Inner Temple Dr Shalini
Nearby clinics
600003
600003
WWWddddd. com
600003
600003
600003
600003
600003
Guduvancheri 603202
600095
600003
600003
600003
600003
மனமது செம்மையானால் மந்திரம் வேண்டா....
From book "Reasons to stay alive" by Matt Haig
மனிதர் என்கிற பிரக்ஞையே பிறரை பார்த்து கற்றுக்கொள்வது தான் என்பதற்கு ஓர் உதாரணமாய் டாக்டர் மோரிஸ் வளர்த்த காங்கோ சிம்பான்ஸியை பார்த்தோம்.
இது போல பல உதாரணங்கள் உண்டு. But since you already got the drift, இதற்கு நேர் எதிரான spectral endடை பற்றி இப்போது பேசுவோம்...
மனிதர்களால் வளர்க்கப்படும் பிற non-human animalsசுக்கு species confusion வருகிறது என்றால்,
பிற விலங்குகளால் வளர்க்கப்படும் மனிதர்களுக்கு அப்படி ஒரு குழப்பம் வருமா??
இந்த கேள்விகளை சுற்றி பின்னப்பட்ட பிரபல கதைகள்
1) ஜங்கிள் புக், கதாப்பாத்திரம் மோக்லி
2) டார்ஸன்
3) தங்கமலை ரகசியம் எனும் தமிழ் திரைப்படம்
இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக ரோமாபுரியை உருவாக்கியதாய் சொல்லப்படும்
4) ரீமஸ் ஆண்ட் ரோமுலஸ் ஆகிய மன்னர்களின் கதை
இந்த கதைகளில் எல்லாம் மனித குழந்தை ஏதோ காரணத்தால் காட்டில் போய் வாழும். அவற்றை ஓணாய், கரடி, குரங்கு மாதிரி வேற்றின தாய் வளர்க்கும்.
பிரபல கதைகளில் இக்குழந்தைகள் பின்னர் மனிதர்களால் கண்டுப்பிடிக்கப் படுவார்கள். மனித மொழியை கற்றுக்கொண்டு இரண்டு உலகுகளையும் equal easeசோடு ஆளுவார்கள்.
ஆனால் நிஜத்தில் நிலைமையே வேறு!
நிஜத்திலும் இப்படி சில feral children மனித வரலாறு நெடுக உண்டு. இந்த குழந்தைகளை பின்னர் கண்டுபிடித்தப்போது இக்குழந்தைகள் எந்த விதமான மனித தன்மையுமே இல்லாமல் தான் இருந்தார்கள்.
அவர்கள் நான்கு காலில் நடந்து, இருட்டில் வேட்டையாட போய், பச்சைக்கறி உண்டு.....இந்த போக்கைக் தான் தொடர்ந்தார்கள்
இரண்டு காலில் நடப்பது,
பேசுவது,
சிரிப்பது,
மனிதர்கள் மாதிரி ஒண்ணுக்கு அடிச்சு
மனிதர் மாதிரி ஆய் கழுவுவது
பிற மனிதர்களை புரிந்துக்கொள்வது ..... மாதிரியான எந்த அம்சங்களையும் அவர்களால் கற்றுக்கொள்ளவே முடியவில்லை.
உடலில் அவர் மனிதர் தான்.
பிறக்கும் போது மனித மூளையோடு தான் பிறந்தார்கள்.
மரபணுவிலும் முழுக்க முழுக்க மனிதர்களை போலே அதே 46 குரோமோசோம் தான்.
Then what went wrong??
உலக_மனநலவாரம்_முன்னிட்டு
நான் சொன்னால் நீங்கள் ஆட்சரியப்படுவீர்கள்... ஆனால் நாம் மிக இயல்பானது, தானாகவே தோன்றியது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல நம்பிக்கைகள் உண்மையிலேயே வெறும் கற்பிதங்கள் தான்.
எந்த அளவிற்கு. எந்த ஆழத்திற்கு என்றால்... நாம் நம்மை “மனித இனம்” என்று அடையாளப்படுத்துவதே கூட ஒரு கற்பிதம் தான்.
இதை பற்றி எல்லாம் ஏற்கனவே “அர்த்தமுள்ள அந்தரங்கம்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால் அதை படிக்காதவர்களுக்கு ஒரு குட்டி அறிமுகம்....
லண்டன் ஸுவில் டெஸ்மண்ட் மோரிஸ் எனும் நிர்வாகி இருந்தார். அவருக்கு குழந்தைகள் அப்போது இல்லை. அவர் மனைவி, அந்த ஸுவில் வசித்த காங்கோ என்கிற புத்திசாலி சிம்பான்சி குட்டியை தன்னோடு வைத்து வளர்த்தார். காங்கோவுக்கு டையப்பர் போட்டு விட்டு, ஸ்பூனில் உணவு தீட்டிக்கொடுத்து, வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒண்ணுக்கு அடிக்க பழக்கி.... மிஸ்ஸ் மோரிஸின் தத்துப்பிள்ளையை போல வளர்ந்தது காங்கோ. மிஸஸ் மோரிஸ் டைப் அடித்தால், காங்கோவும் டைப் அடிக்கும். அவர் பெயிண்ட் பிரஷ் வைத்து ஓவியம் வரைந்தால், காங்கோவும் சித்திரம் தீட்டும்.
ஒரு கட்டத்தில் காங்கோ தன் கற்பனைக்கு ஏற்ற மாதிரியெல்லாம் தானாகவே நிறைய ஓவியங்களை வரைந்து தள்ள, அதை ஒரு கண்காட்சியாகவே வைத்தார் டாக்டர் மோரிஸ். அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் “சிம்பான்சி இவ்வளவு அழகாக வரைகிறதே” என்று பிகாஸோ ஓவியங்களை விட அதிக விலைக்கொடுத்து காங்கோவின் ஓவியங்களை வாங்கினார்கள்.
அந்த அளவிற்கு ஜித்தனாய் இருந்த காங்கோ, வயசுக்கு வந்து வாலிப சிம்பான்ஸி ஆனான். அவனுக்கு ஏற்ற பெண் சிம்பேன்ஸியை தேடி, எல்லா நாட்டு ஸு அதிகாரிகளும் முயற்சித்தார்கள். அவர்கள் ஸுவில் இருக்கும் பெண் சிம்பான்ஸிகளை வீடியோ எடுத்து காங்கோவின் கடைக்கண் பார்வைக்காக அனுப்பினார்கள்.
ஆனால் காங்கோவிற்கு யாரையுமே பிடிக்கவில்லை. அவனுக்கு மிஸஸ் மோரிஸ் மாதிரி மனிஷ பெண்களை கண்டால் தான் கவர்ச்சியே உருவாயிற்றாம்.
பிகாஸ் காங்கோ தன்னை ஒரு சிம்பான்ஸி என்றே நினைத்திருக்கவில்லையாம். அது பிறந்தது முதல் தன்னை வளர்த்து ஆளாக்கிய மிஸஸ் மோரிஸ் எந்த இனமோ, அதே இனம் தான் தானும் என்று நம்பியதாம்.
இதை தான் கான்ராட் லாரென்ஸ் எனும் விஞ்ஞானி IMPRINTING என்றார். கான்ராடின் கதை இதை விட வியப்பானது. அவர் சிறுவனாக இருந்த போது கூஸ் முட்டைகளை அடைகாத்து வளர்த்தார். அந்த கூசெல்லாம் குஞ்சி பொறித்த போது, அவர் தான் அவற்றுக்கு உணவு புகட்டினார். அவற்றை குளத்திற்கு அழைத்து போய் நீந்த கற்றுக்கொடுத்தார். வயலுக்கு அழைத்து போய் பறக்க பயிற்றுவித்தார். கடைசியில் அந்த கூஸ் எல்லாம் வயசுக்கு வந்த பிறகு கான்ராட் லாரென்ஸை பிடித்து mount பண்ண பார்த்த போது தான் அவருக்கு சிக்கலே புரிந்தது!!
அதை எல்லாம் வைத்து கான்ராட் செய்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது....
ஆனால் மிஸஸ் மோரிஸ் வளர்த்த காங்கோ ஆகட்டும்
கான்ராட் வளர்த்த கூஸுகள் ஆகட்டும்
கடைசி வரை அவற்றுக்கு species confusion இருந்துகொண்டே இருந்தது.
அதெப்படி! தான் என்ன ஜீவராசி என்பதுக்கூடவா தெரியாது என்று நீங்கள் வியந்தாலும்.... உண்மை இது தான்.
நான் இந்த இனம் எனும் basic species identityயே கூட பிறரிடம் இருந்து கற்றுக்கொள்வது தான். அதுவே மனதின் ஒரு பதிவு தான்.
அது தான் நம் மனதின் பிரம்மாண்டமும்
அது தான் நம் மனதின் பிரச்சனையும்
ஆகும்
உலக மனநல வாரம் ஸ்பெஷல் 7
-
மூளைக்கும் மனசுக்கும் என்ன வித்தியாசம்? என்பதை மிகவும் அழுத்தமாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், நடிகை ஷீலா இயக்கிய ஒரு பழைய குரும்படத்தை பார்க்க வேண்டும்.
அந்த படத்தின் பெயர் எனக்கு நினைவில்லை. ஆனால் அந்த படம் அந்த கால தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.
ஒரு சினிமா நடிகை. ஒரு இல்லத்தரசி. ஒருவர் இறந்துவிட, அவரது மூளையை இன்னொருவருக்கு “மாற்று அறுவை சிகிச்சை” மூலம் பொருத்தி விடுகிறார்கள். ஆபரேஷன் வெற்றி. ஆனால் அந்த புதிய மூளையை பெற்ற பெண் தன் பழைய வாழ்வை மறக்க முடியாமல் எப்படி எல்லாம் தவிக்கிறாள் என்பது தான் கதை.
ஒரு நுணுக்கமான science fiction கதை. நடிகை ஷீலா இவ்வளவு பெரிய spirit of scientific inquiry கொண்டவரா என்று நம்மை திகைக்க செய்யும்.
ஆனால் அந்த கதை நமக்கும் கொடுக்கும் ஒரு மிக நுணுக்கமாக சிந்தனை தெளிவு: மூளை என்பது எல்லோருக்கும் ஒன்று தான். வடிவத்ததில், ரத்த நாளத்தில், நரம்புகளின் பின்னலில், நியூரானின் இயக்கத்தில் ... என்கிற hardware எல்லாம் அனைவருக்குமே பொது தான்
ஆனால் அதை இயக்கும் operating systemமான அந்த கண்ணுக்கு தெரியாத மென்பொருள் இருக்கிறதே, அது தான் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது.
இந்த மூளைக்கு எல்லாமே பொதுவிதிகள் தான். இத்தனை டிகிரி வெப்பம் என்றால் அது சூடு, “கையை உதறி விலகு” எனும் பொது விதி மட்டுமே இதற்கு பொருந்தும்.
ஆனால் "இந்த சூடு இருந்தாலும் நான் தீ மிதிப்பேன், அது என் நேர்த்திக்கடன், என் மானமே அதில் தான் இருக்கிறது... என் சமூக அந்தஸ்து குறையக்கூடாது, அதனால் இந்த ஆண்டு கட்டாயம் நான் பூமிதியில் கலந்துக்கொண்டே ஆக வேண்டும்” என்று ஒருவர் முக்கியத்துவம் கொடுப்பது அவர் நரம்பு எடுக்கும் முடிவு அல்ல. அவர் மனம் எடுக்கும் முடிவு.
ஆக, மூளை என்பது நரம்புகளில் வலைபின்னல் மட்டுமே. மனம் தான் அதனை இயக்கும் உருவமற்ற விசை.
Customised, personalised, encrypted software.
அதனால் தான் இது வரை இருதயம், கல்லீரல், நுரையீரல், ஏன் கருப்பை மாற்று transplant சிகிச்சைகள் பலதும் சாதியப்பட்ட இந்த காலக்கட்டத்தில் கூட இன்னும் மூளை மாற்ற அறுவை சிகிச்சை சாத்தியப்படவில்லை!
பிகாஸ் வெறுமனே மூளை என்பதை மாற்றுவது எளிது. ஆனால் அந்த மூளையை, “நான், எனது, என் விருப்பு, என் வெறுப்பு” என்று ஆளும் மனதை எப்படி பிரித்து எடுத்து இன்னொருவருக்கு பொருத்துவது?!
மனம் என்பது திசுவால் ஆனது இல்லை. அது பதிவுகளால் ஆனது.
ஒருவருக்கு முக்கியம் என்று படும் பதிவு இன்னொருவருக்கு “அய்யே, இதெல்லாம் ஒரு மேட்டாரா?” என்று இருக்கும்.
கதைக்கு வேண்டுமானால், ஆதி சங்கரர், கூடு விட்டு கூடு தாவி மஹாராணியுடன் மனதளவில் கலவி பயின்று பிறகு தன் சொந்த உடலுக்கே மனதை திருப்பினார் என்று கதைவிடலாம்.
அல்லது “அவத்தார்” படத்தில் வருவது போல, ஒரு மனிதன் தன் மனதின் அலைவரிசைகளால் வேறு ஒரு ஏலியனின் உடலை இயக்கலாம்...... என்கிற wishful thinking செய்யலாம்.
ஆனால் as science is today, அது இன்னும் சாத்தியம் அல்ல.
யானை தலையை ஒரு சிறுவனுக்கு வைத்த கதை நம்மூரில் பிரபலம். அப்படி யானை மூளை இருக்கப்பெற்றன் என்று ஒருவன் உண்மையிலேயே இருந்தால்,அந்த genetic mismatchசை விடுங்கள்.... பாவம், கதையே ஆனாலும் அந்த யானை தலைப் பையன் எப்படி வயசுக்கு வருவான்? எந்த species பெண்ணின் மேல் இனக்கவர்ச்சி கொள்வான்?
தொடரும்....
உலக மனநல வாரம் ஸ்பெஷல் 6
மனம் என்பது ஒரு விசித்திரமான கருவி. காரணம் அதற்கு உருவம் இல்லை. நம் மூளை கண்ணுக்கு தெரியும் கருவி. நரம்புகளோ நுண்ணோக்கியில் தெரியும் திசு.
ஆனால் மனம்? அதை நம்மால் நுண்ணோக்கியாலும் பார்க்க முடியாது. அதனை ஸ்கேன் எடுக்க முடியாது. எக்ஸ் ரே எடுக்க முடியாது. ரத்த பரிசோதனைகள் செய்து பார்த்து அதன் இயக்கத்தை நேரடியாக கிரகிக்கும் யுத்தி இது வரை இல்லை.
இப்படி இல்லாத ஒரு பாகத்திற்கு, எப்படி “மனநலம்” என்று ஒரு துறை? அதற்கு இவ்வளவு கிளையண்ட்ஸ்? இத்தனை வகையான நோய்கள். அதற்கென்று மருத்து, மாத்திரை, மற்ற வைதிய முறைகள்?
பெரிய இலுமினாட்டி சதி மாதிரியே தோன்றினாலும், உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போட்டு உடைத்தார் வள்ளுவர்:
அறிவு அற்றம் காக்கும் கருவி
செறுவார்க்கும் உள்ளழிக்கலாகா அரண்
அறிவு தான் நம்மை அழிவில் இருந்து காக்கும் கருவி.....
கருவி என்ற அந்த வார்த்தையை போட்டதற்கே அவருக்கு ஆயிரம் நோபல் பரிசு தரலாம்!!
Survival machine என்கின்ற வார்த்தை கோர்வையை Richard Dawkins 1970களில் தான் உபயோகிக்கிறார். ஆனால் அவருக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மாளு “அற்றம் காக்கும் கருவி” என்று excellent turn of phraseசை போட்டு வைத்தது எனக்கு எப்போதுமே ஓர் ஆட்சர்யம் தான்!!
செறுவார்க்கும் உள்ளே வந்து அழிக்க விடாத அரண்!
நம் உடலையும், உயிரையும், இருத்தலையும் காக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சம் நன் மனம்.
அதெப்படி சாதியம்!
அப்படி ஒரு உறுப்பே இல்லை என்று ஆரம்பித்துவிட்டு,
அது தான் கருவி,
அது தான் அரண் .....
என்றால், ஒரே குழப்பமாக இருக்குறதா?
அது தான் ஸ்வாரஸ்யமே!
ாரம்_முன்னிட்டு
உள்ளத்தனையது உயர்வு....
மனநலம் மன்னுயிருக்கு ஆக்கம்...
மனக்கவலை மாற்றல் அரிது...
மனமது செம்மை ஆனால்....
என்று மனதை பற்றி இத்தனை பாடல்கள் பாடிய சமுதாயத்தில், மனம் என்னும் யந்திரம் பற்றி நமக்கு சரியான புரிதல் இல்லாதது வெட்கக்கேடான விஷயம் தான்.
நம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், புத்தருக்கு முற்பட்ட காலத்திலேயே:
இந்த உலகம், காற்று, நீர், நிலம், நெருப்பு எனும் matterரால் ஆனது.
பொருள் என்கிற இந்த matterரோ அணுக்களால் ஆனது.
இயற்கை எந்த குறிக்கோளும் இல்லாமல் தன் நியதி படி இருக்கிறது.... இதுவே யதார்த்தம்.
காலத்திற்கு ஏற்ப எல்லாம் பரிணாமிக்கும்.
விருப்பு வெறுப்பு, நன்மை தீமை, உயர்வு தாழ்வு என்பன எல்லாம் இல்லாத சமநிலைக்கு பழகிக்கொள்ள வேண்டும்,
என்பது மாதிரியான ரொம்பவே அறிவியல் பூர்வமாய் யோசித்தவர்கள் நம் பெருசுகள்.
புத்தரும் கூட மனதை ஆரோகியமாக வைத்துருக்க, விபாசனா, யோகாசனா, நடுநிலைமை என்று பல யுத்திகளை கற்பித்தார்.
அப்படி மனதை அறிவியல் ரீதியாக நேர்த்தியாக கொண்டு போய்கொண்டிந்த நாம் தான் ஆடல், பாடல், கேளிக்கை, பக்தி, மூட நம்பிக்கை, கோயில், சிலை, விபூதி, தாயத்து, என்று தொப்பக்கடீர் என்று ஒரு பெரிய அறியாமை பள்ளத்தாக்கில் விழுந்துக்கிடக்கிறோம்.
முன்பு, லோகாயுதம், ஆசீவகம், ஜைனம், பௌத்தம், மாதிரியான ஸ்ரமண மதங்களை தமிழர்கள் கடைபிடித்த போது: கடவுளுக்கு நாம் பக்தியாய் இருந்தால் போதும், நம்மை கடவுள் காப்பற்றூவார் என்கிற மூடநம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதனால் locus of control வெளியே வின்வெளிவாழ் கடவுளிடம் இருப்பதாக அவர்கள் நம்பவில்லை.
“நான் நல்லா இருக்கணும்னா நான் என் மனசை நல்லா வெச்சிக்கணும்” என்கிற தெளிவு அவர்களுக்கு இருந்தது. அதனால் தான் மனதை மைய்யமாக வைத்தே அவர்கள் mental health manualசை வெளியிட்டார்கள்.
யோசித்துப்பாருங்கள். Printing technologyயே இல்லாத அந்த பல்நெடுங்காலத்தில் வெறும் எழுத்தாணி வைத்து பனை ஓலையில் எழுத வேண்டும் என்றால்... back breaking work தானே! ஆனால் நமக்கு பயனாக இருக்குமே என்று அவர்கள் அதை செய்தார்கள்.
ஆனால் நாம் அதை எல்லாம் மதிக்காமல், பக்தி, பரிகாரம், கடவுளிடம் முறையிடும் சாங்கியங்கள் என்று அப்படி 180 டிகிரி திரும்பி, விக்ரகம், யந்திர-தந்திர-மந்திர வழிப்பாட்டு முறைகளுக்கு மாறினோம்.
நமது locus of controlலை கோயிலுக்குள் இருக்கும் ஒரு பொம்மைக்கு கொடுத்துவிட்டோம். அந்த பொம்மைக்கு ஏதாவது செய்தால், அது நேரடியாக மேலோகத்தில் இருக்கும் கடவுளுக்கே போய் சேரும் என்று நம்பினோம்.
அந்த பொம்மைக்கு பூ, பழம் கொடுக்க ஆரம்பித்து, சரக்கு சுருட்டு, பலி என்று டெவலப் ஆகி, இப்போது ரொக்கம் நகையை தாண்டி நேரடியாக ஆன் லைன்னில் பணம் கட்டும் அளவிற்கு நாம் கடவுள் எனும் கொள்கையை அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.
இப்படி மூலத்தையே தொலைத்த நமக்கு இனி மனசை எப்படி வரம்பிற்குள் வைப்பது? மனம் என்றால் என்ன? அதன் வரம்புகள் என்ன? அதை பேணுவது எப்படி? என்று எதுவுமே தெரியாமல் போய்விட்டது.
இனிமேல் தான் மீட்டெக்கணும்....
உலக மனநல வாரம் ஸ்பெஷல் 4
உலக மனநல வாரத்தை முன்னிட்ட பதிவு #3
இந்தியர்கள் மனதை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள்.
மனதிற்கு சில மாய சக்திகள் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகள் பல சமயம் மூட நம்பிக்கை அளவிற்கு அபத்தமாகவும் இருப்பதுண்டு.
உதாரணத்திற்கு சில மனம் சார்ந்த மூட நம்பிக்கைகளை:
1) நம் மூளையின் 20% மட்டும் தான் பயனாகிறது. மீதம் 80% மூளையின் அதிசய ஆற்றல்களை பற்றி இன்னமும் நமக்கு தெரியாது. ஆக, நமது மூளை அலிபாபா குகை மாதிரி, அவ்வளவு பொக்கிஷம் அதில் ஒளிந்திருக்கு. இனிமே தான் கண்டே பிடிப்பாங்க....
இது முற்றிலும் தவறு. மனித மூளை மட்டும் அல்ல, மற்ற எல்லா ஜீவன்களின் மூளையும் 100% பயன்பாட்டில் தான் இருக்கின்றன. நான் சில வற்றை கவனிப்பதில்லை, சில வற்றை பொருட்படுத்துவதில்லை. அது மூளையின் தவறு அல்ல!!
2) மனிதர்களை போல sentinent speciesசுக்கு மட்டும் மூளையில் சில ஸ்பெஷல் தன்மைகள் உண்டு. அதனால் தான் தொல்காப்பியரே உயர்திணை என்று சிந்திக்கும் திறன் கொண்ட, மனிதர், தேவர், அசுரரை மட்டும் சொல்கிறார். யோசித்து, சுயமாய் முடிவெடுக்க முடியாத வாயில்லா ஜீவன்களுக்கு சிந்தனா சக்தி கிடையாது. அதனால் அவை அஃறிணை.....அதனால் நமக்கு மட்டும் தான் மறுபிறவி, நமக்கு மட்டும் தான் கர்மா....
ஹலோ, ஒரே ஒரு நாயையோ, கிளியையோ, குரங்கையோ வளர்த்து பாருங்கள். அவை நம்மை விட கெட்டிக்காரத்தனமாய் யோசிக்கும், செயல்படும்.
அதனால் மூளையிலேயே மனித மூளை தான் விசேஷம், அதற்கு மட்டும் தான் அதிசய ஆற்றல் இருப்பதாக சொல்வதெல்லாம் too much anthropocentric thinking. மனிதர்களின் வறட்டு கர்வம்!!
3) சித்தர்கள் மாதிரியான அதிசய மனிதர்கள் அவர்களது மனதை அடக்கி, மாய சக்திகளை பெறுகிறார்கள். அனிமா, மகிமா, லகிமா, மாதிரியான அஷ்டமா சித்திகளை பெருகிறார்கள்.
சித்தர்கள் என்பவர்கள் நிறைய சுயகட்டுப்பாடு விதிகளை கடைப்பிடித்தார்கள். ஆனால் அஷ்டமா சித்திகள் என்று அழைக்கப்படுபவை அனைத்தும், எல்லா மனிதருக்குமே சாத்தியமான சிந்தனை முறைகள். அவற்றுக்கு ஒரு சூப்பர்மேன் தனத்தை நாமே கற்பித்து, “ஸ்பெஷல் பவர் இருப்பவர்களுக்கு தான் அது சாத்தியம்” என்று ஒதுக்கி வைப்பது நமது அறியாமை!! (இது தனி தலைப்பு, இன்னொரு சமயத்தில் விரித்து பேசுவோம்)
4) இப்பேற்பட்ட திவ்ய ஆற்றல்கள் உடைய நமது மனம், எப்போதும் தவறே செய்யாது. அதற்கு நோய் என்கிற ஒன்றே கிடையாது. நாம் மனசு வைத்தால் எதையும் செய்யலாம், சாதிக்கலாம்!!
இந்த மூட நம்பிக்கை தான் இருப்பதிலேயே ஆபத்தானது!!
இது பற்றி விலாவரியாக நாளை பேசுவோம்......
இன்னும் ஒரு மாதத்தில் உலக மனநல வாரம்.
தொடர்ந்து தினமும் மனநலத்தை பற்றிய குட்டி தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முயல்கிறேன்.
இன்று
மனநலம் எனும் கூட்டு முயற்சி பற்றி பேசுவோம்.
மனநல மருத்துவர்கள் நிறைய ஊடக வெளிச்சம் பெறுவதால் மனநலம் வெறும் மருத்துவர் சம்பந்தமான சமாச்சாரம் என்றே பலரும் நினைக்க்கூடும்.
ஆனால் உண்மையில் மனநல மேலாண்மை என்பது ஒரு டீம் ஒர்க் தான்.
ஒரு பக்கம்: psychiatric Social worker, nurse, physician assistant என்கிற முக்கியமான டீம். அவர்களுடன் சைகாலஜிஸ்ட், சைக்கோதெரபிஸ்ட், சைக்கியாட்டிரிஸ்ட் என்று ஒரு mental health professionals டீம் A
இன்னொரு பக்கம், கிளையண்ட், அவரை கவனித்துக்கொள்ளும் caregivers என்கிற டீம் B
இந்தியா போன்ற நாடுகளில் டீம் A அவ்வளவு வலுவாக இல்லை, காரணம் நமது அரசுகள் மனநலத்திற்காக ஒதுக்கும் resources சற்று குறைவு. அதுவும் போக, நமது ஊரில் இவை எல்லாம் புதுசு தான், அதனால் இன்னமும் இங்கிலாந்து மாதிரியோ, கேனடா மாதிரியோ நாம் டெவலப் ஆகவில்லை.
ஆனால் இந்த டீம் B நம் நாட்டில் தான் இன்னும் பெட்டராக இருக்கிறது. ஒருவருக்கு மனதில் ஏதும் பிரச்சனை என்றால், அவருக்காக மெனக்கெட்டு எல்லாம் செய்யும் பெற்றோரும், சகோதர்களும், மாமன் மாரும் நம்மூரில் அதிகம்.
அரசு மருத்துவமனை மனநல பிரிவுகளில் பதிவு செய்த நபர்களுக்கு, ஒரு மாதத்திற்கு உண்டான மருந்துகளை தருவார்கள். அதற்கென்று ஒரு ஓ பி நோட்டுபுத்தகம் இருக்கும். அதை நோயாளியே தான் கொண்டு வர வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லை. யார் அந்த நோட்டை கொண்டு வந்து கொடுத்து, விவரம் சொன்னாலும், மருந்தை தரும் ஒரு informal ஏற்பாடு உண்டு.
மூளை வளர்ச்சி குறைந்தவர், வலிப்பு நோய், மனசிதைவு, மிக தீவிரமான ஓ சீ டி, அல்லது டெமென்ஷியா என்றால், பிரத்தியேகமாய் வண்டியை வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து போக வேண்டி வரும், ரொம்பவும் சிரமம்+ செலவு....
அதனால் மருத்துவமனையை சுற்றியுள்ள எத்தனையோ கிராமங்களில் இருந்து,
அப்பா,
அம்மா,
மாமா,
சித்தப்பா,
பெரியப்பா,
அண்ணன்,
தம்பி,
அக்காள்,
மருமகன்,
மருமகள்,
கனவன்,
மனைவி,
மகள்
மகன்.....
என்று எத்தனையோ விதத்தில் உறவு முறையான மனிதர்கள், “மாச மாத்திரை” வாங்க நோட்டும் கையுமாய் ஓ பிகளில் வரிசைக்கட்டி நிற்பார்கள்.
சில சமயம், நோயாளியின் அம்மா எங்களுக்கு லெட்டர் எழுதி அனுப்பி இருப்பார்கள். இப்போதெல்லாம் வாட்ஸப்பில் பேசியே அனுப்புவார்கள்!!
அந்த அளவிற்கு நம்மூரில் டீம் B ரொம்பவே வலுவாக வேலை செய்யும்!! அதனால் தான் வெளிநாடுகளை போல, நம்மூரில் மனநல பாதிப்பு காரணமாய் யாரும் பொது இடங்களில் பத்து பேரை தாக்கியதாக சம்பவங்கள் அதிகம் இல்லை.
எல்லா புகழும் டீம் B க்குத் தான்!!
இருந்தும் டீம் A வையும் அருள் கூர்ந்து அரசு நல்லபடியாக வளர்த்தெடுத்தால், மனநலத்தில் நாம் இன்னும் அதிகமாய் சாதிக்கலாம்!!
மனநலக்கோளாறுகளை பற்றி பொதுமக்களுக்கு பெரிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. இது ஒரு பெரிய பிரிவு என்றால், ஏற்கனவே தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது மனநல பிறழ்வு நேர்ந்ததை பற்றி அறிந்தவர் என்கிற ஒரு சின்னப்பிரிவும் உண்டு
ஒருவரின் தாயாருக்கு பைபோலார் கோளாறு. அவருக்கு நினைவு தெரிந்ததில் இருந்து எண்ணினால், முப்பது ஆண்டு காலத்தில் பத்து பன்னிரண்டு முறை மேனியா, எனும் எழுச்சி நிலை வந்ததுண்டு. அப்போதெல்லாம் அவர் அதிகம் பேசுவார், தூங்காமல் ஏதாவது வேலையை இழுத்துப்போட்டு செய்வார், முகம் நிறைய மஞ்சள் பூசி, பெரிய பொட்டு வைத்து, பட்டு புடவை கட்டி, எல்லா நகைகளையும் எடுத்து மாட்டிக்கொண்டு, ஓவர் ஸ்பீடாய், ஓவர் பக்தியாய், ஓவர் வாயாடியாய், ஓவர் செல்வாளியாய் இருப்பார்.
அம்மா ஓவரா நகை அணிய ஆரம்பித்தாலே, “டாக்டர் கிட்ட போகணும்” என்று அவர் பிள்ளைகள் குறிப்பறிய ஆரம்பித்தார்கள்.
இதற்கு நேரெதிராக, முப்பது ஆண்டுகளில் ஒரு பத்து- பதினைந்து முறை சிவ்வியரான டிப்ரெஷனும், இன்னொரு பத்து தடவை கிட்ட, மிதமான டிப்ரெஷனும் வந்திருக்கலாம்.
டிப்ரெஷன் என்றால், அம்மா தலையை கூட வாராமல், அப்படியே மலைத்து படுத்தே கிடப்பார்.... இதற்கும் அவர் பிள்ளைகள் தான் “டாக்டர் கிட்ட” அழைத்து வருவார்கள்.
இப்படி பைப்போலார் நோயை டைட் குளோஸ் அப்பில் பார்த்து, பழகியவருக்கு, “லித்தியம் டோஸ் பத்தலை. ரிஸ்பெரிடோன் தான் நல்லா கேக்கும்” என்று தகவல் சொல்லும் அளவிற்கு நோயின் தன்மையும், சிகிச்சை முறையும் புரிந்து விடுகிறது.
ஆனால் இதற்கும் ஒரு side effect இருக்கிறது. இந்த நோய் மரபணு மூலமாய் பரவுறதுன்னா, எனக்கும் வருமோ? என் பிள்ளைகளுக்கும் வருமோ?.... இந்த அவஸ்த்தை இருக்கிறதே. அது தான் பெரிய கொடுமை.
குழந்தை கொஞ்சம் மூட் அவுட் ஆகி மூஞ்சை தூக்கி வைத்தாலும், “ஏதாவது சீரியஸ்ஸாகுறத்துக்குள்ள டாக்டர் கிட்ட போயிடலாம். எதுக்கும் நம்ம Family historyய சொல்லி வெச்சிடலாம்....” என்று அந்த பெற்றோர் படும் தவிப்பு! சொல்லி மாளாது.....
நோயே வந்து தொலைத்தாலும், “சனியன்ப்பிடிச்சது வந்துடுச்சு..” என்று திட்டிக்கொண்டேயாவது டிரீட் செய்து பிரச்சனையை தாண்டி வரலாம்.
ஆனால் வருமா, வர்றாதா? இது அதுவா இல்லையா? என்று எப்போதுமே இது குறித்து worried wellலாகவே இருப்பது ஒரு மிக பெரிய இம்சை தான்.
இது மாதிரி ஒன்று இரண்டு அல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட மனநல குறைபாடுகள் உண்டு. அவை அனைத்துமே மரபணு ரீதியாய் பரவுபவை தான். அவற்றை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும், நாம் செய்யும் குறைந்த பட்ச தற்காப்பு:
1) என் peace of mind தான் என் பொக்கிஷம். அதை என் top most priorityயா வெச்சிப்பேன் என்கிற self-focused அணுகுமுறை
2) Family Psychiatristடோடு ஓர் அறிமுகம்
3) தினசரி நல்ல உறவினர், அல்லது நண்பர் யாராவது ஒருவருடன் உரையாடல்
4) மனதில் பட்டதை வெட்கப்படாமல் சொல்லி புலம்பி ஆற்றிக்கொள்ள ஒரு உருதுணையான உறவு. பெற்றோர், சகோதரர், துணைவர், பிள்ளைகள், நண்பர்... இப்படி யாருமே வாய்க்கவில்லை என்றால் ஒரு சைக்கோ தெரபிஸ்ட்.
5) இதில் யாராவது, “என்னமோ கொஞ்சம் சரியில்லனு தோணுது, எதற்கும் சைக்கியாறிஸ்ட்ட போய் பார்த்துடலாமே” என்று அவர்களது common senseசை பயன்படுத்தி சொன்னால், அதை அசட்டை செய்யாமல், உடனே டாக்டரை பார்க்கும் ஆரோகியமான அணுகுமுறை
இப்படி ஒரு survival planநை போட்டுவைத்துக்கொண்டு அதனை கடைப்பிடிப்பது நமக்கு ஒரு பெரிய sense of clarityயை தரும். “எதுனாலும் ஒரு கை பார்த்துடலாம்” என்கிற பலத்தை தரும்.
மிச்சத்துக்கு தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்களே!
முருகர் பூணூல் போட்டிருக்கிறார்
பிள்ளையார் பூணூல் போட்டிருக்கிறார்
அவ்வளவு ஏன்
மஹாபலி கூட பூணூல் போட்டிருக்கிறார்
அப்படியானால் இவர்கள் எல்லோருமே ஸ்மார்த்தர்களா?
ஸ்மார்த்தர்னா? என்கிறீர்களா?
வடக்கிலிருந்து தெற்கிற்கு குடியேறிய பிராமணர்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்ட பெயர் தான் வடமா, ஸ்மார்த்தா, வைதீகாள் என்பன எல்லாம்.
ஸ்மார்த்தர்களுக்கு விக்ரக வழிபாடு கிடையாது
அவர்கள் யாகம் வளர்த்து வேதம் ஓதுவார்கள்.
இவர்கள் இப்போது பூணூல் அணிகிறார்கள்.
இவர்களை போலவே, “ஆசாரி” என்று தொழிற்பெயர் கொண்ட பொற்கொல்லர், மரவேலை செய்பவர், போன்றோரும் பூணூல் அணிகிறார்கள்.
கடவுள், பூஜாரி, தச்சர்.....
இவர்கள் அனைவருக்கும் என்ன ஒற்றுமை?
ஏன் இவர்கள் எல்லாம் பூணூல் அணியும் சமூக மரபை கடைப்பிடிக்கிறார்கள்?
சொன்னால் ஆட்சரிய படுவீர்கள்,
ஆனால் பூணூல் ஒரிஜினலி ஜைன மதத்தின் வழக்கம்.
நற்காட்சி, நல் அறிவு, நல் ஒழுக்கம்; ஆகிய மூன்றையும் நினைவூட்ட ஜைனர்கள் மற்ற எந்த ஆடையும் அணியாவிட்டாலும், முப்பிரி பூணூலை முக்கியமாக அணிகிறார்கள்.
இன்றும் வட ஆற்காடு, திருவண்ணாமலை பகுதிகளில் வாழும் பல லட்ஷக்கணக்கான தமிழ் சமணர்கள் பூணூல் அணிகிறார்கள்.
ஜைனர்களை பஞ்ச பரமேஷ்டி படிநிலையில் ஆச்சாரியா என்பது மூன்றாம் படி நிலை.
(சாது->உபாதியாயர் ->ஆச்சாரியா->சித்தர்-> அருகர்)
இதிலிருந்து “ஆசாரி” என்ற இனம் தோன்றியதா?
அவர்கள் தான் பூணூல் அணிகிறார்களா?
இதை மனதில் வைத்து யோசித்தால்....
ஸ்மார்த்தர்கள் முருகனுக்கு தங்களை போல பூணூல் போட்டுவிட்டார்களா?
அல்லது முருகன், விநாயகர், மஹாபலி மாதிரியான சமணர்களை பார்த்து இவர்கள் பூணூலை காபி அடித்தார்களா? என்ற கேள்வி வருகிறது?
ஓணத்திருநாளும் அதுவுமாய், மஹாபலியை சமண அரசன் என்று கூறுவது சரியா என்ற கேள்வியும் உங்களுக்கு வரலாம்.
But consider these:
மஹாபலி மட்டும் அல்ல,
நரகாசூரன்,
ஹிரன்யகஷிபு,
இராவணன்
ஆகிய எல்லா victims of Vishnuvian assassinationனுமே தபஸ்விகள் தாம்.
தபஸ், தமிழில் தவம்: இது சமணர்களுக்கு உரிய மனக்கட்டுப்பாட்டு முறை.
ரிமெம்பர் சம்பூகன்? தலைக்கீழாய் தொங்கி தவம் செய்த குற்றத்திற்காக ஶ்ரீராமசந்திர மூர்த்தி வந்து தலையை வெட்டினாரே?!. தட் சம்பூகன் ஆசீவக மரபுப்படி தான் தலைகீழாய் தொங்கி தவம் செய்துக்கொண்டு இருந்தார்.
ஆக, தவம் என்பது சமண மரபு.
பூணூல் என்பதும் சமண மரபு.
அந்த புராணக்கதை படி பெரிய தபஸ்வியாய் சொல்லப்படும் மஹாபலி, சமணராக இருந்திருக்க நிச்சயம் வாய்ப்புண்டு.
அப்படியானால்...
சமணர்களை கொன்று/வாதத்தில் வென்று, அல்லது விரட்டிவிட்டு, அவர்கள் அதுவரை கண்டுபிடித்து/ காப்பாற்றி வைத்த எல்லா intellectual propertyயையும் plagiarise செய்தவர்கள் தான் பின்னாளில் இங்கு வந்த ஸ்மார்த்தர்கள்!!
ஆக, பூணூலே சமணர்களிடமிருந்து சுட்ட status symbolலோ!
#ஆன்மீகப்பகுத்தறிவு
விஷ்ணுவை மையமாக வைத்து புனையப்பட்ட புராணங்கள் பலவற்றிலும் story line ஒன்று தான்.
ஒரு திராவிட அரசன் இருப்பான்.
அவன் சிவபக்தனாக இருப்பான்
அவன் கடும் தவம் செய்து வரம் வாங்குவான்.
(Note this point, தவம் தான், நோ யாகம்)
என்ன வரம் என்றால்: சாகாவரம்.
மொத்தமாக சாவே இல்லாதவன் சாமி ஆகிவிடுவானே, அப்புறம் “இந்திரன் ஒத்துக்க மாட்டான், அதனால் வரத்தை கொஞ்சம் குறைச்சிக்கேளுப்பா” என்று சிவபெருமான் negotiate செய்வார்.
அதனால் பொத்தம் பொதுவாய் “சாவே இல்லை” என்பதை கொஞ்சம் மாற்றி, “இப்படி இப்படி எல்லாம் சாவு வர்றாது” என்று contentடை கொஞ்சம் மாற்றி வரம் பெறுவார் அந்த அரசர்.
அந்த வரத்தின் மகிமையால் அரசன் அமோகமாய் ஆட்சி செய்வான்.
இதற்கிடையில் இந்திரன் insecure ஆகி, பெருமாளிடம் போய் புலம்புவார். ஏன் பெருமாளிடம் போகிறார்? வரத்தை கொடுத்த சிவனிடமே போய் வரத்தை வாபஸ் பெற சொல்லி கேட்கலாமே?
No, சிவன் ரொம்ப straight forward. சொன்னா சொன்னது தான் டைப். விஷ்ணு தான் சாதுர்யமானவர். இந்திரனின் inferiorityயை எல்லாம் cover-up செய்வதை உபதொழிலாய் கொண்டவர்.
உடனே பெருமாள் அந்த வரத்தின் MoUங்கை கூர்ந்து கவனித்து, அதில் ஒரு loopholeலை கண்டுபிடித்து, கரெக்டாய், அந்த கெட் அப் ஒன்றை அணிந்துக்கொண்டு போய், அந்த அரசனை சந்திப்பார். கொல்வார். Assassination Expert அவர்.
இப்படி அவர் எடுத்த அவதாரங்களும் கொன்ற அரசர்களும் யார் யார்?
அவதாரம் # 4: நரசிம்மா——>ஹிரன்யகஷிப்பு அவுட்
அவதாரம் # 5: வாமணன்——>மகாவலி அவுட்
அவதாரம் # 6: பரசுராமர்——-> All kings all over the world out
(ஆமாம், உலகமெங்கும் உள்ள எல்லா ஷத்திரியர்களையும் தன் கோடாளியால் கொன்றாராம் மிஸ்டர் பர்ஸ். அப்படியானால் எகிப்து, கிரேக்கம், சுமேர், பாரசீகம், இந்தியா, சீனா என்ற சர்வ லோக அரசர்களும் அவுட்.
நம் ஊரில் இருந்த எல்லா ராஜாக்களும் அவுட்)
அவதாரம் # 7: ராமன். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும். அது தான் எல்லா ராஜாக்களையும் முந்தைய அவதாரத்தில் கொன்றுவிட்டாரே, அப்புறம் எப்படி ரகுவம்சத்தில் மட்டும் ஒரு தசரதன்? அந்த தசரதனுக்கு நான்கு பாயச புத்திரர்கள்?!
இந்த லாஜிக் கேள்விக்கெல்லாம் பதில் இல்லை.
ஓவர் டு அவதாரம் # 7 ராமா: அவன் கொன்ற அரசர்கள் வாலி, இராவணன்.
அவதாரம் # 8: கிருஷ்ணா——> மொத்த குரு வம்சமும் க்ளோஸ்
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
மட்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்; மிருக உருவம், அதனால் அவற்றுக்கு தனி வழிப்பாடு இல்லை.
நரசிம்மருக்கும், சீதா ராமருக்கும்*, கிருஷ்ண அவதாரத்திற்கும் கோயில் வழிபாடு உண்டு.
*இதிலும் ராமனுக்கு தனியா சிலை லேது!
பரசுராமருக்கும், வாமணர். இந்த இரண்டு அவதாரத்தில் தான் விஷ்ணு பிராமணராய் வருகிறார். பரசுராமனாவது ஷத்திரியாஅம்மாவிற்கு பிறந்த பையன் என்று கதை சொல்லுவார்கள்.
What about the full blooded twice born brahmana Vamana? அவருக்கும் நம்மூர் முட்டாள் ராஜாக்கள் தான் கோயில் கட்டினார்கள். பிராமணர்கள் கட்டவில்லை
பிகாஸ் கோயில் கட்டி வழிபடும் முறை பிராமணர்களுக்கு உண்டானது அல்ல.
அவர்கள் யாகம் வளர்த்து வேதம் ஓதி மட்டுமே வழிப்பட வேண்டும்.
அப்ப அவர்கள் நம்ம கோயில்களில் வந்து பூஜை போடுவது?
நாம் ஏமார்ந்த்தோம், அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
இன்றைய நிலவரப்படி, வாமணனுக்கு பெரிய விழா எடுக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை. Yet மாவலிக்கு வழிபாடு உண்டு!
நாளை ஓணத்திரு நாள். ஐந்தாம் அவதாரம் காலி செய்த மாவலியை இன்னும் இந்த மலையாளிகள் ஞாபகம் வைத்து, பண்டிகை எடுக்கிறார்கள். புது துணி உடுத்தி, பூக்கோலம் போட்டு, விருந்து உண்டு, டீவியில் புது நிகழ்ச்சி பார்த்து...
மக்கள் இன்னமும் மாவலிக்கு தான் விஸ்வாசம் காட்டுகிறார்கள்.
ஆக அவதாரம் எடுத்தும் யூஸ் இல்லாடா மோனே
வாமணன் அவுட்டு, மக்கள் வின்னு!!
#ஆன்மீகப்பகுத்தறிவு
தம்பி அண்ணாமலை ஐ பி எஸ்ஸை பார்க்கும் போது, என் பள்ளிக்காலத்தை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
என் பள்ளிக்கூடம் இந்திய கலாச்சரத்தை மொத்தமாக கரைத்து நேரடியாக எங்கள் மூளைக்குள் டவுன் லோடு செய்யும்.
வெள்ளிக்கிழமை என்றால் ஸ்கூல் அசெம்பிலியில் எனக்கு மயக்கமே வந்து விடும்... அத்தனை பக்திபாடல்கள், எல்லாமே சம்ஸ்கிருதத்தில்.
ஏதாவது ஒரு பண்டிகையோ, தேசிய தினமோ வந்துவிட்டால், ராஜ்குமார் பாரதி, வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் என்று யாராவது வந்து தேசபக்தி நிகழ்ச்சி நடத்துவார்கள்.
அப்புறம் விஷ்வ இந்து பரிஷத் வந்து எங்களுக்கு ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றில் இண்டர்ஸ்கூல் போட்டி எல்லாம் வைத்தார்கள்.
பக்த துருவ மார்கண்டேயா, என்று ஒரு முழு நீள சமஸ்கிருத படத்திற்கு நாங்கள் வீடு வீடாய் போய் டிக்கெட் விற்றோம்.
ஆர் எஸ் எஸ் எங்கள் பள்ளிக்கு வந்து எங்களுக்கு ஆடல், பாடல், யோகா எல்லாம் சொல்லுக்கொடுத்தார்கள்.
“சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி
கிராமம் அனைத்தும் தவ பூமி
சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம்
சிறுவர் அனைவரும் ராமனே....”
என்றெல்லாம் நாங்கள் காயர் பாடுவோம்.
அதன் பிறகு என்னை ஒரு ஸ்டேட் போர்ட் பள்ளிக்கு என் அம்மா மாற்றிவிட்டார்கள். அது வரை வரலாறு படிப்பேன், தமிழ் படிப்பேன், இயற்கை விவசாயம் செய்வேன், ஆயுர்வேதம் படிப்பேன், துறவி ஆக போகிறேன்.... என்றெல்லாம் பலவாக கனவுலகில் வாழ்ந்த என்னை, அம்மா செண்டிமெண்ட் எனும் ஒற்றை மாயவிசையை வைத்து 180 டிகிரி திருப்பி, சயின்ஸ் படிக்க வைத்தார் என் அம்மா.
என் அம்மா ஒரு இயல்பான, யதார்த்தவாதி.
தத்துவம், வியாகியானம், சித்தாந்தம் எல்லாம் அவருக்கு பிடிக்காது. மிகவும் நேரடியாக யோசிப்பார். அதற்கும் மேல் ஏதாவது பேசினால், “டோண்ட் டாக் வீண் டாக்” என்பார்.
அவர் ஒரு கிறுஸ்துவ கண்வெண்ட்டில் படித்தவர். என் கொள்ளு பாட்டி, என் பாட்டி, என் அம்மா - மூவருமே அதே காண்வெண்ட்டில் படித்தவர்கள். பக்கத்து வீட்டு மேரியம்மா, எதிர் வீட்டு பாஷா டாக்டர், அடுத்த வீட்டு சிங்கு, அடுத்த தெரு ஆங்கிலோ இந்தியன், எங்கள் வீட்டில் குடியிருந்த ஐயர் -எல்லோருமே என் அம்மாவுக்கு ஒன்று தான். இன்னசெண்ட் காஸ்மோபாலிட்டன் multicultural லேடி என் அம்மா.
அவரிடம் போய், “சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி” என்றால், “உளறாம போய் படி. டோண்ட் டாக் வீண் டாக்” தான்.
ஆர் எஸ் எஸ் மாதிரியான ஒரு மிக பெரிய அமைப்பின் மூளை சலவையை வெறும் தன் common senseசால், தனி ஒரு மனிஷியாய் அவரால் முறியடிக்க முடிந்தது.
என் அம்மாவின் அந்த விடா முயற்சியும், வழிகாட்டுதலும் இல்லாவிட்டால் சங்கி ஆகிவிடும் அனைத்து மூளைவேலைபாடும் செய்யப்பட்டவள் தான் நானும்.
என் அம்மா விவரமாய் இருந்தார்கள். என் மூளையை மீட்டு என்னை அறிவியல் பக்கம் திருப்பினார்கள்.
பாவம் அண்ணாமலை சாரின் அம்மாவிற்கு அது சாதியப்படவில்லை போலும்.
எந்த குழந்தையும் களிமண் தான்,
அது சங்கி ஆவதும், சாமர்த்தியம் ஆவதும்
அன்னை வளர்ப்பதிலே!
எப்பேற்ப்பட்ட படுகுழியில் இருந்து என்னை காப்பாற்றி இருக்கிறார் என் அம்மா, என்பது மிஸ்டர் அண்ணாமலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு உரைக்கிறது...
My darling அம்மா நீங்க எப்பேற்பட்ட தெய்வம்!
என்னதான் உடம்பு/மனசு சரியில்லை என்றாலும், அவர் எந்த நாட்டில் வாழும் மனிதராய் இருந்தாலும், “நம்மள மாதிரி இருக்குற டாக்டரால தான் நம்மள புரிஞ்சிக்க முடியும்” என்கிற அடிப்படை தேர்வு முறையை தான் எல்லோருமே பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை மாதிரியே இருக்கும்/ யோசிக்கும் டாக்டர் என்றால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. அவரிடம் எல்லா விவரமும் சொல்லலாம், அவர் ஏளமனாய் நினைக்க மாட்டார் என்று....
இதனால் தான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோபியாவில் வாழ்ந்தாலும், “இந்திய டாக்டர் தான் வேணும், அதுவும் தமிழர் தான் வேணும்” என்று யோசிக்கிறார்கள்.
இது இப்படி இருக்க, மூன்று மொழி கல்விக்கொள்கை, நீட்தேர்வு, தமிழக அரசு மருத்துவருக்கு அளிக்கப்படும் கல்விக்கான சலுகை ரத்து, தமிழக மருத்துவக்கல்லூரிகளில் பிற மாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு.... மாதிரியான தொடர் சதி வேலைகள் தமிழ் டாக்டர்கள் எனும் அரியவகை ஜீவராசியை மெல்ல மெல்ல அழித்து விடும்.
“இவ்வளவு எல்லாம் மெனக்கெட்டு டாக்டர் ஆகி என்னத்த கிழிக்கப்போறோம்” என்று டிஸ்கரேஜ் அகிவிட்டால் வருங்கால மாணவர் யாரும் டாக்டர் ஆக விரும்ப மாட்டார்கள்.
அப்படி நேர்ந்தால், net loss யாருக்கு?
இந்திக்கார “ஜெய் ஶ்ரீராம் போலோ” டாக்டரிடம் போய், “வவுத்தால போவுது” என்று சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு, நம்மூர் நோயாளிகள் “நாட்டு மருந்தை சாப்பிட்டு பார்க்கலாம், எதுவுமே முடியல்லன்னா, அப்புறம் பார்க்கலாம்” என்று ஆரோகியத்தை அசட்டையாக எடுத்துக்கொண்டால், நம் நிலைமை என்ன?
அறுவை சிகிச்சை மாதிரியான துறைகளில் கூட மொழியும் நம்பிக்கைகளும் இரண்டாம் பட்சம் தான். ஆனால் ஆரம்ப சுகாதாரம், மகப்பேறு, குழந்தைகள் நலம், மனநலம், சமூக மருத்துவயியல், மாதிரியான துறைகளில் மொழியும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் மிக முக்கியம்......
நல்ல மருத்துவர் அமைவது ஒரு வரம்.
நாம் தவமிருந்து வாங்கி வந்த வரத்தை ஶ்ரீராமசந்திர மூர்த்தையை வைத்து வதம் செய்து அழிக்க பார்க்கிறார்கள்.
இது அவர்களுக்கு புதியது அல்ல.
நம்மாள் எப்போதுமே தவம் செய்து, சிவனை வேண்டி சாகாவரம் வாங்கி வந்தால், அவர்கள் விஷ்ணுவை ஏதாவது ஒரு அவதாரமாய் ஏவி, நம் வரத்தை கெடுத்து, நம்மை நிர்மூலமாக்க பார்க்கிறார்கள்.
முன்பு நமக்கு அந்த pattern புரியவில்லை, பேக்கு மாதிரி பக்தியில் உழண்டுக்கொண்டு இருந்தோம்.
இப்போது?
இந்துமதம் 2.0_2
அலெக்சாண்டர் தி கிரேட் எனும் மேசிடோனிய மன்னன், இந்த உலகத்தையே கட்டி ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால் படைகளை திரட்டி, எகிப்து, அரேபியா, பர்ஷியா, இந்தியா என்று நாடுபிடி வேட்டையாடினான்.
ஆனால் பர்ஷியா தாண்டி அவன் பஞ்சாப் பகுதியை நெருங்கிய போது, அங்கே சில அம்மண சாமியார்களை சந்தித்தான். கிரேக்கத்தில் ஆண்கள் அம்மணமாக இருப்பது உச்சக்கட்ட கலைவடிவாய் ரசிக்கப்பட்ட காலம் அது. ஆனால் இந்த அம்மண சாமியார்கள் அழகுற்க்காகவோ, கலவி இச்சைக்காகவோ அம்மணமாக இல்லை. அவர்கள் முற்றும் துறந்த முனிகள்.
அலெக்சாண்டர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தான்.
“நீங்கள் ஏன் ஆடை இல்லாமல் இருக்கிறீர்கள்?”
அதற்கு அவர்கள், “நீ ஏன் ஆடையணிந்திருக்கிறாய்?” என்றார்களாம்.
“நான் அரசன். இந்த உலகை ஆள வந்தேன்” என்றானாம் அலெச்ஸ். அதற்கு அந்த கிம்னோசோபிஸ்டு (ஜிம் என்றால் கிரேக்க மொழியில் நிர்வாணம், சோபி என்றால் அறிவு) சிம்பிளாய் சில தத்துவங்களை சொல்ல, அலெக்சுக்கு அவர்களை மிகவும் பிடித்துப்போய், அவர்களை தன்னோடு அழைத்துக்கொண்டு பயணித்தானாம்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
1) அலெக்ஸ் ஜிம்னோசோபிஸ்டுகளை சந்தித்த பகுதி, இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்
2) அந்த அம்மண சாமியார்கள் யாராக இருக்கும்?
- அருக வழிபாடு செய்த ஜெயினர்கள்
-மற்கலி கோசாலரின் ஆசீவக துறவியர்
- இன்னும் நமக்கு தெரியாத வேறு ஏதோ அந்தக்காலத்து துறவி கல்ட்
3) ஜைனம், ஆசீவகம், பௌத்தம், சாங்கியம் மாதிரியான மதங்கள் (மதம் என்றால் சம்ஸ்கிருதத்தில் கருத்து என்று பொருள்) அந்த காலத்து ஆசியாவில் மிக பிரபலம். கிழக்கில் ஜப்பான் முதல், மேற்கில் கிரேக்கம் வரை, வடக்கில் மங்கோலியா முதல் தெற்கில் இலங்கை வரையிலும் இதே கருத்துக்கள் தான் பரவி இருந்தன. ஏசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே!
அதனால் தான்,இதற்கு பிற்காலத்தில் தோன்றிய ஏசு கிறுஸ்த்து சிலை வழிபாட்டை தடுத்து, பௌத்த கொள்கைகளை மெச்சுகினார்.
இன்னும் இதற்கு பிறகு தோன்றிய இஸ்லாமிய மதம், ஈகை, நோண்பு, உடல் சுத்தம், மாதிரியான ஜைன கொள்கைகளை முக்கியமாய் கருதுகிறது. சமண, ஆசிவர்களுக்கு பிறகு தம் வழிபாட்டு தளத்தை பள்ளி என்று அழைக்கும் கருத்தாக்கம் இஸ்லாமியர்களுக்கு தான் உண்டு. இந்த பள்ளியில் ஊர் பிள்ளைகளுக்கு இலவச கல்வி கற்பிக்கும் பழக்கத்தையும் இவர்களே கடைபிடித்தார்கள்.
ஆனால் இன்றிய மதங்கள் எதுவும் அம்மண கோலத்தை ஆதரிப்பதில்லை.... திகம்பர ஜைனர்களை தவிற. ஆனால் ஜெயினர்கள் இன்னமும் அம்மணத்தை துறவரத்தின் உச்சக்கட்ட மேன்மை நிலையாகவே மதிக்கிறார்கள். ஜெயின் தீர்த்தங்கரர்கள் 24 பேரும் பெரும்பாலும் அம்மண கோலத்தில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் மட்டும் அல்ல, ஸ்ரவண பெளகோலாவில் உயர்ந்து நிற்கும் கோமதீஸ்வரா,முழு நிர்வாணமாகவும், பழனியில் அருள் புரியும் பாலதண்டாயுதபாணி முக்கால்நிர்வாணமுமாகத் தான் நிற்கிறார்கள்
வரலாறும், வழிப்பாட்டு முறைகளும் நம் கண்முன்னே உண்மைகளை உள்ளது உள்ளபடி அப்பட்டமாய் வெளிபடுத்தினாலும், நாம் ஏதோ ஒரு பயஸ்ஸில் சிக்குண்டு, நம் முன்முடிவுகளை விட்டு விலகி, விடுதலையாக முடியாமல், denial modeடிலேயே கிடக்கிறோம்.
#ஆன்மீகப்பகுத்தறிவு
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chennai
600095
72, Marshalls Road
Chennai, 600008
Welcome to the official BODYFUELZ page ! Get the latest information about supplements and health tips by connecting with us! www.bodyfuelz.com
856, Poonamalle High Road, Kilpauk
Chennai, 600010
Dr. Vijeyapal is the CEO and medical Director of Herbzalive Multipeciality Ayurveda, a chain of Ayurvedic centers in Chennai, Hyderabad, Musiri and Singapore. He is also a Consul...
12/02, Tidel Park, 4 Canal Bank Road, Taramani
Chennai, 600113
Coronis Ajuba is a premier global provider of healthcare Revenue Cycle Management (RCM) outsourcing
No. 23, Narasingapuram Street, Anna Salai, Ritchie St, Chintadripet
Chennai, 600002
Cette page a démarré quand S.A.B.A. a posté sur Facebook la phrase suivante: "aujourd'hui, on ne peut plus grossir dans son coin sans déclencher aussitôt un scandale planétaire". C...
Treat At Home App, No. 7, 2nd Floor, JBM GST Grand, GST Road, Vandalur
Chennai, 600048
India’s Exclusive Home Doctor App!
921, 13th Main Road, Anna Nagar West
Chennai, 600040
Multivendor E-Commerce B2B portal for medical equipment and devices. Allow procurement specialists to self-serve with fast search, simple navigation, and millions of SKUs at their ...
Chennai, 600011
MSc, MPhil in psychology, M.S. in psychotherapy and counselling, 14 years of counselling experience
28 19 2a Mylai Ranganathan Street Thanikachalam Road T. Nagar
Chennai, 600017
Ethnic Health Care Natural Fertility Centre For Couples We Treatment For 4446 Diseases According to Ancient Siddha Manuscript
Rajeshwar Nagar
Chennai, 600116
Physiotherapists assist patients in rehabilitating physical problems caused by illness, injury, disability or aging, through treatment.
Chennai
Chennai, 600041
Directing Patients Towards The Right Destination For Healthcare Needs