டு தொகுதியை நோக்கி சடுதியாக கூடுதலான இரத்த ஓட்டம் செல்வதால் மூளைக்கான ஓட்ஸிசன் குறைவடைந்து தலைவலி, சோர்வு ஏற்படுகிறது. எமது biological Clock இல் ஏற்படும் மாற்றம் காரணமாக இது நோன்பின் ஆரம்ப நாட்களில் காணப்படும். பின்னர் உடல் இந்த நேர மாற்றத்துக்கு இயைபாக்கம் அடைவதால் பிந்திய நாட்களில் தலைவலி வருவது குறைந்துவிடும்.

❌ 03. நித்திரை கொள்ளும் விதத்தில் (Sleeping Pattern) நிகழும் மாற்றம்;
Biological Clock இல் நிகழும் மாற்றத்தோடு இரவு முழுக்க விழித்திருந்தல், அதிக நேரம் blue light எனும் Phone, PC வெளிச்சம் மற்றும் தொலைகாட்சி பார்த்தல் என்பவற்றால் கண்கள், உடல் சோர்வடைந்து நோன்பு நேரத்திலும் அடிக்கடி தலைவலி உண்டாகலாம்.

❌ 04. Plain tea, coffee, or Nescafe அடிக்கடி குடிப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டி ஏற்படல்:
மேற்படி பானங்கள் அடிக்கடி அருந்தவோர் நோன்பு நேரங்களின் அருந்த முடியாமல் போவதால் இரத்தத்தில் caffeine அளவு குறைந்து தலைவலி (Withdrawal Headache) உண்டாகலாம். (மத்திய கிழக்கு நாடுகளில் பொதுவாக உணரப்படும் ஒரு விடயம்.)

❌ 05. ஸஹர் நேரம் சரியான உணவுகள் உட்கொள்ளாமை:
நோன்பு நோற்கும்போது உணவு உட்கொள்ளாத காலப்பகுதிக்கு தேவையான சரியான உணவுகள் உட்கொள்ளப்பட வேண்டும். பசித்திருப்பதால் தலைவலி (Fasting Headache) உண்டாகலாம். பலர் தூக்க மயக்கம், இரவு நேரம் வயிறை நிரப்பிவிட்டதால் பசியினமை போன்றவற்றால் சரியான ஸஹர் உணவை தவற விடுகின்றனர்.

❌ 06. தாகம்:
உஷ்ணமான காலநிலை, வெயிலில் வேலை செய்தல், நோன்பு திறந்த நேரங்களில் சரியான அளவு நீர் அருந்தாமை போன்ற காரணங்களால் உடலில் நீர்ப்பற்றாக்குறை எற்பட்டு தலைவலி உண்டாகிறது.

❌ 07. இரத்த அழுத்தம் எனும்Hypertension (பிரஷர்) போன்ற நோய் நிலைமை உள்ளவர்கள்:
நோன்புகாலம் சரியான மாத்திரைகளை அருந்துவதை தவறவிடுவதாலும் BP கட்டுப்படாமல் விடுவதால் தலைவலி உண்டாகலாம்.

❌ 08. Anemia போன்ற நோய் நிலைமைகள்:
இரத்தத்தில் Haemoglobin அளவு குறைவாக உள்ளவர்களில் மூளைக்கு சரியான அளவு ஓட்ஸிசன் கிடைக்காமல் விடுவதால் தலைவலி உண்டாகலாம். இவ்வாறானவர்களுக்கு நோன்பு அல்லாத காலங்களிலும் அடிக்கடி தலைவலி காணப்படும்.

❌ 09. Migraine போன்ற தலைவலியினால் ஏற்கனவே அவதியுருவோர் நோன்புகாலங்களிலும் குறிப்பாக நோன்பு திறந்தவுடன் தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகளை காண்பிக்கலாம்.

❓ நோன்பு திறந்தவுடன் சடுதியான தலைவலி ஏற்படுவதை தவிர்க்கும் வழிகள்:

✅ 01. நோன்பு திறத்தலை அளவான உணவுகளுடன் ஏற்பாடு செய்தல்:
3 பேரீத்தம்பழம், அதிகளவு நீர், கொஞ்சம் இடைவேளை விட்டு கஞ்சி. Short eats எனப்படும் எண்ணெய் தோய்ந்த உணவுகளை குறைத்தல் / இடைவேளை விட்டு உண்ணல்.
Sugary Drinks ஐ முடிந்த அளவு தவிர்த்தல். இவை உடலில் glucose அளவை சடுதியாக அதிகரிக்கும். Sugary Drinks தாகத்தை தீர்க்காது அது மேலும் அதிகரிக்க செய்யும்.

✅ 02. நோன்பு திறக்கும்போது உண்ணும் உணவுகளை இடைவேளை விட்டு உண்ணல்:
ஒரேயடியாக உண்ணாமல் இப்த்தாரின் போது கொஞ்சம், மஹ்ரிப் தொழுதபின் கொஞ்சம், சிறிதளவு நடை பயிற்சி செய்தபின் என பிரித்து உண்ணல். (Mind Voice: நாம பிரித்து உண்ண முன்னாடி அடுத்தவர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்களே.) பிரித்து உண்ணும் பழக்கத்தை ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் பழக்கப்படுத்தல். இதனால் சடுதியான சோர்வு , தலைவலி என்பவற்றை தவிர்க்கலாம்.

✅ 03. சஹர் உணவை தாமதப்படுத்துங்கள். நோன்பு காலத்தில் உடலுக்கு நீண்ட நேரம் சக்தியை வழங்கும் ஆரோக்கியமான முழுமையான உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெதுவாக ஜீரணமாகக்கூடிய முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது.

✅ 04. இப்தார் மற்றும் சஹர் உணவில் மிதமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் சாதாரண அளவு குளுக்கோஸைப் பராமரிக்கலாம்.

✅ 05. ரமழானில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். தாமதமாக எழுந்திருப்பதைத் தவிர்க்கவும், பகலில் ஒரு சிறு தூக்கத்தை எடுத்துக் கொள்ளவும்.

✅ 06. கடின உழைப்பைத் தவிர்ப்பதுடன், வியர்வை மற்றும் நீரிழப்பை தவிர்ப்பதன் மூலம் பகலில் தலைவலி மற்றும் தாகத்தை தவிர்க்கலாம்.

✅ 07. அதிக Coffee அருந்த பழக்கப்பட்டவர்கள் நோன்பு பிடிக்க ஒரு வாரம் முன்பிருந்தே படிப்படியாக குறைப்பதன் மூலமும் நோன்பு திறந்தபின் அருந்துவதன் மூலமும் தலைவலியை குறைப்பிக்கலாம்.

✅ 08. ஏற்கனவே இரத்த அழுத்தம், anemina, Migraine போன்ற நோய் நிலைமைகளில் அவதியுரருவோர் வைத்திய ஆலோசனைப்படி மருந்துகளை தொடர்ந்து அருந்த வேண்டும்.

✅ 09. மேலே குறிப்பிட்ட முறைகளை கையாண்டும் தொடர்ந்து தலைவலியை உணர்வோர் வைத்திய ஆலோசனையுடன் NSAIDS மாத்திரைகளை பாவிக்கலாம். NSAIDS மாத்திரைகள் பொதுவாக Gastritis ஐ உருவாக்கவல்லவை என்பதால் நோன்புகாலங்களில் மிக அவதானமாக பாவிக்க வேண்டும்.

Courtesy Dr Ziyad Aia (MBBS, MD-Health Informatics)

19/03/2023
17/09/2022

இன்று உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்.
மருந்து பாதுகாப்புக்கான உங்கள் 5 தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

WHO Sri Lanka

17/09/2022

இன்று உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்.
மருந்து பாதுகாப்புக்கான உங்கள் 5 தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Want your practice to be the top-listed Clinic in Negombo?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

இன்று உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்.மருந்து பாதுகாப்புக்கான உங்கள் 5 தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.WHO Sri Lanka #World...
We are specialist in your life.
#SriLanka is ready to obtain @WHO validation as a country which has eliminated mother to child transmisssion of #HIV and...

Telephone

Website

Address


Rahumana Bath Road
Negombo
11500

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Friday 19:30 - 21:00
Saturday 19:30 - 20:00
Sunday 18:00 - 20:00

Other Negombo clinics (show all)
Kudirippuwe kadum bidun wedagedara Kudirippuwe kadum bidun wedagedara
No. 231/6A, St. Joseph Street
Negombo

konde amaruwa, kadum bidum, belle amaru, thelim

Gampaha Ayurveda Medical Center - Kochchikade Gampaha Ayurveda Medical Center - Kochchikade
28 , Church Road
Negombo, 11540

Ayurveda & wellness | Professional care

Siddhayurveda medical centre Siddhayurveda medical centre
No. 21, Porutota Road, Eththukala
Negombo, 11500

Siddhyurveda medical centre is a Ayurveda medical centre which provide all ayurveda treatment.

Ayu Care Center Ayu Care Center
De Silva Mawatha
Negombo, 25000

We are a dedicated team, passionate about making you feel relaxed.