ShanJeya Herbals
Health through siddha Ayurveda 👩⚕️
Healthy living is what we target for you.
அனைத்து பெரியவர்களுக்கும், தயவுசெய்து பின்பற்றவும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.```
#45 வயது முதல் உள்ள பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள்*
******
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
::::::::::::::::::::::::::::::::::
உங்கள் தேநீரில் பால் குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
~~~~~~
பகல் நேரத்தில், அதிக தண்ணீர் குடிக்கவும்; ஆனால் இரவு நேரத்தில், குறைவாக குடிக்கவும்.
~~~~~~
பகலில் 2 கப் காபிக்கு மேல் குடிக்க வேண்டாம், முற்றிலும் நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
~~~~~~
எண்ணெய் உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள்.
~~~~~~
சிறந்த தூக்க நேரங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.
~~~~~~
மாலையில், மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு சிறிது அல்லது எதுவும் சாப்பிடுங்கள்.
~~~~~
குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் சூடானவுடன், படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக படுத்துக்கொள்ளாதீர்கள்.
~~~~~~
நீங்கள் மேலும் வயதாகும்போது, குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள், ஆனால் அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும்
~~~~~~~~~~~~~~~
ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~
மதியம் முதல் மாலை 3 மணி வரை ஒன்றரை மணி நேரம் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைக்கவும், இளமையாகவும், எளிதில் வயதாகாமல் இருக்கவும்.
~~~~~~~~~~~~~~~
உங்கள் மொபைல் ஃபோன் பேட்டரியில் ஒரே ஒரு பட்டியை விட்டுவிட்டால், இனி அழைப்புகளைச் செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~
அழைப்புகளுக்குப் பதிலளிக்க உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் மூளையை நேரடியாகப் பாதிக்கும். 😳 அழைப்புகளுக்குப் பதிலளிக்க இயர்போன்களைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.
~~~~~~~~~~~~~~~
*உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:*
(1) உங்கள் இரத்த அழுத்தம்
(2) உங்கள் இரத்த சர்க்கரை.
~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:*
(1) உப்பு
(2) சர்க்கரை
(3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்
(4) குறிப்பாக வறுத்த சிவப்பு இறைச்சி
(5) பால் பொருட்கள்
(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்
~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*
(1) கீரைகள்/காய்கறிகள்
(2) பீன்ஸ்
(3) பழங்கள்
(4) கொட்டைகள்
~~~~~~
*நீங்கள் மறக்க வேண்டிய மூன்று விஷயங்கள்:*
(1) உங்கள் வயது 😮
(2) உங்கள் கடந்த காலம் 🤔
(3) உங்கள் கவலைகள்/குறைகள் 👍🏽
~~~~~~
*எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*
(1) உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்
(2) அக்கறையுள்ள குடும்பம்
(3) நேர்மறை எண்ணங்கள்
(4) ஒரு சூடான வீடு.
~~~~~~
*ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:*
(1) பாடுதல்
(2) நடனம்
(3) உண்ணாவிரதம்
(4) புன்னகை/சிரித்தல்
(5) மலையேற்றம்/உடற்பயிற்சி
(6) உங்கள் எடையைக் குறைக்கவும்.
~~~~~~
*நீங்கள் செய்ய வேண்டிய ஆறு விஷயங்கள்:*
(1) நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்
(2) நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்
(3) நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்
(4) நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்
(5) மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை காத்திருக்காதீர்கள், இல்லையெனில் வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
(6) நீங்கள் உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன் உங்களுக்கு பிரச்சனை வரும் வரை காத்திருக்காதீர்கள்.
*வெயிலால் வரும் #வியர்க்குரு குணமாக
உடம்பில் வியர்க்குரு இருந்தால் சோப்புக்கு பதிலாக சாதம் வடித்த கஞ்சியை தேய்த்துக்குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து உடலில் பூசலாம்
நுங்கு வாங்கி அதன் தோலை நீக்கி உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடவும்
சோற்றுக்கற்றாழை ஏழு முறை தண்ணீரில் கழுவி பின் உடலில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடவும்
*நன்னாரி வேர் + வெட்டி வேர் இரண்டையும் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து பின் அந்த நீரை பருகி வர உடல் சூடு தணிந்து வியர்க்குரு குணமாகும்*
சந்தனம் கட்டையை பன்னீர் ஊற்றி உரைத்து பூசலாம்
வெந்தயமும் அழகும்.*
✔️பலரும் வெந்தயம் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டும் தான் பயன்படும் என்று நினைக்கின்றனர். ஆனால், இந்த வெந்தயம் சருமத்திற்கும் பல நன்மைகளைத் தரும் என்பது தெரியுமா?
ஆம், வெந்தயத்தைக் கொண்டு சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
👉 சிறந்த கிளின்சர்:
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயற்படும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும். அதற்கு வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
👉 பொலிவான முகம்:
பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவாக்க நினைத்தால், வெந்தய ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10–15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
👉 சருமத்தை வெள்ளையாக்கும்:
வெந்தயத்தைக் கொண்டும் சருமத்தை வெள்ளையாக்கலாம். அதற்கு வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும்.
🚫 ஆனால், வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சினைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 1-–2 முறை போடுவது நல்லது.
👉 பருக்களைத் தடுக்கும்:
வெந்தயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். அதற்கு வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.
👉 அன்டி-ஏஜிங் பேக்:
முதுமையைத் தள்ளிப் போட நினைப்பவர்கள், வெந்தயத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் தெரியும் முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகள் அனைத்தும் தடுக்கப்படும்.
👉 வெயிலால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தை நீக்கும் வெயிலில் நீங்கள் அதிகம் சுற்றி, அதனால் உங்கள் சருமத்தின் நிறம் பழுப்பு நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம், கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
தெரியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எம்மை அறியாமலேயே நம்மை நோயாளி ஆக மாற்றும்
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட்பிடித்தால் – அவருக்கு அப்பழக்கம்
உண்டு என்றாலும் கூட,அது சாதாரண நேரங்களில் சிகரெட்பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல்ஆகும்.10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில்பிடித்தால் எவ்வளவு பெரியபுற்றுநோய் அபாயம்உண்டோ அவ்வளவு பெரியதீமையாகும்.
2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம்நம்மில் பலருக்கு உள்ளது.அது கெடுதியானது. காரணம்,உடனே அது காற்றினை வயிற்றுக்குள்அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும்நிலையை (Bloated withair)
உருவாக்குகிறது.எனவே,சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம்முன்பு பழம் சாப்பிடுங்கள்
அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச்
சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.🌷🌷🌷🌷
3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்(இது எவ்வளவு பேருக்குச்சாத்தியமோ தெரியாது) ஏனெனில்தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது.இது உணவில் உள்ள
புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening)செரிமானத்தைக் கஷ்டமாக்கும்வாய்ப்பு ஏராளம் உண்டு
4. சாப்பிட்டபிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt).
ஏனெனில்,அது குடலை வளைத்து தடுக்கவாய்ப்பு உண்டு.
5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும்பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது.ஏனெனில், குளிக்கும்போது உடல்மற்றும் கை, கால்களுக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச்செரிமானத்திற்குச் செல்ல வேண்டியரத்த ஓட்டம் குறையும்வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ளசெரிமான உறுப்புகளை மிகவும்பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!
6. சாப்பிட்டபின்பு நடப்பது நல்லது என்று சிலர் –ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப்போய்ச் சேர்ந்து,
உணவை நன்கு செரிக்கச் செய்வதைத்தடுத்து, இரத்த ஓட்டம் உணவின்சத்துகளை ஈர்த்து இரத்தத்தில்சேர்க்காமல் செய்யவே அந்நடைப்பழக்கம் பயன்படும். எனவே, இந்தத்தவறான பழக்கம்யாருக்காவது இருந்தால்அதனை உடனே கைவிடுவது நல்லது!
7. மதிய உணவு, இரவு உணவுக்குப்பின்னர் உடனே படுத்து உறங்கும்பழக்கம் கூடாது. உணவு உண்ட பின்அரை மணி நேரம் கழித்தே உறங்கச்செல்லவேண்டும்.
*உங்களுக்கு பிடித்தது போல உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் 💟
1. வாழ்க்கையை சாபமாக பார்க்காமல் வரமாக பாருங்கள்.
2. இடையூறுகளை தோல்விகளாக பார்க்காமல் சவால்களாக பாருங்கள்.
3. தோல்வி என்பதை உங்கள் மனம் முடிவு செய்தால் தான் சாத்தியம். உங்கள் மனம் முடிவு செய்யாதவரை தோல்வி சாத்தியமே இல்லை. தொடர்ந்து முன்னேருங்கள் வெற்றி எளிமையாகும்.
4. தோல்வியடைந்தால் இகழ்வதும், வெற்றி பெற்றால் புகழ்வதும் தான் நான்கு பேரின் வேலை இரண்டையும் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.
5. பிறரை குறை கூறுவதை நிருத்திவிட்டு உங்கள் நிறைகளை வளர்த்துக்கொள்வதில் கவனத்தைச் செலுத்துங்கள்.
6. எந்த இலக்கையும் முடியுமா? என்று கேட்காதீர்கள். ஏன் முடியாது? என்று துணிந்து செல்லுங்கள்.
7. சில நேரம் நீங்கள் தனிமையை உணர்வதாக தோன்றும் அது மாயை. பிரபஞ்சம் முழுவதுமே தொடர்புடன் தான் உள்ளது அது உங்களையும் சேர்த்து தான் என்பதை உணருங்கள்.
8. நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கவில்லையே என்று வருந்துவதை தூக்கி எரியுங்கள். நீங்கள் நினைக்காமல் இங்கே எதுவுமே நடப்பதில்லை என்கிற உண்மையை உணருங்கள்.
9. உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்து கொள்ளுங்கள்.
10. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவும்.
11. உங்களுக்கு பிடித்த இடத்தில் பிடித்த பாடலை கேட்டு அமருங்கள்.
12. தியானம், ஆசனம், மூச்சிபயிற்சி, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான சிந்தனை இதில் உங்களை எப்போதும் ஈடுபடுத்தி கொள்ளவும்.
13. ஒவ்வொருவருக்கும் ஏதாவது தனிப்பட்ட திறமை இருக்கும். அதை வளர்த்து கொள்ளவும்.
14. அமைதி, புன்னகை இதை அடிக்கடி உங்கள் வாழ்வில் உபயோகித்து வரவும்.
15. என்னதான் மற்றவர்களுக்காக நீங்கள் வாழ்ந்தாலும் உங்களுக்கு பிடித்த விசயங்களை செய்து வரவும்.
*உங்கள் வாழ்க்கை அபரிமிதமாக அமைவது உங்கள் கைகளில்
#சற்று விழிப்பாய் இருப்போம்.
#நீரழிவு நோயாளிகளின் பாதத்தில் ஏன் #புண்கள் ஏற்படுகிறது? ஏன் விரல் அல்லது காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது?
தண்ணீர் ஊற்றி வைக்கும் பாத்திரங்களை நாம் கையாளும்போது சில விடயங்களை கவனித்திருப்போம். அதாவது அதில் உள்ள கழிவுகளில் அடர்த்தி அதிகமான கழிவுகள் தண்ணீரில் கீழ் படிந்துவிடும். அடர்த்தி குறைவான கழிவுகள் மேலே மிதக்கும். அடர்த்தி குறைவான தூசிகள் மேலே மிதக்கும்.
இதே போன்றுதான் நமது உடலும் நீர்த்தொட்டி போன்றது. அதாவது இரத்தமெனும் திரவத்தால் நிறைந்தது. நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படும் காலத்தில் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற இயலாது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை மருந்துகளின் கழிவுகள் வேகமாக உடலில் சேரும். அவைகள் அடர்த்தி காரணமாக (புவிஈர்ப்பு விசையினால்) பாதங்களில் தேங்க ஆரம்பிக்கும். அங்கு இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். உணர்வு குறைபாடு ஏற்படும். நோய் எதிர்பாற்றல் இல்லாமல் போகும். புதிய செல்கள் உற்பத்தி குறைவு ஏற்படும். # புண்கள் தோன்றும். குணமாகாது. சீழ் பிடிக்கும். செல்கள் இறக்க ஆரம்பிக்கும். செல்கள் அழுகும் . துர்ணாற்றம் எடுக்கும். உடனே காலை வெட்டினால்தான் உயிரை காக்க முடியுமென்பார் மருத்துவர். ஆனால் நீரழிவு நோயாளி இதே மருத்துவரிம் மருத்துவம் பார்த்திருப்பார். சர்க்கரையையும் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார். மருத்துவர் சொன்ன மருந்துகளையெல்லாம் சாப்பிட்டிருப்பார். நாமும் காலை வெட்ட சம்மதிப்போம். ஆனாலும் நாம் தவறான மருத்துவம் பார்த்ததனாலேயே இந்த நிலமைக்கு ஆலானதை உணரமாட்டோம்.
#அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டு நாம் சரியான மருத்துவத்திற்கு திரும்புவதே அறிவுடைய செயலாகும்.
#நீரழிவு பற்றிய உண்மை அறிவே நோயை குணப்படுத்தும். அறியாமை நோயை அதிகமாக்கும்.
நீரிழிவு சம்பந்தப்பட்ட ஏதாவது மருத்துவ சந்தேகம் இருப்பின் தொடர்பு கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள்.
#உடலில்_இரத்தத்தின்அளவை_அதிகரிக்கும்அற்புத_உணவுகள்!!!
எப்படி வண்டி ஓடுவதற்கு பெட்ரோல், டீசல் போன்றவை முக்கியமோ, அதேப்போல் உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.
உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும்.
★ இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். ★
இங்கு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வாருங்கள்.
#கருப்பு_எள்ளு
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
#பேரிச்சம்_பழம்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.
#ஆப்பிள்
ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.
#வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும்.
#உலர்_திராட்சை
உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
#பீட்ரூட்
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
#வெல்லம்
வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.
தேன் தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
#நெல்லிக்காய்
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
பார்ஸ்லி பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.
#சிட்ரஸ்_பழங்கள்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
#மாதுளை
மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.
#தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது.
இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும்
வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும்.
#பச்சை_இலை_காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளான பசலை கீரை, அரைக்கீரை,
சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் #ஹீமோகுளோபின்_அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெறலாம்...
#முக்கிய குறிப்பு
உங்களுக்கு உள்ள ஏனைய பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளவும்.
உதாரணமாக நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட், வெல்லம் தவிர்க்க வேண்டும்.
இயற்கை உணவு➡️➡️ நோயில்லா வாழ்வு
*ஆரோக்கியத் தகவல்*😍
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்
2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம்.
6. அதிக அளவு காரமான மற்றும் பொரித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்.
6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்.
7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்.
8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்.
9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் சதையியை (pancreas காயப்படுத்துவதற்கு சமம்.
10. இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம் உங்கள் கண்களை பாதிக்கும் அது நீங்களே உங்கள் கண்களை காயப்படுத்துவதற்கு சமம்
11. எதிர்மறை எண்ணங்களை நினைப்பது நீங்களே உங்கள் மூளையை காயப்படுத்துவதற்கு சமம்.
12. எப்போது உங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சியை துன்பத்தை அன்பை பகிர உறவுகள் இல்லையோ அப்போது நீங்களே உங்கள் மனதை காயப்படுத்துவதற்கு சமம்
👉👉இந்த எல்லா உறுப்புகளும் எந்த சந்தையிலும் கிடைப்பதில்லை..
அதனால் உங்கள் உடலின் மீது கவனம் செலுத்த வேண்டும்.. ஆரோக்கியமான உடல் அவசியம்..👍
#சித்த #மருத்துவம்
✔️ எமது சமூகத்தில் சித்த மருத்துவம் தொடர்பான பல சந்தேகங்கள் உலவுகின்றன.
தமிழ் சமூகத்திலேயே இவ்வாறான நிலை காணப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
🔴 ஆகவேதான் இந்த பதிவு.
சித்த மருத்துவம் முற்று முழுதாக சித்தர்களுடன் தொடர்புடையது. சித்தர்களால் ஆய்வு செய்யப்பட்டு அவர்களது அனுபவத்தின் மூலமாகவும் உருவாக்கப்பட்டது.
🔵 இருப்பினும் சித்த மருத்துவம் உலகளாவிய ரீதியில் ஒரு உயர்ந்த நிலையில் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது.
❓❓அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழலாம். தற்போது ஆங்கில மருத்துவத்தில் எந்த நோயானாலும் உடனே குணமடையும் நிலையில் ஏன் நாம் இந்த தமிழ் மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்று.
❇️ அதற்கான விளக்கம்
✔️ஒரு முறையான சித்த வைத்தியரிடம் நீங்கள் நோயுடன் சென்றால் அவர் உங்களது தற்போதைய நிலைக்கு தீர்வு தரும் அதேவேளை நோய்க்கான மூல காரணம் பற்றியும் ஆராய்வார். தொடர் சிகிச்சை மூலம் நோயை முழுவதும் குணமாக்கலாம்.
✔️பக்க விளைவு இல்லை.
✔️இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருள் மூலமே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன☘️🌱🌿.
✔️உணவும் மருந்தும் ஒன்றாக அமைந்துள்ளது சித்த மருத்துவ சிறப்பாகும்.
✔️மூச்சு பயிற்சி, தியானம், யோகாசனம் போன்றவையும் மருத்துவ முறையில் உள்ளடக்கப்படுகின்றது.
✳️ மேலும் முந்தைய காலத்தில் தான் பரம்பரையாக மாத்திரம் சித்த மருத்துவம் கற்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்று 👩🔬 கூடிய z score பெறுபவர்கள் பல்கலைகழக அனுமதி பெற்று பயின்று வைத்தியர் 👩⚕️ ஆகின்றனர்.
🔰🔰 இந்த முகநூல் பக்கத்தில் மருத்துவ குறிப்புகள் பதிவு செய்யப்படும் யாராவது ஒருவராவது பயனடையும் நோக்கில்.
👩⚕️👩⚕️👩⚕️👩⚕️
#உங்களுக்கு ஏதாவது மருத்துவ ரீதியான சந்தேகம் இருந்தால் கலந்தாலோசிக்கலாம்.
தீராத பல் வலியை போக்க அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!
நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு
நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது. இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.
• பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
• பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
• ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம்.
• கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.
• ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.)
• வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்.
• மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.
• கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.
நன்றிகளும்
பிரியங்களும்.
#மகிமை #மிக்க #தாய்ப்பால்
“டொக்டர் எனது மனைவிக்கு தாய்ப்பால் வருவது குறைவு போல பிள்ளை எப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறான் என்ன பால்மா கொடுக்கலாம்?”
இது வழமையாக என்னிடம் பலர் கேட்கும் கேள்வி!
இன்றைய நவீன காலத்தில் இந்தக் கேள்வி ஒருவர் மனதில் தோன்றுவது ஒன்றும் புதிரான விடயமல்ல. எனவே தாய்ப்பாலின் சிறப்பு பற்றி இந்த கட்டுரையில் ஆராயலாம் என்று நினைக்கிறேன்.
பிறந்த சிசுவானது தாய்ப்பாலைத் தாயிடமிருந்து பெறுவதற்கான அனைத்து உரிமைகளுக்கும் உரியதாகின்றது. இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும்.
எனவே தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாத காலத்துக்கு தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்தல் வேண்டும்.
மேலும் கண்டிப்பாக ஆறு (6) மாத முடிவில் தாய்ப்பாலுடன் சேர்த்து திண்ம உணவுகளையும் ஆரம்பித்தல் வேண்டும். இங்கு சிலவேளைகளில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் நான்கு (4) மாத முடிவில் தாய்ப்பாலுடன் திண்ம உணவுகளை தொடங்கலாம்.
தாய்ப்பால் குழந்தைக்கு முதல் ஆறு மாதத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது. குழந்தை பிறந்ததும் முதல் 3 தொடக்கம் 5 நாட்களுக்குள் சுரக்கப்படும் பாலானது கொலஸ்ட்ரம் என அழைக்கப்படும். அது அளவில் சிறியதாகவும், மஞ்சள் நிறத்திலும் இருந்தாலும் குழந்தைக்கு தேவையான அளவு பாலை கொண்டிருக்கும், குறிப்பாக புதிதாகப் பிறந்த சிசுவின் நிர்ப்பீடனத் தொகுதியை மேம்படுத்துவதற்கு அது உதவும்.
இன்று இலங்கையில் பெரும்பாலான தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பாலே முதன்மையான உணவாகக் கொடுக்கின்றனர் என்பது உண்மையிலேயே நாம் பெருமைப்படக் கூடிய விடயமாகும்.
தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக குழந்தைக்கு உகந்த ஊட்டச்சத்தும் வளர்ச்சிக்குமான அனைத்து அம்சங்களும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது, குறிப்பாக மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
மேலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது தாய்ப்பாலூட்டல் மூலம் வழங்கப்படுகின்றது. அதாவது தாயிடம் இருக்கும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியானது குழந்தைக்கு நேரடியாக கொடுக்கப்படுகின்றது, இதனால் வாந்திபேதி, சுவாச சம்பந்தமான நோய்கள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றது. குறிப்பாக குழந்தை பிறந்த பின் முதல் 3 தொடக்கம் 5 நாட்களில் வரும் பாலானது (கொலஸ்ட்ரம்) எதிர்ப்பு சக்தி சக்தியை சிசுவுக்கு அதிகரிக்கும்.
மேலும் தாய்ப்பாலூட்டல் ஆனது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை, புற்றுநோய்கள், நீரழிவு மற்றும் அதிக உடல் பருமன் போன்ற நோய்களிலிருந்து தடுக்கின்றது.
தாய்ப்பாலானது குழந்தையால் இலகுவாக அகத்துறிஞ்சப்பட கூடியதாக உள்ளதால் இதுவே முதல் ஆறு மாத காலத்திற்கு குழந்தைக்குரிய சிறப்பான போசாக்கு ஆகும்.
தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மாருக்கு மார்பக புற்றுநோய், சூலகப் புற்றுநோய், நீரிழிவு மற்றும் குழந்தை பிறப்பின் பின் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து பாதுகாக்கின்றது.
அதை விட முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் இடையில் ஒரு உணர்வு மிக்க பிணைப்பை இது ஏற்படுத்துகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள்
தாய்ப்பால் ஊட்டுவது ஒரு இயற்கையான விடயம் என்றாலும் அதை சரியான முறையில் கொடுக்காத போது சிலவேளைகளில் அந்த முயற்சி தோல்வி அடையலாம். குறிப்பாக தங்களது முதல் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மாருக்கு அது ஒரு சவாலான விடயமே.
உண்மையில் தாய்மாருக்கு, தாய்ப்பாலின் சிறப்பு பற்றியும் அதன் தேவையையும் கர்ப்ப காலத்தில் இருந்தே போதித்தல் வேண்டும்.
தாய்ப்பாலூட்டல் ஆனது வெற்றி பெறுவதற்கு முறையான இணைப்பும் நிலைப்படுத்தலும் முக்கியமானதாகும்.
இதில் சிக்கல்கள் உள்ள தாய்மார்கள் வைத்தியசாலையில் உள்ள தாய்ப்பாலூட்டல் முகாமைத்துவ நிலையங்களிலோ அல்லது தங்களது midwife இடமோ கேட்டு அறிந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாய்ப்பால் முகாமைத்துவ நிலைய தொலைபேசி இலக்கம் 065 2222261 – 162
ஏற்கனவே தாய்ப்பால் கொடுத்து அனுபவம் உள்ள தாய்மாருடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதனால் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பது?
தாய்ப்பால் ஒரு நிறையுணவு என்பதால் குழந்தைக்கு பசி எடுக்கும் போது தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். குழந்தை பசியுடன் இருப்பது என்பதை பின்வரும் காரணிகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.
1. குழந்தை நித்திரையில் இருந்து எழும்பி, கண்ணைத் திறந்து, விழிப்பாக இருந்து வாயை அகலத் திறந்து கொட்டாவி விடும் போது.
2. குழந்தை தனது கையை மடித்து வாயில் வைத்து உறிஞ்சும்போது.
3. மேற்கூறிய அறிகுறிகளை அவதானிக்க தவறும் போது குழந்தை பசியால் அழும்.
குறிப்பாக இங்கு தாய்மார்கள் கவனிக்க வேண்டியது குழந்தை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் தூங்கும் ஆயின் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் ஊட்ட வேண்டும், முக்கியமாக இரவு வேளைகளில்.
குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்துள்ளது என்று அறிவது எப்படி?
குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்த பின்பு அது மார்பகத்திலிருந்து தானாகவே வாயை எடுக்கும். இங்கு குழந்தை தாய்ப்பால் குடிக்கும் நேரம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும்.
நன்றாக தாய்ப்பால் குடித்த குழந்தை மகிழ்ச்சியாக தாயுடன் விளையாடும் மற்றும் நன்றாக தூங்கிவிடும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மாருக்கு மார்பகத்தின் பாரம் குறைவது போன்ற உணர்வு ஏற்படும் மேலும் மற்றைய மார்பகத்திலிருந்து சிறிதளவு பால் வெளியேறும். இவையெல்லாம் தாய்ப்பாலூட்டல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதற்குரிய அறிகுறிகள் ஆகும்.
தாய்ப்பால் ஊட்டும் போது குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா?
தாய்ப்பாலானது குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும் கனியுப்புக்களையும் கொண்டிருப்பதால் முதல் ஆறு மாத காலத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு எதையும் (தண்ணீர் உட்பட) கொடுக்கத் தேவையில்லை
தாய்ப்பாலுக்குப் பதிலாக பால்மா வகைகளை குழந்தைக்கு கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள்!
பால்மா கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையான உணர்வுபூர்வமான இணைப்பில் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தையானது அடிக்கடி வாந்திபேதி, சுவாச நோய்கள், காது நோய்கள் போன்ற தொற்று நோய்க்கு உட்படும். குறைந்தளவான மற்றும் அதிகளவு ஐதாக்கப்பட்ட பால்மா மூலம் குழந்தைக்கு மந்த போசனை ஏற்படலாம் அல்லது அதிகளவு பால் கொடுப்பதால் உடல் பருமன் அதிகரித்து அதன் மூலம் பிற்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிக அளவு ஏற்படும். குழந்தையின் புத்திக் கூர்மையில் பாதிப்புக்கள் ஏற்படலாம். முக்கியமாக பெற்றோர்களுக்கு மேலதிக செலவீனங்களை ஏற்படுத்தும்.
பொதுவான மூடநம்பிக்கைகள்
தாய்மார் நோய்வாய் பட்டிருக்கும் போது தாய்ப்பால் ஊட்டக் கூடாது! அவ்வாறு இல்லை தாய்மார் நோயுற்றிருக்கும் போதும் தாய்ப்பாலூட்டலாம்.
மார்பகங்கள் வீக்கம் அடைந்து இருக்கும் போது தாய்ப்பால் ஊட்ட கூடாது! மார்பகங்கள் வீக்கம் அடைந்தால் கண்டிப்பாக பாலூட்ட வேண்டும் அவ்வாறு இல்லையாயின் மார்பகத்தில் சிதழ் கட்டிகள் ஏற்படலாம்.
அதிக வெப்பமான காலங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து தண்ணீரும் கொடுத்தல் வேண்டும்! இல்லை தாய்ப்பாலானது போதியளவு நீரை கொண்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பதால் எனது உடல் கட்டமைப்பு பாதிப்படையும்! இல்லை தாய்ப்பால் கொடுப்பது கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மேலதிக உடல் பருமனை குறைக்க உதவும்.
சிறிய மார்பகங்கள் உடைய தாய்மார் மற்றும் முலைக்காம்பு தட்டையாக உள்ள தாய்மார் பாலூட்டுவது கடினம்! அவ்வாறு இல்லை குழந்தையானது எந்த வகையான மார்பகத்திலும் தாய்ப்பால் குடிக்க இசைவாக்கம் அடைந்தது.
எனவே இவ்வாறான மகிமைகளை கொண்ட தாய்ப்பாலை தங்களது குழந்தைக்கு கொடுப்பதை உறுதி செய்வதன் மூலம் வளமானதும் புத்தி கூர்மையும் உடைய சமுதாயத்தை உருவாக்குவோம்!!
#இருதய #ஓட்டை #அடைக்கும் #வில்வ #பழம்:
வில்வம் என்றால் உயிர் என்று பொருள். உயிரைப் பாதுகாக்கக்கூடிய பிராணசத்து வில்வத்தில் அதிகம் உண்டு. வில்வ மரத்தில் தான் ஈஸ்வரன் உருவானதாக சிதம்பர ரகசியம் சொல்கிறது. தத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ருத்திரன் குடி கொண்டிருப்பது கழுத்துக்கு மேல் பாகம். அது பிராண வாயு இருப்பிடம். உடலிலுள்ள பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவிதமான நீராவி முறையில் இயங்கக்கூடியது மனித உடலாகும்.
பிராணன் தலையிலும், அபானன் குதப்பையிலும் (மலப்பை, நீர்ப்பை) ஒழுங்காகச் செயல்பட்டால்தான் உடலே ஒழுங்காகச் செயல்படும். பிராண சத்து அதிகமாக வில்வத்தில் உள்ளது. அதன் சுவை கார்ப்பு பொருந்திய கசப்புத் தன்மையாகும். வில்வத்தில் பத்து வகைகள் உள்ளன. அவை சாதா வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபத்திரி, நவவில்வம், தசவில்வம், கற்பூர வில்வம் ஆகியவை ஆகும். மர்மெலாஸ். இதன் தாவரவியல் பெயர் ஆக்லெமர்மெலாஸ்.
மனித உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நரம்புகளின் இரத்த அலைகளில் உருவாகும் ஏற்ற இறக்கங்களைச் சரிப்படுத்தி உடலை ஆரோக்கியமாகவும் மேனியை அழகாகவும் இருக்கச் செய்கிறது. இதனுடைய கொழுந்து பெண்களுக்கு வரும் மாத கால வயிற்று வலிக்கு சிறந்தது. இந்த நாளில் மூன்று நாள் முதல் ஐந்து நாள் வரை தினமும் காலையில் குளித்த பிறகு ஒரு சுண்டைக்காய் அளவு வில்வக் கொழுந்தை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் மாதகால வயிற்று வலி நீங்கி "கரு" உண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது.
வில்வ இலை ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுவைச் சேர்க்கும். ஏழு நாளைக்கு வில்வ இலையை காலையில் அரைத்து சுண்டைக்காய் அளவு பாலில் குடிக்க நீர்த்துப்போய் உள்ள விந்து கெட்டிப்படுவதோடு விந்துவில் உயிரணுவைச் சேர்க்கும். ஈஸ்வரன் கோயிலில் விபூதியாகக் கொடுப்பது சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்பட்டது ஆகும். ஆன்மீக மருந்தாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வில்வ பழத்தில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த பழத்தை ஓடு நீக்காமல் பாதியாக உடைத்து வெள்ளைத் துணியைச் சுற்றி விட்டு அதன் மேல் களிமண் பூசி நன்றாக காயவைத்து இருபது வரட்டியில் புடம் வைத்தால் நல்ல வெண்மையான பஸ்பமாகும். இந்த பஸ்பம்தான் ஈஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதி ஆகும். அப்படிக் கொடுக்கப்படும் விபூதிக்கும் மற்ற விபூதிக்கும் வேறுபாடு உண்டு.
உடல் இந்த விபூதியை மன அமைதி, அமைதி இல்லாதவர்கள் சிட்டிகை வாயில் போட்டால் நாக்கிலுள்ள புளி, காரம், இனிப்பு, கசப்பு ஆகிய நான்கு விதமான சுவைகளை சம நிலைக்கு கொண்டு வந்து (தைராய்டு) போதகத்தை சமப்படுத்துவதால் உமிழ்நீர் மிகுதியாக சுரக்கிறது. உமிழ்நீர் மிகுதியாகச் சுரந்தால் உடலிலுள்ள இருபத்தேழு இரசாயன மாற்றமும் தன் நிலைக்கு வரும். அவ்வாறு சுரந்தால் உடல் குற்றம் நீங்கும். எனவே தான் நாம் கோவிலுக்கு சென்றால் மனம் திருப்தியாக உள்ளது. இந்த நிலை கோவிலிலுள்ள சிலையால் அல்ல. கோவிலில் கொடுக்கப்பட்ட உண்டாகிறது. சித்த மருந்தால்
இந்த விபூதியை வாயில் போட்டு, நெற்றியிலிட்டு கையில் வைத்து தேய்த்துத் தட்டு என்று கூறுகிறோம். வாயில் போட்ட உடனே ஒருவருக்கு இனிப்பாகவும், மற்றொருவருக்கு காரமாகவும் இன்னொருவருக்கு புளிப்பாகவும் தோன்றும். இதில் எந்த சுவை' தோன்றுகிறதோ அந்தச் சுவை உள்ள உணவை உட்கொண்டால் உடலில் உள்ள நோய் தீரும். நெற்றியில் பூசும் திருநீறு திருநீறாகவே இருந்தால் கருமத்தில் நோயில்லை. அந்த விபூதி நீல நிறமாகவோ, அல்லது கருமை நிறமாகவோ அல்லது வெண்மை நிறமாகவோ மாறுமானால் நிறத்திற்கு ஏற்றாற் போல் நோய்களைக் குறிக்கும் என்பது சித்த மருத்துவம்.
இந்த விபூதி வெண்மையாக மாறினால் கபநோய் என்றும், நீல நிறமாக மாறினால் பித்தவாத நோய் என்றும் கூறுகிறோம். இதை உணர்ந்து எந்த நிறம் வருகிறதோ அதற்கு ஏற்றாற்போல் மருந்து சாப்பிட்டால் நோய்கள் நீங்கும். அந்த விபூதியை கையில் தடவி தட்டு என்று கூறினால் கையில் தடவிவிட்டு ஒவ்வொருவரும் முகர்ந்து பார்த்தால் ஒருவிதமான வாசனை தோன்றும். கற்பூரம், சாம்பிராணி, துர் வாடை, விபூதி வாசனை வரும். விபூதி வாசனை வந்தால் நோயில்லை என்றும், கற்பூரம் வாசனை வந்தால் வாத நோய் என்றும் சாம்பிராணி வாசனை வந்தால் பித்தம் என்றும், துர்வாடை வந்தால் கபநோய் என்றும் அறியலாம். இப்படி வரக்காரணம் உடலில் பிராணன் இல்லாததும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும் ஆகும். இந்த விபூதியைப் பூசிய உடனே உடலில் நோய் உள்ளதா இல்லையா என்று கண்டுகொள்ளும் வகையில் கோவிலில் இதைப் பயன்படுத்தினர்.
ஆனால், இன்று உருவாக்கப்படும் விபூதியின் நிலை வேறு. மாட்டுச்சாணம், நெல், உமி, சாம்பல், செய்யப்பட்ட களிமண்ணால் சாம்பலும் இன்று விபூதியாகி, வாசனை திரவியங்கள் கலந்து கொடுக்கப்படுவதால் அதிலிருந்து எந்தவித நோயும் கணிக்க முடியாது. இது வியாபாரத்தற்கு உகந்ததே தவிர மருத்துவத்திற்கு ஏற்றதல்ல. இம்மருத்துவ குணம் இல்லாத விபூதியைப் பூசினால் தோல் நோய்களை உண்டாக்கிக் கொள்வதற்கு நாமே காரணமாக அமைந்து விடுகிறோம்.
பஞ்சபூத தெய்வ விருட்சங்கள் ஐந்து. இதில் வில்வம்தான் முதலிடம் பெறுகிறது. இதைச் சாப்பிட்டால் தான் நோய் தீரும் என்பதில்லை. இதன் நிழலில் வந்து ஐந்து நிமிடம் இருந்தாலே பிராண வாயுவைச் சமன் செய்யும். இதனால்தான் இவை கோவில்களில் வளர்க்கப்படுகின்றன.
மா, பலா, வாழை என இலக்கியத்தில் குறிப்பிடும் "மா" மாம்பழத்தை குறிக்கும். ஆனால், சித்த மருத்துவத்தில் குறிப்பிடும் "மா" என்பது மா வில்வத்தைக் குறிக்கும். இதன் காய் பூசணிக்காய் அளவு இருக்கும். இதில் இரண்டு லிட்டர் தேன் இருக்கும். இந்த "மா"வில் ஆயிரம் காய்க்கு ஒரு காயில்தான் விதை இருக்கும். உலகில் பல மரங்கள் சில வருடங்கள்தான் உயிருடன் இருக்கும். பிறகு பட்டுப்போய் விடும். ஆனால் வில்வமும் தாளிப்பனையும் ஆயிரம் வருடங்கள் உயிருடன் இருக்கும். இவைதான் கோவிலில் வைக்கப்படும். தாளிப்பனை குலைவிட ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
சாதா வில்வ பழத்தில் சித்த பிரமையைப் போக்கலாம். ஐந்து பழத்தை நெருப்பில் போட்டு அது வெந்து வெடிக்கும் சமயத்தில் எடுத்து உடைத்து உள்ளே உள்ள சதையைத் தலையில் சூடு பொறுக்கும் அளவு இரவில் இதமாக வைத்து கட்டினால் ஏழு நாளில் சித்தப்பிரமை (பைத்தியம்) குணமாகும். மேலும் இதனை மருத்துவ முறையில் பயன்படுத்தினால் பால்வினை நோய்கள் அனைத்தும் ஆண், பெண் இரு பாலருக்கும் மூன்றே நாளில் பரிபூரண குணமாகும்.
வில்வ பழத்தில் சர்பத் செய்தால் அந்த சர்பத் இருதய நோய்க்கும், இருதய ஓட்டையை அடைக்கவும் கல்லீரல், கணைய நோய்களுக்கும் பயன்படும்.
இதைப் பயன்படுத்தினால் மனிதனுக்கு வரக்கூடிய 4 ஆயிரத்து 448 விதமான நோய்களில் தக்க அனுமானத்தில் கொடுக்க ஆயிரம் நோய்களைக் குணமாக்கவல்லது வில்வம். இந்த வில்வத்தின் பிசினைப் பொடி செய்து பெயின்டில் கலந்து பயன்படுத்தினால் என்றைக்கும் நிறம் மாறாது; அழியவும் செய்யாது. கோவிலில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து வில்வத்தின் பிராணன் வெளிப்பட்டு கோவிலுக்குச் செல்பவர்கள் நலன் அடைவர். இதனால்தான் புராதன கோவில்களில் இந்த வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
மறைந்துபோகும் மூலிகைகளும் மறந்துபோன மருந்துகளும் நூலிலிருந்து
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Batticaloa
Opening Hours
Monday | 09:00 - 12:00 |
16:00 - 20:00 | |
Tuesday | 09:00 - 12:00 |
16:00 - 20:00 | |
Wednesday | 09:00 - 12:00 |
16:00 - 20:00 | |
Thursday | 09:00 - 12:00 |
16:00 - 20:00 | |
Friday | 09:00 - 12:00 |
16:00 - 20:00 | |
Saturday | 09:00 - 12:00 |
16:00 - 20:00 | |
Sunday | 09:00 - 12:00 |
119A, Murugan Kovil Road, Thiraimadu
Batticaloa, 30000
Natural way to look young forever
Batticaloa
Wound healing refers to a living organism's replacement of destroyed or damaged tissue by newly prod
No. 63, Station Road
Batticaloa, 30000
Service in Love of All Mankind
No 14, New Road, Arasady
Batticaloa
Distributors of Surgical Consumables and Instruments
#07, 08, Meera Shopping Complex, Main Street, Kattankudy/01
Batticaloa, 30100
Buy & Sale
Batticaloa
A collection of curious and creative individuals at the Faculty of Healthcare Sciences of Eastern Un
Bar Road
Batticaloa, 30000
Ancient Indigenous Wisdom for Healing, Rejuvenation & Prevention. Visit us for a healthier life
Batticaloa
Medical updatesDiseases and preventionHerbal products producing methods and saleMedical visits
Main Street, KODDAIKALLAR 01
Batticaloa, BATTICALOA
Physiotherapy and Rehabilitation clinic.